Skip to main content

Posts

Showing posts from May, 2022

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவசம்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதன முயற்சி

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவசம்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதன முயற்சி அரசு தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவச பள்ளியில் சார்பில் வழங்கப்படும் என ஆசிரியர்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புது முயற்சி கிராம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை  தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இப்பள்ளி, இயற்கை சூழலில் விலாசமான பள்ளி வளாகம், வகுப்பறை கட்டிடங்கள், கல்வி உபகரணங்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து வசதிகளும் இருந்தாலும் அக்கிராமமக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இணைந்து மாணவர்சேர்க்கை அதிகரிக்க முடிவு செய்தனர

இன்றைய சிந்தனை

 இந்த உலகில்  மிக வல்லவராக வலம் வந்த பலரையும்  தந்திரத்தாலும் ,சதியாலும், பொய்யாலும், பொறாமையாலும், வஞ்சகத்தாலும், பணத்தாலும்,  பெண்ணாலும், சொன்னாலும் வீழ்த்தியது என்பது சரித்திரமாகும்.  ஏனெனில்  அவர்களிடம் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது  என்பதால் , அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களை பயன்படுத்தி ,தோற்கடிக்க பட்டவர்களே இங்கு அதிகம்.  எனவே நாம் வெற்றியாளனாக, யாரெல்லாம்  நம் அருகில் இருக்கவேண்டும் , என்பதில் மிக மிக கவனம் தேவை..!!  நம்பிக்கைக்குரிய நபர்களை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலையாகும்,  நாம் நாம் தவறு செய்யும் பொழுது அது தவறு என்று இடித்துரைப்பவனாகவும்,  ஒரு காரியத்தை செய்து  முடிக்க வேண்டும் எனும் பட்சத்தில் , நாம் வெட்டியாய் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போது, நம்மை நெறிப்படுத்தி அக்காரியத்தை வெற்றி பெற செய்பவனாகவும்  நாம் ஒழுக்க நெறி தவறி பயணிக்கும்போது, நம்மை கேள்வி கேட்டு, தவறை உணர்த்தி, திருத்துபவராகவும்,  தன்னுயிர் போனபின்தான்,  தன் நண்பனின் உயிர் போக வேண்டும் என்று, எண்ணத்திலும், செயலிலும் காட்டுபவனாகவும்,  நாம் சில செயல்கள் செய்யும்போது அது தவறாக முடியும் என்று சுட்டிக

அரசுப் பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவா் சோ்க்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தாா் மேலும், மாணவா்கள் இணையதளம் வாயிலாக பள்ளித் திறப்பு, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள் எப்போது நடைபெறும் என்பதை பாா்த்துக்கொள்ள முடியும் என்றும், அதேபோல, விடுமுறை நாள்கள் எப்போது என்ற விவரங்களையும் அறிய முடியும் என்றும் அவா் தெரிவித்தாா். இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக

TET நிபந்தனைகளுக்கும் 16/11/2012க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கும் சம்மந்தமே இல்லை" - முதலமைச்சரின் கருணை மட்டுமே தீர்வு!

  "TET நிபந்தனைகளுக்கும் 16/11/2012க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கும் சம்மந்தமே இல்லை" - முதலமைச்சரின் கருணை மட்டுமே தீர்வு!   RTE சட்டமானது, இந்தியாவில் 23/8/2010 ல் அமலாக்கம் பெற்று இருந்தாலும், 181 ஆவது அரசாணை 15/11/2011ல் வெளிவந்திருந்தாலும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான தெளிவான செயலாக்கங்கள், அதுவும் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழகத்தில் தெளிவற்று இருந்தது. 16/11/2012 க்கு முன்பு வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், 2010 கல்வி மானியக் கோரிக்கையின் போது மொழியப்பட்ட நடைமுறையிகளின் படியே ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. 16/11/2012 க்கு முன்பே, TET கட்டாயம் என்பதை முறையாக தமிழக DEO, CEO க்கள் மற்றும் பள்ளி செயலாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்காதமையாலேயே அன்றைய காலகட்டத்தில் சுமார் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். பணி நியமனம் பெற்று பல மாதங்களுக்கு பின்னர் முன் தேதியிட்ட செயல்முறைகள் மூலமாக கடந்த ஆட்சியாளர்கள் TET நிபந்தனைகளில் இந்த 1500 ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர். இதே காலகட்டத்தில் பணியில் சேர்ந்த

பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 5 அசத்தல் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 1. மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள்‌ தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று (Person Studied in Tamil Medium- PSTM)‌, கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள்‌ சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை/ பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ பெறும்‌ நிலை உருவாக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சேவைகளும்‌ ஜூன்‌ 2022க்குள்‌ இணைய வழியில்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக வழங்கப்படும்‌. 2. மின்பதிவேடுகள்‌ (eRegisters) ஆசிரியர்களின்‌ நிர்வாகப் பணியை சூறைப்பதற்காக தற்போது நடைமுறையில்‌ இருக்கும்‌ 100க்கும்‌ மேற்பட்ட பதிவேடுகளை கணினிமயமாக்க அரசு ஏற்கனவே

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை! தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாகவே கல்வியாண்டு தொடங்கப்பட்டது. அதனால் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடைபெற்றது. இந்த கல்வியாண்டு ஜூன் 20க்குள் தொடங்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் வேண்டாம் என்றும் ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டும் தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது. அதன் பின்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனால் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்

படித்ததில் பிடித்தது..

 ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்  நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள். ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்” எனறான் அந்த சிறுவன். ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக  “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும்

2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

  2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண் . Phase-X/2022/Section Posts தேர்வு பெயர் : SSC Selection Post Exam- 2022 மொத்த காலிடங்கள் : 2074 பணி: MTS பணி: Fieldman பணி: Junior Scientific Officer பணி: Fertilizer Inspector பணி: Junior Geological Assistant பணி: Data Entry Operation பணி: Chargeman பணி: Technical Officer பணி: Pharmacist பணி: Nursing Assistant பணி: Account Clerks பணி: Farm Assistant பணி: Cleaner பணி: Radio Technician பணி: Canteen Assistant பணி: Mechanic பணி: Electrician பணி: Welder பணி: Medical Assistant பணி: Library Assistant பணி: Seed Analyst பணி: Sub Editor பணி: Staff Car Driver பணி: Head Clerk பணி: கரெட்டாக்கர் சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவார

_*01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!*_ ☝️☝️☝️

 _*01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!*_

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் எப்போது ? TRB press Release

 முது கலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!!

வாழ்க்கை..

*எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!* *கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!* *உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!* *கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!* *சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!* *பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!* *இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!* *உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்...!!* *கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்...!!* *மகி

வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் - தமிழ்நாடு அரசு வெளியீடு

  வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் - தமிழ்நாடு அரசு வெளியீடு  த மிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், 2022-04-30 வரை வேலை வாய்ப்பிற்காக பதிவுதாரர்களது விவரங்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி, அரசு வேலைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 35,67,000 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினம் 239 பேர் என மொத்தம் 76,35,059 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் வயது வாரியான விவரங்களும் வெளியாகியுள்ளது.

சிரித்துவிடுங்கள்..

யாராவது உங்களை  அவமரியாதை செய்தால்  நீங்கள் பலவீனமாகஉணர்கிறீர்கள்!!. தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்!!. எப்படிப் பழி வாங்குவது என்று  யோசிக்கத் தொடங்குகிறீர்கள்.... அந்த மனிதன் உங்களைக்  கைப் பற்றிவிட்டான்.... மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்.... மற்றவர், அது தாய் தகப்பன், நண்பர், உறவினர் யாராக இருந்தாலும்,  உங்களை அவமரியாதை செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை... அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல் இருக்கும்... யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்.... இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்....  இது உங்களைக் காயப்படுத்தி விட அனுமதிக்காதீர்கள்.... 24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்... யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.... பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்....  என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.... நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்.... ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்... வருத்தங்கள், எதிர்ப்புகள், பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந

SGT-BT Promotion - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியை கட்டாயமாக்கக் கோரி வழக்கு!!!*_

 SGT-BT Promotion - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியை கட்டாயமாக்கக் கோரி வழக்கு!!!

மீண்டும் அகவிலைப் படி உயர்கிறது ??

  மீண்டும் அகவிலைப் படி உயர்கிறது ??

இன்றைய சிந்தனை..

லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிட்டிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசிவரை அந்த உடல் கிடைக்கவே இல்லை. பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார். ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர். பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்க

TNPSC GROUP 02/2A Hall Ticket published - How to get the hall Ticket?

  TNPSC GROUP 02/2A Hall Ticket published - How to get the hall Ticket? TNPSC Group II Hall Ticket TNPSC GROUP 02/2A Hall Ticket published. How to get the hall Ticket?: ----------------------------------- ** Login your OTR ** Go to Dashboard ** Click - Download Hall TKT folder ** Given your Application number & DOB ** Then download hall ticket and save it in your mail id for future reference.  All the best. CLICK HERE TO DOWNLOAD-HALL TICKET

இன்று இருப்போர் நாளை இல்லை..

*கர்மா பொல்லாதது.............* *கா்மாவை வெல்ல யாராலும் முடியாதது...........* *இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்...........* மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார்.  ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்.  ஆனால்,  ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்............ எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்........ ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க........     ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்......... எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே......... ராஜீவும், பிரபாகரனும், தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள். அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்........... ஈவ

WHATSAPP - Group Adminகள் இனி யாருடைய Messageகளையும் Delete செய்யலாம்.. New Update

  WHATSAPP  Group Adminகள்  இனி  யாருடைய Messageகளையும்  Delete செய்யலாம்.. New Update   Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப்களில் மேற்கொள்ளப்படும் சாட்கள் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அட்மின்களுக்கு அதிகாரம் வழங்குவதாக இது அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வாட்ஸ் அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்த வசதிகள் இடம்பெற உள்ளன. "'This Was removed by an admin’’ ( இந்த   மெசேன்   அட்மின்   ஒருவரால்   டெலீட்   செய்யப்பட்டது )  என்ற   வாசகம்   அந்த   மெசேஜை   அனுப்பிய   யூஸருக்கு   காண்பிக்கபடும்   என்று   தெரிவிக்கப்பட்டுள்ளது .

நிம்மதி எங்கே இருக்கிறது...

ஒரு மனிதன்.... எந்தக் குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை...  சிரமப்பட்டான்... அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...  அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...  போய்ப் பாருங்கள்!" ஆசிரமத்துக்குப் போனான்... பெரியவரைப் பார்த்தான். ஐயா....  மனசுலே நிம்மதி இல்லே...  படுத்தா தூங்க முடியலே!" அவர் நிமிர்ந்து பார்த்தார்... தம்பி...  உன் நிலைமை எனக்குப் புரியுது...  இப்படி வந்து உட்கார்!" பிறகு அவர் சொன்னார்: உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது... தெரிந்தா உன் நிம்மதி போயிடும்! அது எப்படிங்க? சொல்றேன்...  அது மட்டுமல்ல...  மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்! ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே! புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசிரமத்தில் விருந்து சாப்பிடு. வயிறு நிறையச் சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,  இதில் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்... கதை

பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

  பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்    திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது,   கல்வியின் தேவையை உணர்ந்து, கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை செயல்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. அதை சரி செய்யக்கூடிய முயற்சியில் தமிழக முதல்-அமைச்சர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின்

அன்னையர் தினம்..

கருத்தரித்த நாள்முதலே கண்இமைபோல் காத்தவளே வேதனையில் உன் பிரசவம் என் மண்ணுலக பிரவேசம்.  பிஞ்சு விரல் நீவி அஞ்சி கை ஏந்தி நெஞ்சில் அரவணைத்து கெஞ்சி பாலூட்டி நாளும் குளிப்பாட்டி ஆடை அணிவித்து அலங்காரம் செய்வித்து தமிழன்னை துணைக்கழைத்து தாலாட்டி தூங்கவைத்தாய்.  பள்ளிப் பருவத்தில் அள்ளி முத்தமிட்டு அறிவாலயம் அனுப்பி வைப்பாய் கற்றுயர கனவுகண்டாய். இறைவேண்டி வாழ்த்தி நிற்பாய்.  சற்றே வளர்ந்தவுடன் உயர்கல்வி பெற்றிடவே வழி வகுப்பாய். சான்றோன் எனக்கேட்டு ஈன்றபொழுதிற் பெரிதுவப்பாய்.  பணியமரப் பார்த்து                    இனிமை கொள்வாய் பெருமை பேச உரிமை கொள்வாய்.  தனித்துவாழ பயிற்சி தாரம் தந்து  முயற்சி இல்லறத்தில் இறக்கி கிளைகள் தர வேண்டுவாய்.  அழுதால் பொறுக்காத அன்னை அனலை அரவணைத்த பின்னும்   நினைவில் வாழும் போதும் நிழலாய் தொடருபவள் என்னை. *அன்னைதான் முதல் கடவுள்* *அன்னயின் ஆசி இருந்தால் மற்ற அனைத்து தெய்வங்களின் ஆசி கட்டாயம் கிடைக்கும்* *கண்ணுக்கு முன் இருக்கும் அன்னையை போற்றுவோம்*

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக கொடூரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது பள்ளிக்கல்வித்துறை. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் அனைவரும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்த

ஜூன் 23ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மே 5) துவங்கியது. தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவர். பிளஸ் 2 தேர்வுகள் மே 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் ஜூன் 23ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.  1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிந்தனை..

இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக்கவலை, மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர். வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.  அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும். கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார்.  ஒரு வீதியில் செல்லும் போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார். “அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்கு பதில் அளித்தான்.  மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான். இளைஞனின் அம்மாவிடம், “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்!

  அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்!   அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. குழந்தைகளின் ஆங்கில வாசிப்பை குதூகல அனுபவமாக்க Read Along மூலம்  கூகுள் Google நிறுவனத்துடன்  பள்ளிக் கல்வித் துறை இணைகிறது.

TODAY'S THOUGHT..

 அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........ * அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது.. * 1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். * 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும். * 3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்..... * இது தான் அந்த விதிமுறைகள்.... * * இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.. * "கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்... * முதல் தளம் அறிக்கை பலகையில், * >இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்< * "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்". * இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்... * * இரண்டாம் தளம் அறிக்கை பலகையில், * >>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<< * "வேலை உள்ளவர்கள்"

Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு முழுநேர  முனைவர் பட்டப்படிப்பு பயிலும் SC / ST / SS மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! அரசாணை ( நிலை ) எண் : 96 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துறை நாள் 25.11.2021 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு தலா ரூ .1,00,000 / - வீதம் 2021-2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2021-2022 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயின்ற ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Ph.D Scholarship Application And Instructions - Download here...

தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள்..

வெற்றி என்றால் என்ன? ஆக்ஸ்போர்ட் அகாரதிப்படி, வெற்றி என்பது ஒருவரது இலக்கை அல்லது நோக்கத்தை அடைந்தது என்று பொருள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வெற்றி, தோல்வியின் மறுமுனையில் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.  ஒரு தோல்வியில் இருந்து நீங்கள் மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். அது உங்களின் விருப்பம்.  வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும் மரியாதையைப் பெற்றுத் தரும்,  ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின் இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர்.  நீங்கள் முன்னேறிச் செல்ல நினைத்தால் முதலில் தோல்வியில் இருந்து நகர்ந்து செல்லுங்கள். அதைப்பற்றி நினைத்து புலம்புவதால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு நிரந்தர பாதிப்பை அடைய வாய்ப்பு உள்ளது. நேர்மறையாக சிந்தியுங்கள். ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஒ சர் தாமஸ் ஜே வாட்சன், வார்த்தைகளின் படி,,  “வெற்றிக்கான ஒரு ஃபார்முலாவை என்னிடம் கேட்டீர்கள் என்றால் அது மிகவும் சுலபம் என்பேன். உங்களின் தோல்வியை ரெட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாகப் பார்க்கிறீர்கள், ஆனால் அது உண்மையல்ல.  நீங்கள் தோல்வியால் துவண்ட

2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 12 வாரத்தில் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 12 வாரத்தில் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  👇👇👇👇👇👇 Click here to download -pdf

18 நாட்கள் போர்..

   திரௌபதிக்கு தனது வயது     80 ஆனது போல இருந்தது...     உடல் ரீதியாக      மற்றும் மனரீதியாகவும் கூட    அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந் தனர்.     ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.     அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத் தைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.     பிறகு,     ஸ்ரீ கிருஷ்ணர்     அறைக்குள் நுழைய     திரௌபதிகிருஷ்ணரைப் பார்த்ததும்ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...     கிருஷ்ணா அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத்தொடங்கினாள்.      நேரம் மெல்ல நகருகிறது.     அவளிடமிருந்து விலகி     பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.     "திரௌபதி,என்ன நடந்தது?"     "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"     கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..     நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"     அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.     முடிவுகளையும்  மாற்றுகிறது.     நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!     உன் பழிவாங்கல் முடிந்தது...