Skip to main content

Posts

Showing posts from August, 2020

"TET தேர்ச்சியை நிரந்தரமாக செல்லுபடியாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும்" - செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியை நிரந்தரமாக செல்லுபடியாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை என கூறினார். அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகள் தான் செல்லும் என்பதை மாற்றி நிரந்தரமாக செல்லும் என அறிவிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்றார்.   தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கைப்படும் என்று அமைச்சர் செங்கோட்டைன் எச்சரித்தார். 10,12ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலமாகவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க வேண்டும்

 ஆசிரி யர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை: "தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு வசதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே நடத்தப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி கனவு, கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு உதாரணமாகிவிடாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஓராண்டு கழித்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிதான் தமிழகத்தில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நிய

Today's Thought..

அட்டை போடாத அஞ்சாவது புக்கு என்னைக்கோ கிழிஞ்சுருச்சு ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு  அறிவிப்பு மட்டும் வந்திருச்சி ...  பள்ளிக்கூடம் பூட்டு போட்டு  மாசம் இன்னைக்கு நாலாச்சு.. பிரைவேட்ல படிக்கிறவனுக்கு ஸ்கூல் வீட்டுக்கே வந்தாச்சு..   ஆன்லைன்ல படிக்கிறேன் டா ஆணவமா ஆதி சொன்னான்..  எதிர்வீட்டு கோபி சொன்னான் ரெண்டு ஜிபி தேவைப்படுமாம்..  சட்டையில மட்டுமில்ல அப்பா போன்லயும் ரெண்டு பட்டன் இல்லை .. ஸ்மார்ட் போன் வாங்க காசு இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டி சேர்த்திருப்பார் ..  கூலிக்கு மாரடிக்கும் குருவம்மா எங்கம்மா.. கூறுகெட்ட கொரானாவால வீட்டுக்குள்ளே முடங்கிருக்கா.. அப்துல் கலாம் ஆவன்னா  அரசு பள்ளியில சேர்த்துவிட்டா?ஒருவேல சுடுசோறு தின்பான்னு ஆசைப்பட்டா..  இப்ப சொல்லித் தரவும் ஆளில்லை ..  சோத்துக்கும் வழியில்ல.. கத்துதந்த வாத்தியாரும் அரிசி போட போய்ட்டாராம்..  வறுமை ஒன்னும் புதுசில்ல வாழ்ந்து பார்த்து பழகிடுச்சு .. வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான் வாசல் பார்த்து காத்திருக்கேன்..  மாஸ்க் வாங்க காசு இல்ல கர்ச்சீப் தான் கட்டிக்கிறேன். .  புக்கு மட்டும் குடு சாமி புரட்டி  கிரட்டி  கத்துக்கறேன்.. 

படித்ததில் பிடித்தது..

வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் தோழமைகளே.. 📌📌📌📌📌📌📌 ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று யாரும் சொல்லவேயில்லையே.  தயாராக இருக்கிறோம். உங்கள் கணிப்பை விட அரசாங்கம் சரியாகத்தான் கணக்கிடுகிறது. ஒரு பள்ளிக்கூடம் என்பது குறைந்தபட்சம் 20 முதல் 100 வீடுகளை உள்ளடக்கியது. ஒரு பள்ளியில் சுமாராக 20 முதல் 150  மாணவர்கள் பயிலுகிறார்கள் எனக் கொண்டால், ஒரே ஒரு ஆசிரியருக்கோ அல்லது மாணவனுக்கோ கொரானா தொற்று ஏற்படுமானால் அதன் பாதிப்பு அத்தனை வீடுகளையும் அல்லாமல் பக்கத்து ஊர்களையும் பதம் பார்க்க தோன்றும். இதனால் 100 பேருக்கு தொற்று ஏற்படுவதாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 1 லிருந்து 3 கோடி வரை செலவாகும். அது மட்டுமல்ல உயிர் இழப்புகள் பெரும் கவலையை உண்டாக்கும்.  ஒரு பள்ளியின் நிலையே இவ்வாறென்றால் மொத்த தமிழ் நாட்டின் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் ஏற்படும் பொருளாதார செலவு இலட்சம் கோடிக்கு மேல் நிற்கும்.  இதை கருத்தில் கொண்டு தான் அரசு இவ்வாறு முடிவெடுத்திருக்கிறது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கணக்கெடுப்பு, தேர்தல் நாட்கள், தேர்தல் எ

பெற்றோரே உங்களின் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை வீணாக்காதீர் அனைத்தும் இலவசம் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பீர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி நியமனம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பாவனி வாய்க்காலில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பன் மற்றும் ஆட்சியர் கதிரவன் கலந்துகொண்டு அணையை திறந்துவைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி நியமனம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது” என்றும் தெரிவித்தார். முன்னதாக 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆற

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

  கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித பணிநியமன ஆணையும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முந்தைய பணியையும் பலர் துறந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கில் இவர்களது குடும்ப நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றதனால் ஏராளமான பணி வெற்றிடங்கள் உருவாகியும் தமிழக அரசு ஏன் இதுவரை அவற்றை நிரப்பாமல் வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லக்

7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் 'டெட்' சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். இந்த நிலையில் அவா்கள் பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாகவுள்ளதால், அதை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித்தோவு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தோவு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெற்றாலும், தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்; அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு சொற்ப எண்ணிக்கையில் தோச்சி பெற்றவா்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் 2013-இல் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் போ இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். அதேவேளையில் 60 ஆயிரத்திற்கு

தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்..

60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் 2009-ல் கொண்டுவந்தபோது தேர்வு முறையில் பலமாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டது. 2012 ல் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் 2013 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே அரசாணையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யபட

தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள்

பள்ளிக் கல்வித் துறையில் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களான நிலையிலும் பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர் 800 - க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்கள். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 824 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந் தாண்டு ஜூன் மாதம் போட்டித் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சிப் பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் , ஜன.11 ஆம் தேதி , தற்காலிக தேர்வாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் 697 பேர் மட்டுமே இடம் பெற்றனர். மீதியுள்ள 117 இடங்களுக்கான முடிவு , வழக்குகள் நிலுவையால் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்குகள் முடியும்போது , நிறுத்திவைக்கப்பட்ட 117 ) இடங்களுக்கும் சேர்த்து , இறுதித் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வழக்குகள் குறித்து இது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் , தற்காலிக பட்டியலில் இடம் பிடிக்க முடியாத தி

ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் பணி நியமனம் வழங்குக; சரத்குமார்

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை: "2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது வரை பணி நியமனம் பெறாமல் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆறரை ஆண்டுகளுக்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் பணியினை வழங்காமல் இருப்பதும், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற நிலையில், ஏற்கெனவே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டதால், சான்றிதழ் காலாவதியாவது மட்டுமின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்ற ஐயத்தாலும், மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு வழங்கப்படக்கூடிய ஆயுட்கால சான்றிதழ் போன்று இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து அவர்களுக்கு உதவ முன

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன்

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளத