Skip to main content

ஒரு நிமிடம் ப்ளீஸ்.!

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*

*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*

*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*

*இந்த 4-க்கு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*

*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*

*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*

*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*

*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*

*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*

*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*
*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*

*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*

*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*

*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*

*சிந்திப்பீர்*
*செயல்படுவீர்*

*கருத்து:*

*வேகம் என்பது விவேகம் அல்ல.*

*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*

*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*

*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*

*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*

*திருப்புமுனையை செயல்படுத்துவோம.          *.                 விவேகமற்ற அதிவேகத்தில் செல்லும் முன், நமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தால்., வேகம் தானாக குறைந்து விடும்!

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...