Skip to main content

Posts

Showing posts from August, 2018

சிறந்த அரசன்..

  இப்படி  திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா? என்றார் ஜட்ஜ் ஜவர்லால். “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. ஜட்ஜூக்கு சுருக்கென்றது. பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். “பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேல

நாட்டின் சிறந்த புத்தகம் விருது கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’ வழங்கப்படுகிறது

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார். சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று இருக்கிறது. இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் (எப்.ஐ.சி.சி.ஐ) இந்த விருதை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்தி தவிர ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அவை வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தின்’ மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:- பெருமைமிக்க விருது இது. சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ்

சான்றிதழ் குளறுபடியால் சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்

இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு, 1,325 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 செப்டம்பரில், போட்டி தேர்வை நடத்தியது. இதில், 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூன், 14ல் வெளியிடப்பட்டன. இதையடுத்து, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஆக., 13ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடவடிக்கையில் திடீர் குளறுபடி ஏற்பட்டது.ஒரு தரப்பினர், தமிழக பள்ளி கல்வி துறையின் அரசு தேர்வு துறை சான்றிதழையும், இன்னொரு தரப்பினர், தமிழக வேலைவாய்ப்பு துறை தனியாக நடத்திய, தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழையும் காட்டினர்.இதனால், தேர்வர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்னை குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் தலைமையில், சிறப்பாசிரியர் தேர்வுக்கான தேர்வர்கள், பள்ளி கல்வி மற்றும், டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அ

தொலைந்து போன முகவரிகள்..

எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே! உன் முகவரியை வெளிக்கொணர படு பிரயத்தனம் செய்ததில் தொலைந்து போன எம் முகவரிதான் என்ன? பாடப்பகுதிகளை இலகுவாக்கி உன் பாணியில் போதிப்பதே எம் பணியானதென்ன? பள்ளிக்கு நீ வாரா பொழுதுகளில் உன் இல்லம் வந்து கட்டியிழுத்து கொணர்ந்தாலும் பல நேரங்களில் பூட்டிய உன் வீட்டின் கதவுகளும் எமை பரிகசிப்பதுதான் என்ன? ஆடி மாதம்! குல தெய்வ வழிபாடு கூழ் வார்த்தல் பொங்கல் வைத்தல் அத்தனைக்கும் முன்னிலை வகிக்கும் உன் பெருந்தன்மைதான் என்ன? எதிர் வீட்டுப் பாட்டி இறப்பு! பக்கத்து வீட்டு அக்கா வளைகாப்பு! உறவுமுறை சொல்ல தெரியாத வீட்டில் காதுகுத்து! எல்லா சுக துக்கங்களிலும் உன் பங்கேற்றலை பெருமிதப்படுத்துவதுதான் என்ன? இதையெல்லாம் தாண்டி நீ பள்ளிக்கு வருங்கால் உன்னுடனே ஒட்டிவரும் தலைவலி, வயிற்றுவலி அதிகமாய் கொஞ்சம் நெஞ்சுவலி, உன் விடுப்பு  இன்னும் முடியவில்லை என்று எம்மை உணரவைதததுதான் என்ன? எம்மை பாவம் என்று நினைத்து நீ பள்ளிக்கு வரும் தருணங்களில் எதை புரியவைப்பது எப்படி படிக்க வைப்பது என்கிற அறப்போராட்டத்தில் எம்பெயர் கூட எம் நினைவினி

TODAY'S THOUGHT..

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள்.  அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார். “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு   எல்லாமே தாமதமாகுது” “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்….   நான் வீட்டை விட்டு சீக்கிரமா     தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” “என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவ

தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர். குற்றச்சாட்டு : நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும்,

தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், சி.ஏ., தேர்வுக்கு பயிற்சி வழங்குவது, அடுத்த மாதம் துவங்கஉள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில், இந்த வகுப்பறைகள் திறக்கப்படும். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

படித்ததில் ரசித்தது..

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். *அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.* *கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.* *அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.* 👉 *பயம் ஒரு பெரிய நோய்.* *நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.* 👉 *அச்சமின்மையே ஆரோக்கியம்!* *பின்குறிப்பு:-* இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார். 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 👉 *சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!* 😜😁😜😁😜😁😜😁

TODAY'S THOUGHT..

இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் ! “இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்” இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் பிரச்சினை எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான். முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன. பரிசுப்பொருள்கள் தெய்வப்படங்கள் புகைப்பட ஆல்பங்கள் ஆடைகள் உள்ளாடைகள் புத்தகங்கள் இசைக்கருவிகள் இசைப்பேழைகள் ஸ்பூன்கள் கண்ணாடிக் கோப்பைகள் பொம்மைகள் கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள் உடல் வாசனையுள்ள போர்வைகள் அழகு சாதனப்பொருள்கள் கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன. நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும். எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும். ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும். ஒரு பாலித்தீன் பை அளவுக்க

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி பேட்டியளித்துள்ளார். நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்கள் இணையதளம் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விணப்பித்தனர். அவர்களின் சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. இதில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டு

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி வாரியாக மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின், எமிஸ் மாணவர் சேர்க்கை விபரங்கள், பள்ளிக்கல்வி நிர்வாக இணையதளத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பதிவு வழியாகவே எடுக்கப்படும் என்பதால், விபரங்களை தவறின்றி பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இயல்பா இருங்க..

அதிக விஷயம்... விஷம். -------------------------------------- சிந்திக்க! இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர். படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே. உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடாதீர்கள் அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்.. இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்.. காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம் பால் வேண்டாம் ஐஸ் வாட்டர் வேண்டாம் பாட்டில் ஜீஸ் வேண்டாம் என்றார்கள்... சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்

பக்தி - விதியை மாற்ற வல்லது..

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான். “நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார். ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது. பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்