Skip to main content

Posts

Showing posts from January, 2020

பறவைகள்..

பறவைகள் ஏன் முக்கியம்? பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? 1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன. 2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன. 3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன. 4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன. 5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்! நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும். ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம். கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் . பறவைகளை, ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருப்பார் போலும்... மனிதர்கள், கிளிப்பேச்சு கேட்கவும் குயிலிசையில் கிறங்கவும் மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை! பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

ஆட்டைக் கடித்து மாட்டைப் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இருக்கிறது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒரு பகுதியாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அவசியம் எனும் பரிந்துரை ஆகும். இன்றளவும் அவ்வரைவு சட்டமாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் கூட மாநில அரசியல் நிலவரங்களையும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு மெல்ல வேறுவழியின்றி நிறைவேற்ற முன்வருவது கண்கூடு. அதேவேளையில் தமிழக அரசு முந்திக்கொண்டு முதலாவதாக எதைப்பற்றியும் யோசிக்காமல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் விரோத தீங்கு விளைவிக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றத் துடிப்பதென்பது புரியாத புதிர் ஆகும். அந்த வகையில் பொதுமக்களின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் முதலான திட்டங்களும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையாக காலங்காலமாக இருந்துவந்த ஓய்வ

தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

*5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு; அரசு பதிலளிக்க உத்தரவு* *5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தடை கேட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித் துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை* *விடைத்தாள்களை அந்தப் பள்ளியிலேயே திருத்துவதா? அல்லது வேறு பள்ளிகளிலா என்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதில்* *தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி*

படித்ததில் பிடித்தது..

அமிதாப் பச்சன் சொன்னது... எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.  வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர்  நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற

விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்முடிவிலிருந்து தமிழக அரசுபின் வாங்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்திட்டவட்டமாகக்கூறியுள்ளார். சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ளதனியார் அரங்கில், தமிழர்திலகம் பத்திரிகையின்2ஆம் ஆண்டு துவக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர்,அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கானநடவடிக்கைகள் விரைவில்மேற்கொள்ளப்படும்என்றார். 1 ஆம் வகுப்பு முதல்12ம் வகுப்பு மாணவர்கள்வரை சரளமாக ஆங்கிலம்பேச, ஆயிரம் ஆங்கிலவார்த்தைகள் என்றபாடத்திட்டத்தின் கீழ் வாரம்45 நிமிடங்கள் பயிற்சிஅளிக்கப்பட்டு வருவதாகபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் தெரிவித்தார். விடுமுறை நாட்களில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களைகொண்டு தமிழ் பயிற்சி,மற்றும் நீதிபோதனைவகுப்புகள் நடத்தவும் அரசுமுயற்சிகள் மேற்கொண்டுவருவதாகசெங்கோட்டையன்தெரிவித்தார். தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசியஅவர், 5 மற்றும் 8 ஆம்வகுப்பு மாணவர்களுக்குபொது தேர்வை ரத்துசெய்திட வேண்டும் என்றுஎழுந்துள்ள கோரிக்கைகள்பற்றி, அடுத்த ஆண்டு முதல்ப

ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!

வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்

TODAY'S THOUGHT..

கரோனா வைரஸ் (Corona virus) தாக்குதல்! தற்காத்துக் கொள்வது எப்படி? ------------------------------------------------ நியூட்டன் அறிவியல் மன்றம் ----------------------------------------------- கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை (28.01.2020 0400 hours IST) தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. அறிகுறிகள்: ------------------- இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல் ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும். சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில், இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Sev

அனைத்துப் பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து தமிழக அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் வாரம் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று

TNPSC நடத்தி வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பட்டியல் ரத்து - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-ல் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

மதங்கள்..

அனைத்து மதங்களையும் " Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்தின் பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 60-3 என்ற அறுதிப் பெருமான்மையுடன் ஐஸ்லாந்து சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் முதற்கட்டமாக பொது இடங்களில் மதரீதியான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதை தடைசெய்கிறது. மதங்களை " Mental disorders " என்று அறிவித்ததன் மூலம் உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன புத்திஜீவிகளாக ஐஸ்லாந்தவர்கள் உலகுக்கு தம்மை காட்டியிருக்கிறார்கள். அந்த மண்ணை என்றேனும் ஒருநாள் தரிசிக்க வேண்டும். தவிர , கடந்த வருட நடுப்பகுதியில்  பிள்ளைகளுக்கு எந்த மதத்தையேனும் போதிப்பதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது ஸ்வீடன். யாராகினும் " ஐயோ... இது கருத்து திணிப்பு. நாஸ்திக திணிப்பு , இதெல்லாம் உள்ளார்ந்து தெளிந்து நாஸ்திகராக மாறவேண்டுமே ஒழிய சட்டம் போடக் கூடாது என்று வாய்பேசி தமது பிள்ளைகளுக்கு மதங்களை போதித்தால் முதல் தடவைக்கு 500 ஸ்வீடன் க்ரோனர்களும், இரண்டாம் தடவைக்கு 1000 க்ரோனர்களும் தண்டப்பணமாக விதிக்கப்படும். மூன்றாம

5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தலைமுடியை அடர்த்தியாக்கும் வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா? தனியாரிடம் பொறுப்பு தந்ததால் குழப்பம்

* சர்வர் குளறுபடி * பயிற்சி இல்லாமை * குறைகளை நீக்க முடியாமல் அதிகாரிகள் தத்தளிப்பு சென்னை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை. இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய முறையின் கீழ் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க இணைய தளம் மூலம

அன்பு..

*அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.!* *திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!* *இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!* *மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!* *முதலில் கிளம்பிப் போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!* *ஏனென்று கேட்ட போது சொன்னாள்:-* *நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்*.. *வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டு விட்டேன்..!* *குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டு விட்டேன்...!* *அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,* *“அன்பு என்றால் இது தான்"* *ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!* *எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!* *நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!* *ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

TRB - உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்புக்கு எதிராக வழக்கு!

விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணி தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், சிலெட் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

பிஸ்கட்டுகள் சாப்பிடுறதுல இவ்வளவு பிரச்சனைகளா?

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் அதில் முதலிடம் பிஸ்கட் வகைகளுக்குத்தான். பின்னே இருக்காதா ஒரு தம்ளர் பாலின் சக்தி நான்கு பிஸ்கட்டில் கிடைக்கிறது. அதுவும் குழந்தைகள் மறுக்காமல் நொறுக்குகிறார்கள் என்னும் போது பிஸ்கட் சத்துமிக்க ஸ்நாக்ஸ் வகைகளாக இருப்பதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் ஆனதும் பிஸ்கட்டை நீரில் நனைத்து ஊட்டிவிடுவார்கள். சப்புக்கொட்டி சாப்பிடும் குழந்தையின் அழகில் பிஸ்கட் இனிமையான பொருளாகவே தோன்றும். பிஸ்கட்டிலும் தான் எத்தனை வகை… வெண்ணெய் பிஸ்கட், நெய் பிஸ்கட், உப்பு பிஸ்கட், மசாலா பிஸ்கட், இனிப்பும் புளிப்பும் கலந்த பிஸ்கட், கோதுமை பிஸ்கட், மைதா பிஸ்கட், முந்திரி பிஸ்கட், உலர் பருப்புகள் நிறைந்த பிஸ்கட், டீ பிஸ்கட், க்ரீம் பிஸ்கட். க்ரீம் வகையிலும் விதவிதம் உண்டு என்பது வேறு இப்படி உருவங்களிலும் தயாரிப்புகளிலும் விதவிதமாய் பலநூறுவகைகளில் விற்பனைக்கு வருகிறது. பணியிடங்களில் மட்டுமல்ல அநேக வேளைகளில் பலரின் உணவு பிஸ்கட் மட்டுமாகவே கூட இருந்துவிடுகிறது. அலுவலகங்களில் மட்டுமல்ல விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலும் டீயோடு தட்டு நிறைய இடம்பிடிப்பது பிஸ்கட்

மதுரையின் அரசி மீனாட்சி!

மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு  இந்த 8 வித ஆராதனை. திருவனந்தல் – பள்ளியறையில் –  மஹா ஷோடசிப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி 12 – 15 நாழிகை வரையில் – கெளரி மத்தியானத்தில் – சியாமளா சாயரக்ஷையில் – மாதங்கி அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.  மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம். எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. அதன்

'பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது: ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise)

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் தற்போதைய ( 24.01.2020) நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் பாட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. PG VACANCY list NAGAPATINAM DISTRICT PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise) - Download here

ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...

என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள். என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன். உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால

37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு : சிபிஐ விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் டிஆர்பிக்கு எச்சரிக்கை!

உதவி பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களில் 95 சதவீதம் பிழை உள்ளது என்று டிஆர்பி அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான விண்ணங்கள் அனைத்தும் இணைய தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து 39 ஆயிரம் பேர் தங்கள் விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக இருப்பதாகவும், மற்ற 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பிழையாக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணக்கின்படி 5 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக உள்ளது என்று தெரிவித்தால், அது ஆசிரியர் தேர்வு வாரிய இணை

கூடுதல் விவரங்களைக் கேட்கும் டி.ஆா்.பி.: குழப்பத்தில் விண்ணப்பதாரா்கள்

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களிடம் கூடுதல் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக விண்ணப்பதாரா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். விண்ணப்பதாரா்களிடம் கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலும், தற்போது பணிபுரியும் இடத்திலும் நற்சான்று பெற்று சமா்ப்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஒரு வார காலத்துக்குள் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. எனவே, கூடுதல் விவரங்களை சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், கடைசித் தேதி நவம்பா்-15 என நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னா், விவரங்களை முழுமையாகச் சமா்ப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச

விற்பனை தந்திரம்!!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். “ஐந்து பழங்கள் பத்து ரூபாய்..” என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.  சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். அவன் “ஆறு பழங்கள் பத்து ரூபாய்” என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், “ஐந்து பழங்கள் பத்து ரூபாய்...” என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.  அடுத்து, “ஆறு பழங்கள், பத்து ரூபாய்...” என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், அதிகமாக விற்பனை செய்தான். மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே... அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும்.  அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் த