Skip to main content

Posts

Showing posts from May, 2018

பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி!

மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36,380 மாணவ, மாணவிகள் 600 க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 97.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.4 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3வது இடத்திலும் உள்ளன.

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன

TODAY'S THOUGHT..

சமீபத்தில்  பழமுதிர் சோலை முருகன் கோவிலுக்கு போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டோம் ... அதற்கு அவர் சொன்னார் "சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில் தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன... வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன... எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது&q

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி "முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?" என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் "உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்?" என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான். பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். அந்த விளக்கத்தைக்

கருணையின் தேவதை..

அவள் பெயர் ஐடா ஸ்கேடர்(Dr. Ida Sophia Scudder): அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த  இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார் தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன‌ என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா? இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர் இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார் மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, த

TODAY'S THOUGHT..

*_திருமணத்தில் மணமக்களுக்கு ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_* பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும். வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர். மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால், ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும். வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடு

சி.பி.எஸ்.இ, 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதினர். வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது. இந்நிலையில், தேர்வு முடிவு அறிவிக்கப்ப்டட நாளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. முதலிடம் இன்று வெளியான தேர்வு முடிவின்படி, நாடு முழுதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். காசியாபாத்தை சேர்ந்த அனுஷ்கா சந்திரா என்பவர் 498 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை 497 மதிப்பெண்களுடன் 7 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களை பிடித்த மண்டலங்கள் திருவனந்தபுரம் மண்டலம்- 97.32%சென்னை மண்டலம்-93.87%டில்லி மண்டலம்- 89%

மன்னிப்பைப் பற்றி..

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். 'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். 'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன. ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார். மன்னிப்பவர்களுக்கு புற்றுநோ

தனியார் பள்ளிக்கு இணையாக ஜொலிக்கும் அரசுப்பள்ளி

பெரம்பலுார், -அரியலுார் அருகே, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு வண்ணங்களுடன் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அரியலுார், பெரியவளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இதையறிந்த, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான, காரணம் என்னவென்று இக்கிராமத்தில் உள்ள பெற்றோரிடம் விசாரித்தனர்.அப்போது, பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே என்று அவர்கள் கூறினர். இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இப்பள்ளியை புனரமைக்க முடிவு செய்தனர். இதற்கென பிரத்யேகமாக ஒரு, 'பேஸ்புக் குரூப்' உருவாக்கி, இப்பள்ளியின் பழைய படத்தை பதிவிட்டு, விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் பள்ளியை புனரமைக்க நிதியுதவி தருமாறு கோரினர்.இதையறிந்த பெயின்ட் பாண்டிச்சேரி என்ற அமைப்பு, பள்ளியை பெயிண்ட் அடித்து தர ம

குரூப் - 2 தேர்வர்களுக்கு வரும், 29ல் கவுன்சிலிங்

சென்னை : &'குரூப் - 2&' தேர்வில், 48 இடங்களுக்கு, வரும், 29ல், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: &'குரூப் - 2&' நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதன்மை எழுத்து தேர்வு, 2017 ஆகஸ்ட், 21ல் நடந்தது. இதற்கான நேர்காணல், இரண்டு கட்டங்களாக, ஏப்., 25 வரை நடந்தது. மீதம் உள்ள, 48 பணியிடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், வரும், 29ல், நடக்க உள்ளது. இதில், 1:5 என்ற விகிதத்தில், தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் வழியாகவும், அழைப்பு தகவல், விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தை, தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்கள், மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

சென்னை, : துாத்துக்குடி கலவரம் காரணமாக, அண்ணா பல்கலை தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி கலவரத்தால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 5க்கும், நாளை நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 6; 28ல் நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 7க்கும் மாற்றப்பட்டுள்ளது. ஜூன், 29 முதல் நடக்கவுள்ள தேர்வுகள், திட்டமிட்டபடி நடத்தப்படும் என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு

சென்னை: மே 6ம் தேதி நடைபெற்ற &'நீட்&' தேர்வுக்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இன்று முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் விடைத்தாளை பார்க்க முடியும்.

நல் விடயங்களை தெரிந்து கொள்ளுவோம்

*வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது* வாழ்க என்பது வாழ்த்துச் சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்? தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது. மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம். ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம். 1.உடல் நலம் 2.நீளாயுள் 3.நிறைச்செல்வம் 4.உயர்புகழ் 5.மெய்ஞானம். இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது. அது என்ன ? வாழ்க வளமுடன் என்று இ

THOUGHT OF THE DAY..

இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில். நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில். அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார். நீ அவரை சாவுக்காக பராமரித்தாய். இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.” - நபிகள் நாயகம்.

TODAY'S THOUGHT..

*“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”* *"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"* *எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?* கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?” வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்.. மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...” - அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிக

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...

சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை

தர்மம்..

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார். தலைநகருக்கு புறப்பட்டார்... வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார். வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார். மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது. இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடா விட்டால் என்ன உயிரா போயிடும்? ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை தெரிவித்தார். போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே

இன்று, டான்செட் நுழைவு தேர்வு

சென்னை: இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், &'டான்செட்&' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, இன்று(மே 19)தமிழகம் முழுவதும், 27 மையங்களில் நடக்கிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 913 பேரும், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, 15 ஆயிரத்து, 242 பேரும் பங்கேற்கின்றனர். எம்.சி.ஏ., படிப்புக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதில், 5,240 பேர் பங்கேற்கின்றனர்.

இன்ஜி., கவுன்சிலிங்: 84,000 பேர் பதிவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு முதல், ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கியது. முதல் நாளில், 7,420 பேர் விண்ணப்பித்தனர். மே, 16ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போதிருந்து, விண்ணப்ப பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 84 ஆயிரத்து, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும், 30ம் தேதி கடைசி நாள். அதற்குள், 1.75 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைகிறது!

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன. தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது. நாளுக்கு நாள் இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.