நமது அன்றாட வாழ்க்கையில் கணக்கில் அடங்காத பூனைக் கதைகள் இருக்கும். முதலில் புத்த அறிவாலயம் ஒன்றில் வசித்த ஒரு பூனைக் கதை ஒன்றைப் படிக்கலாம். தினந்தோறும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குருவும் அவருடைய மாணவர்களும், அறிவாலயத்தின் தங்கும் விடுதியிலிருன்து புறப்பட்டு தியானம் செய்ய, அங்குள்ள தியானமண்டபத்திற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் அங்குள்ள சமையல் அறையில் வளர்ந்த பூனை ஒன்று, பெரியதாக வளர்ந்து அவ்வப்பொழுது பெரியதாக சத்தம் எழுப்பத் தொடங்கியது. இந்தப் பூனை போடும் சப்தம் தியானத்திற்கு இடையூறு செய்யவே, குரு, அப்பூனையை தொலைவில் உள்ள மரத்தில் கட்ட தன் மாணவன் ஒருவனுக்கு உத்திரவிட்டார். அடுத்த நாள் முதல், தியானத்திற்கு செல்வதற்கு முன், அந்தப் பூனையைப் பிடித்து தொலைவில் இருந்த ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்ட முடிவு செய்தார்கள். (தியானநேரம் முடிந்த பின் பூனை அவிழ்த்து விடப்படும்). அன்று முதல் தியானத்திற்கு செல்லும் முன்பே பூனையை ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்டுவது வழக்கமாகிவிட்டது. மாதங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டோடின. அந்த குருவும் மறைந்தார். பூனையும் இறந்தது. சில மாணவர்கள் குரு ஆனார்கள். பு...