Skip to main content

Posts

Showing posts from March, 2020

கர்ம வினை..

 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.          ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக* *அமைவது* ஏன் ?       நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்  ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.    அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.     சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.        சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக  நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.  இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*  எனப்படுகிறது.        *சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.  சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.       சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.* சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.       பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.       கனவில் கூட காண முடியாத  பல *

2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம்

2020-21 நிதியாண்டு தொடங்கும்  மாதம் மாற்றம்: 2020 ஏப்ரல் 1-க்கு பதிலாக ஜுலை 1-ல் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு.. at  March

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த விட்டமின்கள், தாதுப்பொருட்கள், இரும்பு மற்றும் நார்சத்து அடங்கிய கனி, காய்கறிகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கூறி கடைகளை திறந்து வைத்திருந்தாலும், அதை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் லத்தியால் அடித்து வாங்க விடாமல் தடுப்பது  மனிதாபிமானமற்ற செயல். இதேபோல தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வந்தவர்கள் என பலரும் உணவு, இருப்பிடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  அத்தியாவசிய தேவைகளின்றி சட்டத்தை மீறி நடமாடுபவர்களை போலீசார் கைது செய்யலாமேயன்றி அவர்களை தண்டிக்கக்கூடாது. எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காரணமின்றி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தக்கூடாது என்று தமிழக உள்துறை மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவி

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்..!

காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும். காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு  இருக்குதா..???  எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க.  யாராவது கேக்குறாங்களா..???  பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும் பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம் கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை...  உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்... தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்...  இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம் பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்  வகை வகையா ரசம் வைக்கலாம்   நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம்.  சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ் னு பெரிய லிஸ்ட்டே போடலாம்  காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முத

ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா: எப்படி தெரியுமா?

ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைத்துள்ளனர். ஆனால் தென்கொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பள்ளி கல்லூரிகள் மட்டுமே மூடப்பட்டன. திரையரங்குகள், மால்கள், கடைகள் உள்பட அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன இதுவரை தென்கொரியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர்கள் பாதிக்கபப்ட்டு இருந்தாலும் அவர்களில்5000 பேர் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும் இதுவரை அங்கு 144 பேர் மட்டுமே பலியாகி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எப்படி சாத்தியமாயிற்று? கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எங்கெங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அவர்கள் யார் யாரெல்லாம் தொட்டார்கள் என்பதையும் கண்டுபிடித்து உடனடியாக அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் உடனுக்குடன் யார் யாருக்கு கொரோனா இருக்கிறது என்பதை உறுதி செய்து அவ

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள் தள்ளிவைப்பா?

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால், உலகம் முழுவதும், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பள்ளிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் மற்றும் தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கான தேர்வுகளையும், திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏப்., 14 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதன் பிறகும், இயல்பு நிலை திரும்புமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு, ஏப்ரலில் முடிந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல, தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே, பருவ தேர்வுகளை, மே மாதத்திற்கு தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள்,

விதுரர்..

👌👌😌🥰   சந்தர்ப்பம் பார்த்து யுதிஷ்டிரரிடம் கேள்வி கேட்டார்"மகனே, ஒரு வேளை காட்டில் 🔥நெருப்புப் பற்றி எரிந்தால் எந்த மிருகம் மட்டும் பாதுகாப்போடு இருக்கும்". யுதிஷ்டிரர் பதில் சொன்னார்" தந்தையே, காட்டில் நெருப்புப்🔥 பற்றிக் கொண்டால் சுயேச்சையாகவும், பயமற்றும் சுற்றித் திரியக் கூடிய சிங்கம்,🐅🐆🐘🦌 புலி ,சிறுத்தை,யானை மற்றும் மிக வேகமாக ஓடக் கூடிய மான் போன்ற அனைத்து மிருகங்களும் காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி விடும்.  ஆனால் வளைகளில் வசிக்கும் எலிகள்🐀🐀🐀 மாத்திரம் அனல் தணிந்த பிறகு வெளியில் வந்து அமைதி நிறைந்த வாழ்க்கை வாழும்...!" மகனே ,யுதிஷ்டிரா உன் பதிலால் நான் கவலையற்றவன் ஆனேன். செல், பாதுகாப்பாக இரு, புகழுடன் இரு என்று ஆசீர்வாதம் கொடுத்தார். வைரஸ் கிருமி கூட ஒரு பயங்கர நெருப்புக்கு சமமாக உள்ளது.தொடர்ந்து அனைத்து எல்லையையும் தாண்டி விட்டது.  இப்போது தன்னுடைய வீட்டிற்கு🏡 உள்ளேயே யார் இருப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் மேலும் உலகில் கவலையற்ற மகாராஜாவாக👸🤴🏼 வாழ்வார்கள்.  இது ஒரு லட்சுமண் ரேகை தாண்டாதீர். தாண்டினால் சோக வனம் 🌳தான். 14 ஆண்டுக

"ஆல்பாஸ்" பட்டியல் தயாாிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, ஆசிரியர்கள் தேர்ச்சி பட்டியல் தயார்படுத்தி வைக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு முதற்கட்டமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.தற்போது, ஏப்., 14ம் தேதி வரை தேசிய அளவில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு தேர்வும், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முற்றிலுமாகவும் நடத்தப்படவில்லை. தற்போது, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பின்பற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வகுப்பு மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அவர்களுக்கான மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி

இதுவும் கடந்து போகும்..

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த  வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை *வெற்றிகள்* ,  எத்தனை *தோல்விகள்* ,  எத்தனை *மகிழ்ச்சிகள்* ,  எத்தனை *துக்கங்கள்* ... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை *நண்பர்கள்* ,  எத்தனை *பகைவர்கள்* ,  எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.  ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.  அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். **வெற்றிகள்* கிடைக்கும் போது., *"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது. *தோல்விகள் தழுவும் போது.., *"#இதுவும்

நீட் தேர்வு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரி தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிஏ தேர்வுக்கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளிவந்தன என்பதை பார்த்தோம் இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி நடக்கவிருந்த நீட் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் இன்னும் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னரே ஹால் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையாக இருங்க

சென்னை: ஏப்ரல் மாதம் மீனம் மாதமும் மேஷம் மாதமும் இணைந்த மாதம். சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார். ஏப்ரல் மாதம் மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறும் மாதம். இந்த மாதம் மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது. சிலருக்கு சோதனைகளை தரப்போகிறது. உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து அனைத்து ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். ந

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளி

வைட்டமின் சி நிறைந்த பப்பாளி நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகும். பப்பாளியில் உங்கள் தினசரி டோஸ் வைட்டமின் சி 200%-க்கும் அதிகமாக உள்ளது, இது தவிர, பழத்தில் வைட்டமின்கள் கி, ஙி மற்றும் ரி ஆகியவை நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வில், பழத்தில் உள்ள லைகோபீன் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதய நோய்களைத் தடுக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது.

மெளனம் பழகு..

எங்கே எல்லாம் உனது உண்மைகுணம் முதலில் உதாசீனப் படுத்தப்படுகிறதோ அங்கேயெல்லாம் - *மெளனம் பழகு* நன்கு பழகி உறவாடியதில் யார் உன்னை வெறுத்து ஒதுக்கினாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாதிருக்க- *மெளனம் பழகு* ஊரறிய செய்தது குற்றம் எனப் புரிந்து கொண்டும் புரியாதது போல் இருப்பவரிடம் - *மெளனம் பழகு* பிறருக்கு உன்மூலம் செய்த சிறு நன்றியையும் எச்சூழ்நிலையிலும் சொல்லிக்காட்டாமல் இருக்க - *மௌனம் பழகு* அடுத்த நொடி வாழ வழியில்லாமல் போகும் நிலைவரினும் , எல்லாம் இருந்தும் மனமுவந்து கொடுக்கும் மனநிலை இல்லாதவரிடம் உதவி கேட்டிட - *மெளனம் பழகு* நன்கு உண்மையாய் பழகியிருந்தும் பின்னாளில் உண்மையை மறைத்துப் பொய்யாகப் பேசுபவரிடம் ஏனென்று கேட்காமல் இருக்க - *மெளனம் பழகு* அன்பை விதைத்திட *மெளனம் பழகு* அன்பைப் பெற்றிட *மெளனம் பழகு* அகிம்சையை வளர்த்திட *மெளனம் பழகு* 

ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுரை!

மாணவர்களுக்கான கல்வி திட்ட பணி களை , வீட்டில் இருந்தே ஆசிரியர்கள் மேற் கொள்ளலாம் ' என , பள்ளி கல்வி இயக்குநர் , கண்ணப்பன் கூறியுள்ளார் . இது குறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்களுக்கு , அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : இந்த இக்கட்டான காலகட்டத்தில் , வீட்டில் ஆசிரியர்களும் , கல்வி துறை பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . வீட்டில் இருக் கும் போது , கல்வி சம்பந்தப்பட்ட பணிகளை யும் , பாடத்திட்டம் குறித்த முன்னேற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் . வரும் கல்வி ஆண்டில் , கற்றல் , கற்பித்தல் தொடர்பான திட்டங்கள் வகுக்கலாம் . மாணவ - மாணவியருக்கு பிடித்தமான நடனம் , ஓவியம் வரைதல் , பராம்பரிய உணவு சமைத்தல் , வண் ணம் தீட்டுதல் , நாடகம் போன்றவற்றுக்கான கருத்துகளை உருவாக்கலாம் . அரசின் உத்தரவுப் படி , அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்பு கள் , உரிய நேரத்தில் வழங்கப்படும் . இவ்வாறு , அவர் கூறியுள்ளார் .

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவு பொருள்கள்

நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன. நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே. பாதாம்: இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும். இஞ்சி: இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். பூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அர

கொரோனாவில் மறைந்துள்ள கணிதம்..

ஒரு சிறிய கதை.. ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தாராம். அவன் அறிவிலும் வீரத்திலும் மிக சிறந்து விளங்கி ஆட்சி செய்தார். ஆட்சி சிறப்பாக சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அவரது அமைச்சர்கள் உதவியுடன் அந்த பிரச்சனையை தீர்க்க முயன்றார் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நாட்டிலுள்ள அறிவார்ந்த பல அறிஞர்கள் மூலம் முயற்சித்தார். பலன் இல்லை. தண்டோரா மூலம் ஊர்மக்களுக்கு அறிவிக்க சொன்னார். " ராஜாவின்  பிரச்சனையை தீர்ப்பவருக்கு கேட்கும் சன்மானம் தரப்படும் " என அறிக்கப்பட்டது. நாட்டிலிருந்து ஒரு விவசாயி வந்தார் . இராஜாவின் பிரச்சனையை கேட்டார். நன்கு யோசித்து அதற்கு சரியான தீர்வையும் வழங்கினார். ராஜாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி ஆர்பரித்தபடி - விவசாயியை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் தரப்படும் என்றார். அரசே முதலில் ஒரு பெரிய சதுரங்க பலகை வேண்டும் என்றார். அரசனுக்கு எதற்கு என புரியாமல் சரி என கூறி தன்னுடைய மாளிகையில் இருந்த மைதான அளவிற்கு சதுரங்க பலகையை செய்தார். இப்போது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என கூறினார். " அரசே எனக்கு

ஆசிரியா்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்கவேண்டும்: மத்திய அரசு உத்தரவு

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும். துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவாா்கள். மேலும், துறைசாா்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல், ஆசிரியா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கான மாா்ச் மாத ஊதியம், ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதையும் தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரைவாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் போடுங்க..!! புதிய ஐடியா கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம்..!!

1 முதல் 9 ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது அதே நேரத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன். வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கிறோம். 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாகஉள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும் . உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆகையால் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11 ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.தேர்வுஎழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோ

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி மாநிலத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிந்தனை..

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள். சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன் என்னன்னெவோ உலக நியதி என்றான் உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான் ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்ட

நாடு முழுக்க மொத்தமாக முடக்கம்.. 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும்.. எதெல்லாம் செயல்படாது?

நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னை: நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. விவரம் என்ன விவரம் பிரதமர் மோடி தனது பேச்சில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதோடு இதுவும் சுய ஊரடங்கு போலத்தான்

பிரதமர் மோடி பேச்சின் முழுவிவரம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர், தனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்றும், ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என தெரிவித்தார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றாக கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்பட வேண்டும் என கூறியுள்ள அவர், 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரங்கு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வீழ்த்த சமூக விலகல் மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசுடன் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டும் 100% கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் என்று கூறியுள்ள மோடி, இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை கட

சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்!

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 'ஹன்டாவைரஸ்' எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் 'குளோபல் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: யுன்னான் மாகாணத்தைச் சோந்த நபா், ஷாண்டாங் மாகாணத்தை நோக்கி பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது உயிரிழந்தாா். அவரது உடலில் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு 'ஹன்டாவைரஸ்' பாதிப்பு இருந்தது உறுதியானது. அதையடுத்து, பேருந்தில் அவருடன் பயணித்த 32 பேருக்கும், அந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் போல் ஹன்டாவைரஸ் காற்றில் பரவாது எனவும், எலியின் மூலம் பரவும் அந்த வைரஸ், பாதிக்கப்பட்ட எலியின் எச்சில், கழிவுகள் மூலம் மட்டுமே பரவும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ஹன்டாவைரஸ் எளிதில் பரவாது என்பதால், அது கரோனா வைரஸ் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Stay at home..

கிட்டத்தட்ட அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போயிட்டாங்க. இனிமேல் உங்களை கை கழுவு ன்னு எல்லாம் யாரும் சொல்லப் போறது இல்லை. மூன்றாவது கட்ட ஆட்டம் ஆரம்பம் ஆயிடுச்சு. தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் பண்ண இப்ப அனுமதி கொடுத்து இருக்காங்க. இன்னையில் இருந்து யாருக்கும் வெளி நோயாளிகள் அப்பாயின்மெண்ட் கிடையாது. காரணம் இல்லாமல் நீங்க எந்த மருத்துவ மனை படியையும் மிதிக்க முடியாது. கார்ப்பரேட் ஆபிஸ் மாதிரி பல கேள்விகள் கடந்து தான் உள்ளே வரமுடியும். அப்போல்லோ வில் இரண்டு ப்ளோர் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப் பட்டு இருக்கிறது. அரசாங்க மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் அவசரமாக ஏற்படுத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மேல் உங்களை காத்து கொள்ளும் ஆயுதம் உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கிறது. #stay_at_home நீங்களும் யார் வீட்டுக்கும் போகாதீங்க. உங்க வீட்டுக்குள் யாரையும் வர விடாதீங்க. வீட்டுக்குள் ஆளுக்கு ஒரு மூலை செலக்ட் செய்து படுக்கை போட்டுக்கோங்க. பெரியவர்களுக்கு ஒரு அறை கொடுத்து அவங்களை அந்த அறைக்குள் இருந்து வெளியே வர விடாதீங்க. அங்கேயே நடமாட்டம் கட்டுப்படுத்துங்கள

தமிழகத்தில் 144 தடை உத்தரவு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?

144 தடை உத்தரவு காலகட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பால் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்மா உணவகங்கள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட உள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, அரசு துறை தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Advertisement நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும்.கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் ஆகியவை செயல்படலாம். ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் செயல்படலாம்.போதிய இடைவெளியுடன் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படலாம். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், சுகாதாரம் தொடர்பாக பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் ஆகியவை செயல்படலாம். உணவுப் பொருட்கள், பால், ரொட்டி, பழங்கள், காய்கறிகள், மாமிசம், முட்டை, மீன் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனை உள்ளிட்ட நடவட

11 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்தி வைப்பு.

கண்ணீரின் வலி..

இந்த ஒற்றை புகைப்படம்  பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது. *இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார்.* இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது. அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே நிலையை மட்டுபடுத்தும்.  கரோனோவால் பாதித்த பெண் தெரிந்தும் எனக்கு வந்தது பிறருக்கும் வர வேண்டும் என விமானம், தொடர்வண்டியில் பயணித்து பரப்பியது நடந்த நிகழ்வு. இதுவும் ஒரு மன நோயே. நான் துன்பப்படும் போது மற்றவர் எப்படி மகிழ்வாய் இருக்கலாம் என்பது. ஞாயிறு ஊரடங்கு என்றதும் சனி அன்று மக்கள்  இரட்டிப்பு கூட்டமிட்டு கூடி  நோய் பரவல் வீதத்தை அதிகரித்ததும் அறிந்ததே. இவர்களுக்கும் அந்த பெண்ணிற்கும் மனதளவில் பெரிய வித்தியாசம் இல்லை. மாணவர்களுக்கு விடுமுறை விட்டது பாதுகாப்பிற்கு. ஆனால் அதனை சுற்றுலா போல ஊர் சுற்றி கொண்டாடி மகிழ்வது வருத்தம்

வேப்பிலை, மஞ்சள் தூள் போதும்; படிகார நீரிலும் கை கழுவலாம்!

சென்னை:''படிகார நீரை, கிருமி நாசினியாக பயன்படுத்தி கை கழுவினால் போதும்; கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்,'' என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா உள்ளிட்ட நோய் தொற்று பரவுவதை தடுக்க, வசதி படைத்தவர்கள், 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்துகின்றனர். முககவசம் அணிகின்றனர். வீடுகளை சுத்தம் செய்ய, 'டெட்டால், லைசால், ஹார்பிக்ஸ்' போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.வசதி குறைந்தவர்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களும், இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரணம், அவர்களுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. இயற்கை வழி என்ன?கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப, இயற்கையிலேயே பல கிருமி நாசினிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால் போதும்.வேப்பங்கொழுந்து, மஞ்சள் துாள் கலந்து துவையல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை, வீட்டிற்கு வெளியேசெல்லும்போது, கையில் தேய்த்து கழுவி கொள்ளலாம்.வெறும் மஞ்சள் துாளில் கைகழு