Skip to main content

Posts

Showing posts from September, 2018

கடவுள்..

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.. 'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்.. குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்.. மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்.. ரொம்ப உயரம் போலவே... ஏற முடியுமா என்னால்... மலையைச் சுற்றிலும் பல வழிகள்.. மேலே போவதற்கு... அமைதியான வழி.. ஆழ்ந்த தியானத்தி்ன் வழி.. சாஸ்திர வழி... சம்பிரதாய வழி.. மந்திர வழி.. தந்திர வழி.. கட்டண வழி.. கடின வழி... சுலப வழி... குறுக்கு வழி.. துரித வழி... சிபாரிசு வழி... பொது வழி.. பழைய வழி.. புதிய வழி.. இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா... அடேயப்பா....எத்தனை வழிகள்... ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி.. கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்.. 'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...' ஒதுக்கினர் சிலர்.. 'நான் கூட்டிப் போகிறேன் வா... கட்டணம் தேவையில்லை.. என் வழியி்ல் ஏறினால் போதும்.. எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...' என கை பிடித்து இழுத்தனர் சிலர்... 'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் உனக்குப்பதில் நான் போ

சித்தர்களின் குரல்..

வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் வசனம் தான் இது: “பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவே கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன். எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....?? குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்… அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம்

நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண்  பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக் கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி  இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "பேருந்து முழுவதும் நிறைய இடம் காலியாக உள்ளதை கூறுங்கள்" என  ஆதங்கப்பட்டார். அந்த பெண் புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக  பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! *"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"* இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,  வாய்ச்சண்டை போடுவ

TODAY'S THOUGHT..

முதுமை + தனிமை =              *கொடுமை* °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...* *ஓலாவும், ஊபரும்...* நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்* போட்டு களைப்படைய செய்கின்றனர்... *நான்கு

படித்ததில் பிடித்தது..

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்...! *கடவுள் :* " வா மகனே...! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது...! " *மனிதன் :* " இப்பவேவா ? இவ்வளவு சீக்கிரமாகவா ? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது ? "  *கடவுள் :* " மன்னித்துவிடு மகனே...! உன்னை கொண்டு செல்வதற்கான நேரம் இது...! " *மனிதன் :* " அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? " *கடவுள் :* " உன்னுடைய உடைமைகள்...! " *மனிதன் :* " என்னுடைய உடைமைகளா...! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் இருக்கின்றனவா ? " *கடவுள் :* " நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது...! " *மனிதன் :* " அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? " *கடவுள் :* " அவை காலத்தின் கோலம்...! " *மனிதன் :* " என்னுடைய திறமைகளா ? " *கடவுள் :* " அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! " *மனிதன் :* " அப்பட

தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?

அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ். இனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? “குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது? 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ். இந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்

TODAY'S THOUGHT..

அறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரை சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது!! "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார்" போப்பாண்டவர் சொன்னார், அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். என்ன கேட்டாலும் தருவீர்களா என்று கேட்டார் அண்ணா. கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏ