Skip to main content

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை துவக்கம்

குமாரபாளையம், மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற, கிளை துவக்க விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் முருக செல்வராசன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் ஒன்றிய கிளை தலைவராக கண்ணன், செயலாளராக இளையராஜா,பொருளாளராக ரவிக்குமார், ஒன்றிய கொள்கை விளக்கம், மகளிரணி அமைப்பாளர், இலக்கிய அணி அமைப்பாளராக தலைமை ஆசிரியைகள் கோமதி, பாரதி, கவுசல்யாமணி ஆகியோர் உள்பட பலர் பொறுப்பேற்றனர்.
முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments