உலகில் எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள்.. அந்த நாட்டின் தேசபக்தி என்பது இன்னொரு நாட்டின் மீதான பகையால் உருவாக்கப்பட்டதாக இருக்காது .. இதில் விதிவிலக்காக இருப்பது இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் தான்.. இந்தியா உருவாகும் போது முன்னூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை சேர்த்து தான் இந்திய ஒன்றியம் உருவானது. அதாவது இந்திய ஒன்றியம் என்பது சேர்க்கப்பட்ட கூட்டம் தான், தானாக சேர்ந்த கூட்டம் அல்ல. இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு இனம், மொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை இங்கு தேச பக்தியில் ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பாகிஸ்தான் மீதான பகையும் உதவுகிறது. பாகிஸ்தான் மக்களின் தேச பக்தியும் இப்படியே தான் உருவாக்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்த பகை உருவாக்கப்பட்டது. இந்த பகை தான் இரு நாடுகளின் தேச பக்தியை இன்று வரை வளர்த்து கொண்டிருக்கிறது ... இதில் குறிப்பிடதக்க அம்சம் எதுவெனில் இரு நாட்டிலும் எதிர் எதிராக பிரிந்து போன இரண்டு மதங்கள் பெருபான்மை சமூகமாக இருப்பது தேசபக்திக்கு இன்னும் கூடுதல் பலம் . இதனால் தான் 1000 - க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இ