Skip to main content

Posts

Showing posts from October, 2019

உறவும் நட்பும்..

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் இறைவனை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான். பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான்.

மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகத்திற்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?

சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து மாத இறுதியில் தனுசு ராசிக்கு நகர்கிறார். ராகு மீனம் ராசியிலும் சனி கேது குரு கூட்டணி தனுசு ராசியிலும் இணைந்துள்ளது. இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. கந்த சஷ்டி விரத காலம் இது நவம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி நவம்பர் 5ஆம் தேதி திருக்கணிதப்படி நடைபெறுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். நவம்பர் 9ஆம் தேதி சனி மகா பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் விஷேசமானது. நவம்பர் 12ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறும். நவம்பர் 13 ஆம் தேதி கிருத்திகை விரதம். நவம்பர் 24 தேய்பிறை பிரதேஷம். நவம்பர் 26 கார்த்திகை அமாவாசை இந்த கிரக சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராச

இன்று மழை வரும் 24 மாவட்டங்கள்!

சென்னை: அரபிக் கடலில், 'மஹா' புயல், உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில், 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 24: தென் மாவட்டங்கள் அனைத்திலும், இன்று கன மழை இருக்கக் கூடும். வட மாவட்டங்களில், ஆங்காங்கே மழை இருக்கும். என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை: மழை பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பாக, முடிவெடுக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சூழலுக்கேற்ப முடிவெடுப்பர் என, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அன்பளிப்பு..

“பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு ! அப்போது அவருக்கு வயது 11 ;  அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான் ! அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் ,  அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம். அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் : “எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ;  ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார்.  ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன்.  அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால்,  வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான். அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார். பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார். அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி , பதவியில் இருப்பவர்கள் , பரிசுப்

நீர்த்துபோன செயல்வழிக்கற்றல், அலுவல் வேலை, EMIS எனும் பூதம்,கற்றல் நேரக்கொள்ளை,பயிற்சிகள் குறித்த.. வாசிக்க வேண்டிய கட்டுரை!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்க்க 3,833 பேர் அழைப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குநர் நிலை-1 பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப். 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 154 தேர்வு மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். அதன்பின்னர் தேர்வுகளில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் விவரங்களை டிஆர்பி கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,150 பணியிடங்கள் உள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக தேர்ச்சி பெற்ற வர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப் பட்டுள்ளது. அதேநேரம் இந்திய கலாச் சாரம், உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் மற்றும் இடம் விவரங்கள் விரைவில் அறிவிக்கப

TODAY'S THOUGHT..

போர்வெல்லில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, பிதுங்கி வழியும் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைக்கு தகப்பன் ஒருவன். போர்வெல் குழந்தைக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி பிள்ளைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றான் ஒருவன். போர்வெல்லை மூடாதவனை திட்டிக்கொண்டே ஒன்வேயில் பைக்கை ஓட்டிச் சென்றான் ஒருவன். லஞ்சம் வாங்கிக்கொண்டு பஸ்ஸுக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கிறான் ஒருவன். சந்திராயனுக்கும் போர்வெல்லுக்கும் முடிச்சுப் போட்டு அரசாங்கத்தை திட்டிக்கொண்டே 1500 ருபாய்க்கு டிக்கெட் எடுத்து கூத்தாடியின் சினிமாவை பார்க்க சென்றான் ஒருவன். சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒருவன். மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து அப்லோட் செய்கிறான் ஒருவன். மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு,

PGTRB - தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : TRB அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக தேர்வான பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான முக்கிய ஆவணங்களை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது. சான்றிதழ் சரிபார

பள்ளி வளாக ஆழ்துளை கிணறுகள் ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும்,ஆழ்துளை கிணறுகள் இருந்தால், அவற்றின் குழிகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், பயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, பொது இடங்கள், வீடுகள், தெருக்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து, பயன்பாட்டில் இல்லாதவற்றை மூடும்படி, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது: * பள்ளி வளாகங்களில், தற்போது பயன்பாட்டில் உள்ள, ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும் * பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை நிரந்தரமாக மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும் * மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இட

சுர்ஜித்..

அழுவாமல் இரு....!      அம்மா இருக்கிறேன் என் கண்ணோ....!    நீ அழுவாமல் இரு.....! என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்த தாயின் அழுகுரல்.....! செத்த நேரம் அழுவாமல் இரு என்று உனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே..... மகப்பேறுவின் மறு வலியை அனுபவித்து கொண்டிருக்கிறாள் ஒரு தாய்.....! என் அம்மா இருக்கிறாள்   என்ற நம்பிக்கையோடு தன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையிலும் ஒரு நம்பிக்கையில் அவள் குழந்தை...! 7000 அடி குழிக்குள் இருக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க கருவியிருக்கும் என் அரசிடம்.... 70 அடி குழிக்குள் விழுந்த என் மகனை மீக்க கருவியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு.....! 14 பேரை குற்வைத்து இலக்கு மாறாமல் துப்பாக்கி முனையில் வேட்டையாடிய என் அரசிடம்.... 24- மாத என் மகனை மீக்க வழியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு......! 8 வழி சாலைக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் சுற்றி வளைக்க தெரிந்த எம் அரசுக்கு.... உன்னை எப்படி மீட்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு ......! கூவத்தூரில் குரூப் டான்ஸ்   போட மட்டும் தெரிந்த எம் அமைச்சர்களுக்கும் ஆட்சியாள

பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான '‌ஷூ' அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

குரு பெயர்ச்சியில் கொட்டப் போகுது பண மழை! எந்தெந்த ராசிகளுக்கு யோகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். குருபகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர்ப்பார்வையாக பார்ப்பார். இது மட்டுமல்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சமப் பார்வையின் மூலம் பார்ப்பார். குருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2, 11 ஆகிய ராசிகளின் மீது படும். ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குருப்பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி. அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால், குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது. விதியை மாற்றும் வல்லமை, குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், தடையற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதைத்தான் நாம் யோகம் என்கிறோம். மங்களகரமான விக

தீபாவளி ஸ்பெஷல் !

அம்மா ! என் அம்மாவும் தீபாவளியும்🙏👍👌😥😇😂😊👏👇👔👖👗👨‍👩‍👦‍👦 தீபாவளிக்கு முன் தினம் எங்கள் வீடு ரங்கநாதன் தெரு போல படு பரபரப்பாக இருக்கும் மறு நாள் வெந்நீர் போட அண்டாக்கள் கழுவி துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு கங்கா ஜலத்தை வரவேற்க தயாராக பளபளவென தயாராக இருக்கும் 🍶 செக்கு நல்லெண்ணெய்யும்  சீயக்காயும் புதிதாக தனித்தனி மூடியிட்ட பாத்திரங்களில் முன் தினம் இரவே சுவாமியறையில் தஞ்சமடைந்திருக்கும்😂🍯 அவரவர் துணிகளை அவரவர் எடுத்து வைத்திருப்போம் அப்பா அதிலே மஞ்சள் குங்குமம் இட்டு சுவாமி முன்பு விரித்தருக்கும் பேப்பர் மேல் அழகாக அடுக்கி வைப்பார்👗👔👖👕👚👘 பட்சண வகையறாக்களை எனது அம்மா முன் தினம் இரவே சுவாமி முன்பு அழகுற வரிசையாக வைத்து விடுவார் 🍏🍎🍐🍊🍋🍋🍌🍉 எனது வேலை பட்டாசு வாணங்களை பட்சண புத்தாடை அணிவகுப்புடன் அழகுற சேர்ப்பதே அந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏👍✊🤞🏃🕶 ஒவ்வொரு பட்டாசாக மிக அழகாக அடுக்கி வைப்பேன் கடைகளில் கூட அந்த நேர்த்தியிராது எனது ஆவல் தீருமட்டும் அதனை கண்டு ரசிப்பேன்😊🐕 அதிகாலை குளியலுக்கு எங்களை தயார் படுத்த மனைகட்டை துண்டு முதலி

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும்நன்மைகள்! ! ! !

1. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. 2. இருதயம், கல்லீரல், சிறுநீரகம்,கண்கள் மற்றும்இரத்த நாளங்களில்உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. 3. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம்,குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. 4. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். 5. நீர்க்கடுப்பு: ஏப்ரல், மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். 6. சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்புஉண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர, 5 நாளில் அவை நீங்கும்.. 7. உடம

குரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

குரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப் போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதி நிகழப்போகிறது. குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் தனுசு ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார். குருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது யாருக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்க்கலாம். எந்த ராசிக்கு எந்த குரு, மேஷம் - பாக்ய குரு ரிஷபம் - அஷ்டம குரு மிதுனம் - களத்திர குரு கடகம் - ருண ரோக சத்ரு ஸ்தான குரு சிம்மம் - பூர்வ புண்ணிய குரு கன்னி - சுக ஸ்தான குரு துலாம் - தைரிய குரு விருச்சிகம் - குடும்ப குரு தனுசு - ஜென்ம குரு மகரம் - விரைய குரு கும்பம் - லாப குரு மீனம் - தொழில் ஸ்தான குரு இந்த குரு பெயர்ச்சியால் கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும், சிலருக்கு திருமண பாக்கியமும், குழந்தை பாக்கிய தடை உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கை கூடி வரும். குருவினால் கிடைக்கப் போகும