Skip to main content

Posts

Showing posts from April, 2018

TODAY'S THOUGHT..

பேசுவதெல்லாம் கதை: எங்கள் சின்ன வய தில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு. வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி

யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசின் சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது, தற்போது இதில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளப் போகு தேர்வர்களின் இறுதி பெயர் பட்டியில் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 32 மாணவர்கள் ‘அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை’ சேர்ந்தவர்கள். இதில் இந்தியா அளவில் 29வது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன். இவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விருப்பப் படமாக தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடம்பிடித்து, தமிழக அளவில் 2ம் இடம் பிடித்த மதுபாலன் என்பவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை சேர்ந்தவர். மேலும் தமிழிலேயே தேர்வை எழுதியவர்கள், முதல் நிலை தேர்வு தொடங்கி நேர்முகத் தேர்வு வரை அனைத்தையும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் முடித்தவர்கள், பணியில் இருந்துகொண்டே படித்தவர், வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிக் கொண்டே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று படித்தவர்கள், கடுமையான ஏழ்மைச் சூழல

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்! ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

கோவை:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது. விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள். இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது... தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு. புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எ

சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்துள்ளது.சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2017 ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சிலர்,&'கல்வித் தகுதி நிர்ணயித்ததில்விதிமீறல் உள்ளது.எழுத்துத் தேர்விற்கு தடை விதிக்க வேண்டும்,&' என மனு செய்தனர். தேர்விற்கு தனி நீதிபதி இடைக்காலத்தடை விதித்தார். இதை எதிர்த்து டி.ஆர்.பி.,மேல்முறையீடு செய்தது. 2017 செப்.,22 ல் நீதிபதிகள் அமர்வு, &'தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. பணி நியமனங்களைப் பொருத்தவரை நீதிமன்ற உத்தரவை பெற்று மேற்கொள்ள வேண்டும்,&'என்றனர். நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதா சுமந்த் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, &'நீதிமன்ற உத்தரவால் 1500 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. 11 உடற்கல்வி ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கிறோம். மற்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்,&' என மனு செய்தது.நீதிபதிகள், &'சிற

காலம் மாறிவிட்டது..

*ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது.* *காரணம் 樂樂樂* *மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,* *உறவினர்களுக்கு உரிமை இல்லை,* *ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,* *தான் பெற்ற பிள்ளைகழோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை* *மெஷின் போன்ற வாழ்க்கை,* *மெஷின்னுடன் தான் வாழ்க்கை,* *மனைவி இல்லையென்றாலும்* *பரவாயில்லை மொபைல் இருக்கிறது,* *உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,* *நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.* *அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.* *உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.* *நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.* *ஒரு நாளைக்கு 1 மணி

புனேவிற்கு சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் பலி

தண்டையார்பேட்டை, புனேவிற்கு, கல்வி சுற்றுலா சென்ற தண்டையார்பேட்டை பள்ளி மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி பலியாயினர். சென்னை, தண்டையார்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில், இ.சி.ஐ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி உள்ளது.இப்பள்ளியில் படித்த மாணவர்களில், 20 பேரை தேர்ந்தெடுத்து, தனியார் தொண்டு நிறுவனம், புனேவிற்கு, கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றது. அதில், தண்டையார்பேட்டை, இந்திராகாந்தி நகரை சேர்ந்த, தமீம் அன்சாரியின் மகன், சஷீல் ரஜு, 13, நாவலர் குடியிருப்பை சேர்ந்த, கணேஷ் மகன் சந்தோஷ், 13, நேதாஜி நகரைச் சேர்ந்த, சுடலைகுமாரின் மகன் சரவணக்குமார், 13, ஆகியோரும் சென்றனர்.சென்னையிலிருந்து, 23ம் தேதி, விமானம் மூலம், மகாராஷ்டிராவிற்கு சென்றனர். நேற்று முன்தினம், புனேயிலிருந்து, 45 கி.மீ., துாரத்தில் உள்ள, முல்ஷி அணைக்கு, மாணவர்களை அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள, அணைக்கட்டு ஏரியில், ஐந்து மாணவர்கள் குளித்தனர். அப்போது சஷீல் ரஜு, சரவணக்குமார், சந்தோஷ் ஆகிய மூவரும், நீரில் மூழ்கி மாயமாகினர்.புனே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், மாணவர்களை தேடும் பணியில் ஈட

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கி சிபிஎஸ்இ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இதனை விசாரித்த ஐகோர்ட், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விபரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோடை_விடுமுறை..

என்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர். இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர். அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர். வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர். சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர். நீங்க சொன்ன அத்தனை

மாணவர்களுக்கான உளவியல் குழு : கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: &'மாணவர்களின், உளவியல் நலனை உறுதிப்படுத்துவதற்கான குழுவை அமைக்கத் தவறினால், பள்ளிக்கல்வி துறை செயலர் ஆஜராக வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை, ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவியை தவறாக திட்டி, ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதற்கு தண்டனையாக அவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை, பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இதை, ரத்து செய்யக்கோரி, சம்மந்தப்பட்ட ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தீர்ப்புஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முரளிதரன், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, உத்தரவிட்டிருந்தார். உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்கும்போது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சிறந்த கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் அடங்கிய குழுவையும், பள்ளிக்கல்வித்துறை செயலர் அமைக்க வேண

பிளஸ் 1 தேர்வில், 40 சதவீதம், ஜஸ்ட் பாஸ்: விடைத்தாள் திருத்தத்தில் அதிர்ச்சி

கடின வினாத்தாள் காரணமாக, பிளஸ் 1 பொது தேர்வில், 40 சதவீத மாணவர்கள், &'ஜஸ்ட் பாஸ்&' என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வில், பெரும்பாலான வினாக்கள், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளின் வினாக்களை போல், நுண்ணறிவை ஆய்வு செய்யும் வகையில் இடம் பெற்றன. அதனால், பெரும்பாலான மாணவர்கள் விடை எழுத திணறினர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுக்கான, மொழிப்பாடத்துக்கு, ஒரு வாரத்திற்கு முன்பும், முக்கிய பாடங்களுக்கு, நேற்று முன்தினமும், விடைத்தாள் திருத்தம் துவங்கியது. இந்த விடைத்தாள் திருத்தத்தில், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன. விடைத்தாள் திருத்தத்திற்கான, விடைக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.ஒவ்வொரு கேள்வியிலும், சில குறிப்பிட்ட விடை அம்சம் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதனால், &&

உண்மையான வாழ்க்கை..!

*உண்மையிலேயே வாழ்க்கை என்பது என்ன?* ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, என்னை காப்பாற்று, காப்பாற்று என்று ஓர் அலறல் சத்தம் அவனுக்கு கேட்டது. ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறியது. உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். நான் உன்னை காப்பாற்ற மாட்டேன் என சிறுவன் மறுத்து விட்டான். ஆனால் முதலை, நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று என்று கண்ணீர் விட்டது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலை முதலை பிடித்துக் கொண்டது. பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி கெட்டதனத்தை, இதுதான் உலகம் என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மரத்திலிருந்த பறவைகளைப் பார்த

குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்கள்!

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தினமும் 80 நிமிடங்கள் வீதம் டிவி பார்க்கும்பட்சத்தில், ஆண்டுக்கு 800 ஜங்க் புட் விளம்பரங்களை பார்க்க முடிவதாகவும், குறிப்பாக இவை குழந்தைகள் டிவி பார்க்கும் நேரங்களில் அதிகளவில் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நிலவரப்படி, 30 ஆயிரம் மணிநேர டிவி ஓளிபரப்பு நேரங்களில், 500 மணிநேரம், உணவு குறித்த விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சுமார் ஒரு லட்சம் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அதிலும், துரித உணவுகள், நொறுக்குத் தீணிகள், சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகளே அடிக்கடி டிவிக்களில் இடம்பெற்றுள்ளது!

மே 3ல், ஆன் லைன் இன்ஜி., கவுன்சிலிங் பதிவு

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, &'ஆன்லைன் கவுன்சிலிங்&' குறித்து, அமைச்சர் அன்பழகன் தலைமையில், சென்னையில், நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு : உயர் கல்வி துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டியின் உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவகாசம் : கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில், 567 கல்லுாரிகள் உள்ளன; அவற்றில், முதலாம் ஆண்டில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வர வேண்டாம்; கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இதற்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர