Skip to main content

Posts

Showing posts from January, 2022

நம்பிக்கையோடு..

அமெரிக்காகவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டு பிடித்தார். அட்லாண்டிக் பெருங் கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார். பயணம் பலமாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில்தோன்றி விட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களை காதில் வாங்கவே மறுத்து விட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள். ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப் பில் நம்பிக்கைய

கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் PDF வடிவில்!

தொடக்க கல்வித்துறையில் EMIS வலைத்தளத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் PDF வடிவில்! CLICK HERE DEE BT MATHS VACANT LIST

இனி ஒரு உலகம் அமைப்போம்..

யாரும் யாரை விடவும் உயர்ந்தவெரென்றோ, தாழ்ந்தவரென்றோ, மதிப்பு மிக்கவரென்றோ, அறிவானவரென்றோ, அழகானவரென்றோ, நிறமானவெரென்றோ, படித்தவரென்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இப்புவிப் பந்தில் ஒவ்வொரு மனிதரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால்  ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள்,  வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி,மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை.,  சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.  டால்ஸ்டாய் அருக

G.O.4 - மானியக் கோரிக்கை - பள்ளிக் கல்வி - சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல் - ஆணை

  G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை- வெளியிடப்படுகிறது. Click Here To Download - G.O.4 - e-Services - Pdf

தொடக்க கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் - இயக்குநர் செயல்முறைகள்

  2021-2022 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் கலந்தாய்வு (பட்டதாரி ஆசிரியர்களுக்கு)  இணையவழியில் EMIS மூலம்  மேற்கொள்ளுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

இவள் ஒரு இரும்பு பெண்மணி..

இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா. இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர். 'கஃபே காபி டே' (Cafe Coffee Day)யின் உரிமையாளர். 13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள். நாடெங்கும் 1,600 காபி டே கடைகள். நேர்மையும் பண்பும் நிறைந்தவர். பாரம்பரிய செல்வந்தர் குடும்பத்தின் வாரிசு. இன்னுமொரு செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு அருமையான குழந்தைகள். 2019 ஜூலையில் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார். "நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை முடக்கி விட்டது. வங்கி கடன் கணக்குகள், நிறுவன பரிவர்த்தனைகள் அனைத்தும் முடங்கிவிட்டன. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் தற்கொலைக் கடிதத்தில் கூறியிருந்தார் சித்தார்த்தா. இந்த மரண சாஸனம் மத்திய அரசின் மனசாட்சியை உலுக்கியது. அந்த வாரமே வருமான வரி துறையில் பல மாற்றங்களை அறிவித்தார், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன். அந்த சம்பவத்தில் அனைவரையும் கலங்கவைத்தது தனது கணவரின் முகத்தை பார்க்க

உபரி பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விவரங்களை 01.02.2022க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

  உபரி பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விவரங்களை 01.02.2022க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

காது..

 காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது. ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்? பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான். ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது, காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு ச

Flash News..

 PGTRB DATE'S AND HALL TICKET PUBLISHED BY TRB..

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதலுக்கு பின்பு ஏற்பட்ட காலிப் பணியிட விபரங்கள்!

2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதலுக்கு பின்பு ஏற்பட்ட காலிப் பணியிட விபரம் : Click Here To Download - HSS HM Resultant Vacancy - Pdf

TODAY'S THOUGHT..

 ஒரு பிரபல ஜோதிடர்.  ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல.  அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.  எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான். “நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன்.  கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது.  எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு.  அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.  நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா?  என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார். ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார்.  கட்டங்களாய் ஆராய்ந்தார்.  ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது. பிறகு தொழிலாளியிடம்,  “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.  உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  எனவே அது என்னிடம் இருக்கட்டும்.  நீங்கள் இன்ற

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

 தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி-28: வேட்புமனு தாக்கல் பிப்ரவரி-05: வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி-07: வேட்புமனு வாபஸ் பிப்ரவரி-19: வாக்குப்பதிவு பிப்ரவரி-22: வாக்கு எண்ணிக்கை  Click here to download pdf

தொடக்க கல்வித்துறையில் EMIS வலைத்தளத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் PDF வடிவில்!

  தொடக்க   கல்வித்துறையில்  EMIS  வலைத்தளத்தில்   மாவட்டம்   மற்றும்   ஒன்றிய   வாரியாக   பட்டதாரி   ஆசிரியர்   காலிப்பணியிடங்கள்   விவரங்கள்  PDF  வடிவில் ! 1. DEE BT Tamil-  CLICK HERE   2. DEE BT Science-  CLICK HERE   3. DEE BT Social Science-  CLICK HERE   4. DEE BT English-  CLICK HERE   5. DEE Middle HM-  CLICK HERE   6. DEE Primary HM-  CLICK HERE

கடவுள் யார்?

_*அவரவர்*_ _*எண்ணங்களுக்கு*_ _*ஏற்பஎந்த வடிவம்*_ _*கொடுத்தாலும்*_ _*அந்த வடிவமாக நிற்பவன்*_ நான் சொல்வது சரி  நீ சொல்வது தவறு  என்று வாதிடும்போது  வாதியும் அவனே  பிரதிவாதியும் அவனே கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகவாதம்  பேசினாலும் அவனுள்ளும்  அறிவாய் இருப்பவன் அவனே அவனை எங்கே காட்டு பார்க்கலாம்  என்று அடாவடியாகபேசினாலும்  அங்கே பேசுவதும் அவனே எங்கும் நிறைந்திருக்கும் அவனை உணர தான் முடியும் என்று ஞான மார்க்கத்தில் வாதிட்டாலும் வாதிடுபவன் அவனே கடவுளே கிடையாது இயற்கைதான் கடவுள் என்று கூறினாலும் இயற்கையாய் மலர்வதும் அவனே ஏட்டு புத்தகங்களை படித்து விட்டு இவையெல்லாம் கடந்தால் அவனை காணலாம் என்று ஆணித்தரமாக வாதிட்டாலும், சொல்லும் பொருளும் அவனே எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருக்கும் அவனை இப்படித்தான் அவன் என்று முத்திரையிடுவதுஎவ்வளவு பேதமை என்று உணர்வதும் உணர்த்துவதும் அவனே,, நான் "அழிந்தால் அவனும் நீயும் ஒன்றே என்று கூறினாலும் சொல்வதும் கேட்பதும் அவனே. "விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்" _*உள்நோக்கி பயணித்தால், நான் எனும் நம்மோடு கைகோர்த்து நானும் நீயும் ஒன்றே என்று உணர்பவனும் உ

DSE- உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம்

  DSE- உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம்   CLICK HERE-DSE_vacancy-consolidation CLICK HERE-HIGH SCHOOL HM VACNCY CLICK HERE-HR SEC HM vacancy CLICK HERE-PG TAMIL VACANCY CLICK HERE-PG ENGLISH VACANCY- CLICK HERE-PHYSICS VACANCY CLICK HERE-PG MATHS VACANCY- CLICK HERE-PG CHEMISTRY VACANCY CLICK HERE -PG ZOOLOGY VACANCY CLICK HERE-PG COMMERCE VACANCY-

மாற்றம் ஒன்றே மாறாதது..

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது.  பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது.  இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம். மாற்றம் மட்டும் தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது.  மாற்றம் வரும் போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.  இதைப் புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது.  ‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதைப் புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.  மனம் உவந்து தன்னைத் தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கிக் கொள்ளத் தெரிந்தவரே மகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும். மாற்ற முடிந்த செயல்களைத் தான் மாற்ற முடியும். அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  அதே போல *நாமும் சூழ்நிலைக்கு ஏற

பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

  பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Click here to Dowload DEE vacant list Click here to download DSE vacant list Click here HSS.H.M seniority list & ALL PG SUBJECTS

எதுவும் நிரந்தரமில்லை..

உலகப்புகழ்பெற்ற டிசைனர் (Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. #மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது.  ஆனால் நான் #சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.! என் #வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் தலைய

FLASH NEWS..

 TRB has published its annual planner, note that it has SGT & BT vacancies.. TET expected in April2022..

PGTRB 2022

 Hope TRB us taking steps to conduct PGTRB in the month of February as scheduled. TRB seeking for venues with regards to exam proves that but still if corona cases increases dates might be changed for sure..

பத்தடியே போதும்..

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி  இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார் அப்போது அங்கு ஒரு  பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார். நகரவாசி அந்த பெரியவரிடம்  தன் சந்தேகத்தை கேட்டப் போது, பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்

01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

  01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!   CLICK HERE TO EDUCATION COMMISSIONER PRO-PDF CLICK HERE- HS-HSS-H.M- PANEL CKICK HERE-PG-HSS.HM-PANEL

TODAY'S THOUGHT..

தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.  அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர், கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும், சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.  ஊசி சிறியது.. மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?” என்று கேட்டான். “நீ சொல்வது உண்மை தான்” என்றார் தையற்காரர்.  “கத்திரிகோல் அழகாகவும்... மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது..! ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. *ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல"* என்றார்.

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 608 முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - நாள்: 20.01.2022!!!

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 608 முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - நாள்: 20.01.2022!!! CLICK HERE TO DOWNLOAD-pdf

படித்ததில் பிடித்தது..

ஒரு விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,, உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரசியமாக இருக்கும் " என்றார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "என்ன மாதிரி கேள்விகள்?" என்று சிறுமி கேட்டாள். கடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன?" என்றார். அந்த சிறுமி யோசித்து விட்டு "நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா? " என்றாள். புன்சிரிப்போடு  "அவர் தாராளமாக " என்றார். ஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவிற்கு சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி?" என்று கேட்டாள். தத்துவவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார். தெரியவில்லையே,,, " என்று கூறினார். இது கூட உங்களுக்கு தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும்

01.08.2021 நிலவரப்படி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

  ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு மேற்படி பணியாளர் நிர்ணயம் 2021-22ம் கல்வியாண்டிற்கான 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இக்கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்படி பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி ( 6-8க்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும் 9-10க்கு விகிதாச்சாரப்படியும் ) 1:40 என்ற கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ( Need Schools ) கண்டறியப்பட்டுள்ளது . கானலே , மேற்படி கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரிக்காலிப்பணியிடங்களை ( Surplus Post Without P