Skip to main content

Posts

Showing posts from December, 2017

Thought of the day..

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை, 1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி 2. வரையறுக்கப் பட்ட இலக்கு 3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் 4. சரியான கண்ணோட்டம் 5. தன் மீதான முழு நம்பிக்கை 1. *சாதிக்க வேண்டும் என்கிற வெறி:* நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது. 2. *வரையறுக்கப் பட்ட இலக்கு:* தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். 'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப் பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப் படுவதாக) நிர்ணயிக்கப் பட வேண்டும். 3. *விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:* நமக்கு ஏற்படும

TODAY'S THOUGHT..

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*    *இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,* *வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!* *தேவைக்கு செலவிடு........* *அனுபவிக்க தகுந்தன அனுபவி......* *இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....* *இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......* *போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......* *ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .* *மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...* *உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....* *சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.* *உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......* *உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....* *உன் குழந்தைகளை பேணு......* *அவர்களிடம் அன்பாய் இரு.......* *அவ்வப்போது பரிசுகள் அளி......* *அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........* *அடிமையாகவும் ஆகாதே.........* *பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட* *பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*

பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி

பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.அதன் விபரம்:பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம். பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும்.பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும். விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு; ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்த நாட்களுக்குள் (22.12.2017 முதல் 29.12.2017) ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் ““ சிறப்பு அனுமதி திட்டத்தின்“ (தக்கல்) கீழ் ஆன்லைனில் வரும் ஜனவரி 1, 2018ம் தேதி முதல் ஜனவரி 4, 2018க்குல் விண்ணப்பிக்கலாம்.29.12.2017) ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் ““ சிறப்பு அனுமதி திட்டத்தின்“ (தக்கல்) கீழ் ஆன்லைனில் வரும் ஜனவரி 1, 2018ம் தேதி முதல் ஜனவரி 4, 2018க்குல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வு சேவை மையங்கள் ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக ஆண், பெண் தனித்தேர்வர்களுக்கு தனித்தனியே சேவை மையங்கள் (Service Centre) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்

குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை.யில் அறிமுகம்

பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 3, 5, 7 ஆகிய பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை துவக்கம்

குமாரபாளையம், மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற, கிளை துவக்க விழா நடந்தது. மாவட்ட செயலாளர் முருக செல்வராசன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் ஒன்றிய கிளை தலைவராக கண்ணன், செயலாளராக இளையராஜா,பொருளாளராக ரவிக்குமார், ஒன்றிய கொள்கை விளக்கம், மகளிரணி அமைப்பாளர், இலக்கிய அணி அமைப்பாளராக தலைமை ஆசிரியைகள் கோமதி, பாரதி, கவுசல்யாமணி ஆகியோர் உள்பட பலர் பொறுப்பேற்றனர். முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் காலிப் பணியிட விபரம்; இணையத்தில் பதிவேற்ற அவகாசம்..

கோவை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம், நாளை (29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கிறது. நடப்பாண்டில், தொடக்க கல்வித்துறையும் இக்கலந்தாய்வை, ஆன்-லைன் மூலம் நடத்தியது. மாவட்ட வாரியாக, காலிப்பணியிட விபரங்கள் பெற்று, கலந்தாய்வு நடக்கும் முன், இணையதளத்தில் பதிவேற்றுவது வழக்கம். இதற்கு பதிலாக, காலிப்பணியிட விபரங்களை, அந்தந்த பள்ளிகளில் இருந்து திரட்டும் வகையில், இயக்குனர் இளங்கோவன், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, தலைமையாசிரியர்களே இணையதளத்தில், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,www.tndse.com என்ற இணையதளத்தில் கடந்த, 26ம் தேதி வரை, பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும், கால அவகாசம் நாளை (

2018-இல் தமிழகத்தை புயல் தாக்குமா? பஞ்சாங்கம் என்ன சொல்கிறது

முற்காலத்தில் பஞ்சாங்கத்தை வைத்துத்தான், மழை, நீர் வளம், விவசாயம், கோடை இவற்றை கணித்தார்கள். அது ஓரளவு துல்லியமாக அமையும் என்றாலும் சில நேரம் பொய்த்துவிடும். ஆனால், பஞ்சாங்கத் தகவல்களும், கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்து வருவதாக நம்ப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு இறுதியில் ஒக்கி புயல் தமிழகத்தின் தென் தமிழகத்தை குறிப்பாக குமரி மாவட்டத்தை சூறையாடியது. மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. நெல்லை, குமரி மாவட்ட அணைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பருவமழை தாண்டவமாடியது. புறநகரில் வெள்ளம் சூழ்ந்தது. இது முன்பே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. அதே போல வரும் 2018-ஆம் ஆண்டு புயல், மழை எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஹெவிளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஆடி 5-ஆம் தேதி சனிக்கிழமை வருவதால் உலகம் சுபீட்ஷம் அடையும். காலத்தில் மழை பொழியும். தங்க நகை சரிவு ஏற்படும். கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2018-இல் 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 5 காற்றழுத்த மண்டலம் பலகீனம் அடையும், 4 காற்றழுத

உலக ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள். ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

ஒரு எலியும் சாமுராய் வீரனும்..

*ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.* *அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.* *அதிலும் குறிப்பாக..* *ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.* *வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.* *அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.* *ஆகவே...* *சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...* *இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.* *ஆனால்...* *அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.* *முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...* *ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.* *எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.* *முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.* *அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.* *ஆனால்...* *வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.* *அதில் அவனும் காயம் அடைந்தான்.* *‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க