முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டு
தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரியர் மற் றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - | பணியிடங்கள் மற்றும் 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 பணியிடங்களை நிரப்புவதாக கடந்த பிப்.11 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 25 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் , எழுத்துத் தேர்வு ஜூன் 26 , 27 ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த பிப் . 26 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக முதுநிலை ஆசிரியர் தேர்வு தேதி வெளியிடப்பட்டதால் , தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என முதுநிலை பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். இதற்காக மார்ச் 1 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முதுநிலை பட்டதாரிகள் தயாராகினர். ஆனால் தொழில்நுட்