Skip to main content

அன்னையர் தினம்..

கருத்தரித்த நாள்முதலே

கண்இமைபோல் காத்தவளே

வேதனையில் உன் பிரசவம்

என் மண்ணுலக பிரவேசம். 


பிஞ்சு விரல் நீவி

அஞ்சி கை ஏந்தி

நெஞ்சில் அரவணைத்து

கெஞ்சி பாலூட்டி

நாளும் குளிப்பாட்டி

ஆடை அணிவித்து

அலங்காரம் செய்வித்து

தமிழன்னை துணைக்கழைத்து

தாலாட்டி தூங்கவைத்தாய். 


பள்ளிப் பருவத்தில்

அள்ளி முத்தமிட்டு

அறிவாலயம் அனுப்பி வைப்பாய்

கற்றுயர கனவுகண்டாய்.

இறைவேண்டி வாழ்த்தி நிற்பாய். 


சற்றே வளர்ந்தவுடன் உயர்கல்வி

பெற்றிடவே வழி வகுப்பாய்.

சான்றோன் எனக்கேட்டு

ஈன்றபொழுதிற் பெரிதுவப்பாய். 


பணியமரப் பார்த்து                    இனிமை கொள்வாய்

பெருமை பேச

உரிமை கொள்வாய். 


தனித்துவாழ பயிற்சி

தாரம் தந்து  முயற்சி

இல்லறத்தில் இறக்கி

கிளைகள் தர வேண்டுவாய். 


அழுதால் பொறுக்காத அன்னை

அனலை அரவணைத்த பின்னும்  

நினைவில் வாழும் போதும்

நிழலாய் தொடருபவள் என்னை.


*அன்னைதான் முதல் கடவுள்*


*அன்னயின் ஆசி இருந்தால் மற்ற அனைத்து தெய்வங்களின் ஆசி கட்டாயம் கிடைக்கும்*


*கண்ணுக்கு முன் இருக்கும் அன்னையை போற்றுவோம்*

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. உசார் மக்களே......


    நீங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்....


    வழக்கு போட்டு வெற்றி பெற்றுவிட்டால்....


    2017.....2019...ல்
    தேர்ச்சி பெற்ற....
    தன்னோட.....
    மனைவி.... தங்கச்சி
    ஆகியோருக்கு வேலை வராது என்று


    2013ஐ....வழக்கு போட வேண்டாம் என்று...

    சில விஷமிகள்.....
    நண்பரைப்போல....
    கூட இருந்து கொண்டே .... நடித்து

    வழக்கு போடுவதைதக் கூட தடுத்து வருகின்றார்கள்.


    வழக்கு போடாத
    அவர்களுக்கு .... ஒரு ரூபாய் கூட செலவு இல்லை.

    ஆனால்

    நீங்கள் 2013 வழக்கு போட்டால் .... அவர்கள் ஏன் வந்து தடுக்க வேண்டும்?


    வழக்கு போடாத
    அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட....

    நஷ்டம்மே...... இல்லை.
    ஆனால் அவர்கள் ஏன் வழக்கு போடுபவர்களை தடுக்க வேண்டும்.


    யாராவது...
    Go.149வேண்டும்....
    என்றோ....
    இன்னொரு தேர்வு வேண்டும்.....
    என்றோவா....

    வழக்கு போடப் போகின்றார்கள்...?
    இல்லை அல்லவா

    அப்படி இருக்கும் போது

    இன்னொரு தேர்வு வேண்டாம் என்று வழக்கு போட....
    செல்பவர்களை....
    தடுத்து.....2013ஐ அழித்து...

    2013க்கு முன்பே....
    2019லாம்....
    வேலைக்கு போக....

    இன்னொரு தேர்வு வேண்டும் என்று...

    2019ல் தேர்ச்சி பெற்ற மனைவியை
    வைத்துக் கொண்டு இருக்கும்
    2013ல் தேர்ச்சி பெற்றவர்களே....
    விரும்புகின்றார்கள்.
    2019ல் pass ஆன மனைவி கூட... வேலை வாங்கட்டும்
    என்று
    போட்டி தேர்வு வேண்டும் என்று

    2013ஐ வழக்கு
    போட விடாமல்
    தடுக்கின்றார்கள்.


    இது தான் 100% உண்மை

    ReplyDelete
  3. இப்போதே.....

    இந்த இரண்டு வழக்கு போடவில்லை என்றால்....

    போட்டி தேர்வு அறிவிப்பு வந்த பிறகு
    ஒன்னும் மே....
    செய்ய முடியாது.



    வழக்கு போடும் போது....
    கீழ் கண்டவாறு மட்டுமே....


    பிரேயர் மற்றும்
    கிரவ்ண்டு....இருக்கா என்று....100% உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இது 100% முக்கியம்.
    இந்த கீழ்க்கண்ட வரிகள்.... மாறாமல்...

    அப்படியே.... சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும்.


    பிரேயர் மற்றும் கரவ்ண்டு இதோ....

    {100 சதவீதத்தில்
    50% பேர் பழைய வெயிட்டேஜ் முறைப்படி... ஆசிரியர் ஆகி சிறப்பாக
    வேலை செய்து வருகின்றனர்
    ஆகவே
    மீதமுள்ள 50%பேர் எங்களுக்கும் இன்னொரு போட்டி தேர்வு நடத்தாமல்... பழைய முறைப்படியே....
    வேலை கொடுக்க வேண்டும் என்று வழக்கு போடுங்கள்.
    மேலும்
    இந்த மீதமுள்ள எங்கள் 50%பேருக்கும்....
    பழைய முறைப்படி வேலை கொடுக்காமல்
    பழைய முறையை ரத்து செய்ததால்...
    எங்களுக்கு 50%பேருக்கு பழைய முறைப்படி வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளோம்.ஆகவே ரத்து செய்ததால் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மீதமுள்ள எங்களுக்கு
    வேலை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு வழக்கு போட்டால் மட்டுமே உடனே வெற்றி பெறும்.

    நீதிபதி.... இப்படி சொல்வார்.

    பழைய முறையை இவர்கள் கேட்கிறார்கள்
    புதிய முறையை அரசு நீங்கள் கேட்கிறீர்கள்.

    {( பழைய முறையே சரி தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.தமிழக அரசும்...
    பழைய முறையே சரி என்று...
    உச்ச நீதிமன்றத்தில்
    பதில் கூறி உள்ளது.
    ஆகவே இப்போது...
    பழைய முறையை ரத்து செய்ய என்ன காரணம் என்று அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும்..
    இதனால்.. ரத்து செய்ததால்..பழைய முறைப்படி வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற வரியைக் கண்டிப்பாக வழக்கில் சேர்க்க வேண்டும்.)}


    ஆனால்
    Go149 ...எங்களுக்கு 2013க்கு பொருந்தாது...
    அரசு கொண்டு வந்தது தவறு.
    G.o.149 கொண்டு வர அரசுக்கு உரிமை
    இல்லை

    இவ்வாறு வழக்கு போட்டால் ... தோல்வி தான் ஆகும்.


    பழைய முறையை
    ரத்து செய்து,புதிய முறை வந்து விட்டது என்று அரசு சொன்னால்....
    பழைய முறையில் வேலைக்கு சென்றவர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை யா? என்றும்... பழைய முறையை ரத்து செய்ய என்ன காரணம்?
    முறைப்படி வேலை கிட



    இவ்வாறு இரண்டு வழக்கு போடவில்லை என்றால்....

    ReplyDelete
    Replies
    1. பழைய முறை போட்டாலும் 2013 க்கு மட்டும் போட முடியாது....

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...