Skip to main content

Posts

Showing posts from December, 2019

படிக்கத் தகுந்தது..

அருமையான கருத்து.  நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,  நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜனவரி 4 -ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜனவரி 4 -ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. Search This Blog பாடல்கள் Home தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் கொடிப்பாடல் பாரதியார் பாடல்கள் இந்திய நாடு என் நாடு... ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வந்தே மாதரம்

கல்வியில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம்...!! பின்லாந்தை பாலோ செய்ய திட்டம்...??

பின்லாந்து நாட்டின் கல்வி முறையை தமிழ்நாட்டில் பின்பற்ற அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்நாட்டு கல்வி முறையில்..?? பின்லாந்து நாட்டின் கல்வி முறை - வரவேற்பும்- எதிர்பார்ப்பும்-என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதன்தமுழு விவரம் பின்வருமாறு :- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்தறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது.அதில் குறிப்பாக கல்வி அமைச்சர் கல்விக்குழுவினருடன் பின்லாந்து நாட்டிற்கு சென்று அங்கிருக்கும் கல்விமுறையினை அறிந்துவந்ததும் அந்நாட்டு கல்வியாளர்கள் இங்கு வந்ததும் மாற்றங்களுக்கான முதல்படியாகவே கருதுகிறோம். பின்லாந்தில் அப்படியென்ன கல்வி முறை? கேள்விக்குள் நுழைந்தால் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையின் மக்கள் தொகையளவுதான் இருக்கும். சரியாக 55,36,306 பேர்கள் கொண்டகுட்டி குடியரசு நாடான வடக்கு ஐரோப்பாவிலுள்ள பின்லாந்து. கல்விமுறை7 வயதே தொடக்கப்பள்ளியில் சேர்க்கும் வயதாகும்.தொடக்கநிலை 1 முதல் 6 வகுப்பாகவும் இடைநிலை வகுப்புகள்7 முதல் 9 வகுப்புகளாகவும் உள்ளன. 16 வயது வரை தேர்வு முறைய

நல்லகண்ணு..

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்." இல்லை, நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை! கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை. தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்! நாடு விடுதலை அடைகிறது...! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசத

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக கரும்பலகையே நடைமுறையில் உள்ளது. வரும் பிப்., மாதத்துக்குள், 72 ஆயிரம் பள்ளிகளில், 'ஸ்மார்ட் போர்டு' வசதி செய்யப்பட உள்ளது. பின், 7,200 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும்.மேலும், 1,000 வார்த்தைகளை கொண்டு, மாணவ - மாணவியர் சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவன், இன்னொரு மாணவனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் போது, அதில் தவறு இருந்தால், ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து, பயிற்சி அளிப்பர்.பள்ளிக்கல்வித் துறையின் நலத் திட்டங்களால், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைஅதிகரித்து வருகிறது. இதுவரை, 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.அடுத்த கல்வியாண்டில், இது, 3 லட்சமாக உயரும்.தமிழகத்தில், 7,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். சில பாடங்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் இல்லாதநிலை உள்ளது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்முறை!!!

சென்னை: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குடம்புளி பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். உடல் எடைகுறையும். தேவையான பொருட்கள்: குடம்புளி - நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி). இடித்த பூண்டு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, தண்ணீர் - ஒரு கப், தேங்காய் பால் - அரை கப், புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, ஐஸ்துண்டுகள் - தேவைக்கு. செய்முறை: புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள். அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள். லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள். இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

காது..

#காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது. ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்? பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான். ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது, காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்

பள்ளித் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க கோரிக்கை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடப்பதால் அன்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றுவிட்டு மறுநாள் (ஜன.3) காலை பள்ளிகளுக்கு செல்வதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று 27-ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் 30-ம் தேதி நடக்கவுள்ளது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள், அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. அதற்கு தற்போது துப்பாக்கிய ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ம் தேதி அதிகாலை தொடங்கி இரவு வரை நடக்க வாய்ப்புள்ளது. இதில் பங

ஒரு நிமிடம் ப்ளீஸ்.!

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.* *அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.* *அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.* *இந்த 4-க்கு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வ

28½ லட்சம் மாணவர்களுக்கு இலவச ஷூ-சாக்ஸ் வழங்க தமிழக அரசு முடிவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது.இந்த கல்வி ஆண்டு முதல் மாணவ-மாணவிகளுக்கு இலவச காலணிக்கு பதிலாக இலவச ஷூ-சாக்ஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒரு ஜோடி கருப்பு நிற ஷூ அத்துடன் ஒரு ஜோடி கருப்பு அல்லது வெள்ளை சாக்ஸ் வழங்கப்படுகிறது. ஏழை-எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு அளவுகளில் ஷூ-சாக்ஸ் தயாராகி வருகின்றன. மொத்தம் 28 லட்சத்து 64 ஆயிரத்து 865 மாணவ- மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. வருகிற கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இலவச காலணிக்கு பதிலாக ஷூ-சாக்ஸ் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.58 கோடியே 36 லட்சம் ஒதுக்கீட

CTET Dec 2019 Exam Result Published

CTET Dec 2019 Exam Result - Click Direct Link... Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The marksheets shall not be dispatched by the Board and the same can be downloaded from the website only.

கியுபா..

இது போன்ற ஒரு தேசத்தைக் கட்டியமைக்கப் போராடுவோமா? --------------------------------------------------------------------------- கியுபா வில் 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது. தனியார் கல்லூரிகளும் கிடையாது. 6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர் களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர் கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவா

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர்  செங்கோட்டையன் செய்தியாளர்கள்  சந்திப்பில் கூறியதாவது:-கோபிசெட்டிபாளையத்தை மாவட்டமாக பிாிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பாா். கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும்.  மாணவர்கள் தண்ணீா் அருந்தும் நேரத்தில் நொறுக்குத்தீனி வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை.  காவிலிபாளையம் ஏரி தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கவும், சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சி-டெட்’ தோ்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகும்: சிபிஎஸ்இ

 நாடு முழுவதும் 2,500 மையங்களில் நடைபெற்ற  கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை ('சிடெட்') ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 'சிடெட்' மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி நிகழாண்டுக்கான 'சிடெட்' தோ்வு 2,500 மையங்களில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெற்ற இந்தத் தோ்வை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 'டெட்' வினாத்தாள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான விடைக்குறிப்புகள்

அழகான வாழ்க்கை எது?

ஒரு முடிவுக்கு வரும் முன்,* *யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.* *ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*  *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.* *ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.* *காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.* *ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.* *ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.* *முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.* *அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.* *காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்

1,747 ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை (தினமணி: 25/12/19)

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவா்கள் ‘டெட்’ எழுதி தோ்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்ச்சி பெறாமல் உள்ளனா். இதைத் தொடா்ந்து தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. மேலும் சம்பள நிறுத்தம், நோட்டீஸ் வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவா்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனா். வகுப்பறையில் அவா்கள் ஒரே பாடத்தை

365 நாளும் அன்லிமிடட் தான்...! - ஜியோவின் புத்தாண்டு பரிசு

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 2020ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 6ம் தேதி மொபைல் கட்டணங்களில் அதிரடி விலை உயர்வை கொண்டுவந்த ஜியோ நிறுவனம் சிலநாட்களிலேயே அடுத்தடுத்து வாடிக்கையாளர்களை கவர தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் 2020ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இலவச ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டட் காலிங் வசதி, அன்லிமிட்டட் எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி நெட் மற்றும் 12000 IUC நிமிடங்கள் போன்றவற்றை 365 நாட்களும் பெற ரூ. 2020 க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இது ஒட்டுமொத்த ரீசார்ஜ் கணக்கிலிருந்து ரூ. 179 குறைவாகும். மேலும் இந்த 365 நாட்களிலும் மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்க எவ்வித இடையூறும் இருக்காது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோவின் இந்த புதிய அறிவிப்பு மற்ற நிறுவனங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. இதனால் விரைவில் மற்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்காக வகுப்பறையில் வித்தியாசமான முறையில் பாடம் நடத்திய ஆசிரியை .!

வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை மற்றும் ஸ்பானிஷ் போன்ற படங்களை கற்பித்து வருகிறார். மாணவர்களுக்கு இவர் நடத்தும் பாடம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இவரது நோக்கம்.இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார். இது குறித்து அந்த ஆசிரியை கூறும்போது, இந்த இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் தன்மையைக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த நான், இதை முயற்சித்துப் பார்ப்பது சிறந்து என்று நினைத்தேன் ' என கூறினார்.

உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். * இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். * கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். * சிறுநீரக பாதையில் ஏத

பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும். வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சிந்தனை..

மனத் திருப்தி.. .................................. ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன. ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கி கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டுசிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.அதைக் கண்ட வழிப் போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார். கல்தச்சர் சொன்னார், *“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..* வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுசொன்னார் - எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா.. தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது.”என்றார்.இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” - வழிப் போக்கர். “50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,, ஐம்பதடி உயரத்தில் இருக்கப்ப

பள்ளி மாணவர்களைப் போல ஆசிரியர்களுக்கும் சுயமதிப்பீடு தேர்வு

at 

பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு நிறைவு: ஜன.3-இல் பள்ளிகள் மீண்டும் திறப்பு.

பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு நிறைவு: ஜன.3-இல் பள்ளிகள் மீண்டும் திறப்பு தி. இராணிமுத்து இரட்டணை Tuesday, December 24, 2019 கோப்புப் படம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தோ்வு திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பின்னா் ஜன.3-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத் தோ்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தோ்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்புக் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தோ்வு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு கடந்த டிசம்பா் 11-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது. இதற்கிடையே சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்கூட்டிய வெளியாகி சா்ச்சையானது. இது தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் தற்போது போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து அரையாண்டுத் தோ்வுகள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (டிச.24) முதல் ஜன.2-ஆம

நந்தி..

சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பார்...... முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன், நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அந்த ஐவர் எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல் என்று கூறி வெட்டி விட்டான்.உடனே பதறிய ஐவரும் அண்ணா  மலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார் உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது

பி.எட்., தேர்ச்சி 80 சதவீதம்; 'டெட்' தேர்ச்சி 0.8 சதவீதம்! கவனிக்குமா கல்வியியல் பல்கலை

தமிழகத்தில் பி.எட்., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெறுவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 0.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் பள்ளி கல்வி போல் கல்வியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.கல்வியியல் படிப்பிற்கு சென்னையில் மட்டுமே பல்கலை உள்ளது. இதன் கீழ் 700க்கும் மேல் அரசு மற்றும் தனியார் பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. தமிழகத்தில் ஐந்தரை லட்சம் பேர் பி.எட்., தகுதியுடன் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் பி.எட்., முடிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.,) அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் அதன் டெட் தேர்ச்சி ஒருசதவீதத்தை கூட எட்டாதது கவலையளிக்கிறது. டெட் தாள் இரண்டை 3,79,733 பேர் எழுதி324 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவேடெட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., பாடத் திட்டத்தை தரமானதாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வியாளர், கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கல