Skip to main content

புனேவிற்கு சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் பலி

தண்டையார்பேட்டை, புனேவிற்கு, கல்வி சுற்றுலா சென்ற தண்டையார்பேட்டை பள்ளி மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி பலியாயினர்.
சென்னை, தண்டையார்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில், இ.சி.ஐ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி உள்ளது.இப்பள்ளியில் படித்த மாணவர்களில், 20 பேரை தேர்ந்தெடுத்து, தனியார் தொண்டு நிறுவனம், புனேவிற்கு, கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றது.
அதில், தண்டையார்பேட்டை, இந்திராகாந்தி நகரை சேர்ந்த, தமீம் அன்சாரியின் மகன், சஷீல் ரஜு, 13, நாவலர் குடியிருப்பை சேர்ந்த, கணேஷ் மகன் சந்தோஷ், 13, நேதாஜி நகரைச் சேர்ந்த, சுடலைகுமாரின் மகன் சரவணக்குமார், 13, ஆகியோரும் சென்றனர்.சென்னையிலிருந்து, 23ம் தேதி, விமானம் மூலம், மகாராஷ்டிராவிற்கு சென்றனர். நேற்று முன்தினம், புனேயிலிருந்து, 45 கி.மீ., துாரத்தில் உள்ள, முல்ஷி அணைக்கு, மாணவர்களை அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள, அணைக்கட்டு ஏரியில், ஐந்து மாணவர்கள் குளித்தனர்.
அப்போது சஷீல் ரஜு, சரவணக்குமார், சந்தோஷ் ஆகிய மூவரும், நீரில் மூழ்கி மாயமாகினர்.புனே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை, மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.பிரேத பரிசோதனை முடிந்து, மாணவர்களின் உடல்கள், சென்னைக்கு அனுப்பி பணி நடக்கிறது.இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இ.சி.ஐ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில், 10க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தால், சுற்றுலா ரத்து செய்யப்பட்டு, மாணவர்களை, சென்னை அழைத்து வரும் பணிகளை, பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

கல்வித் துறை செயலருக்கு &'நோட்டீஸ்&'

சுற்றுலா சென்று, விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் விளக்கம் அளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு: கல்வி சுற்றுலாவுக்கு, மாணவர்களை, பள்ளி நிர்வாகம் அழைத்து சென்றது குறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், தனியார் பள்ளி முதல்வர் ஆகியோர், விரிவான அறிக்கையை, நான்கு வாரத்தில் அளிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லும் போது, கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு, அனைத்து பள்ளிகளுக்கும், வழிகாட்டு நெறிமுறைகளை, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...