சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதினர். வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவு அறிவிக்கப்ப்டட நாளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம்
இன்று வெளியான தேர்வு முடிவின்படி, நாடு முழுதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அனுஷ்கா சந்திரா என்பவர் 498 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை 497 மதிப்பெண்களுடன் 7 பேர் பிடித்துள்ளனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மண்டலங்கள்
திருவனந்தபுரம் மண்டலம்- 97.32%சென்னை மண்டலம்-93.87%டில்லி மண்டலம்- 89%
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment