Skip to main content

Posts

Showing posts from March, 2018

TET Weightage Calculator - Android App Avalable in Google Play Store

TET Weightage Calculator - Android App Avalable in Google Play Store   https://play.google.com/store/apps/details?id=com.shivtech.tetcalculator         நடந்து முடிந்த TET தேர்வில் தேர்வர்கள் பெற்ற Weightage Marks ஐ மிக எளிதாக கணக்கீடு செய்ய பாடசாலை வலைதளம் எளிய ஆன்ட்ராய்டு ஆப் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: ⏩  இணைய இணைப்பு இல்லாமலே துல்லியமாக செயல்படும் TET Weightage Calculator ⏩ TET தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறும் Push Notification வசதி ⏩ TET Certificate Verification செல்ல உதவும் பயனுள்ள படிவங்கள் ⏩ TET Study Materials

TNTET Exam 2017 - Paper 1 & Paper 2 - Comparison Forms

TNTET 2017 - Paper 2 TNTET Paper 2 Wegihtage Marks - Enter Here TNTET Paper 2 Weightage Marks - View Here TNTET 2017 - Paper 1 TNTET Paper 1 Wegihtage Marks - Enter Here TNTET Paper 1 Weightage Marks - View Here

மதிப்பீட்டை உயர்த்தும், ஸ்மார்ட் கார்டு வரும் கல்வியாண்டில் வழங்கப்படுமா?

கோவை : &'எமிஸ்&' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், &'ஸ்மார்ட் கார்டு&'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளம் மூலமாக, கடந்த 2012ல் இருந்து திரட்டப்படுகிறது. இதை ஒருங்கிணைத்து, ஆதார் எண் சேர்க்கும் பணிகள், 99 சதவீதம் முடிந்தது. மேலும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, மாணவர்களுக்கு அடையாள அட்டை உருவாக்கும் வகையில், பிரத்யேக செயலி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், மாணவர்களின் புகைப் படத்தை பதிவேற்றி, பெயர், வகுப்பு, பிரிவு, ரத்த வகை, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை வடிவமைக்கப்படும். இதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சீருடையும் மாறுவதால், அடையாள அட்டை வழங்கினால், அரசுப்பள்ளி

இன்று வங்கிகள் இரவு 8 மணிவரை செயல்படும்

சென்னை: வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று (மார்ச்:31) கடைசி நாள் என்பதால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. .

TODAY'S THOUGHT..

||| மன முதிர்ச்சி என்றால் என்ன?       What is *Maturity of Mind* ? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1.Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the com

தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் பணி காரணமாக 30க்கும் குறைவானரே பங்கேற்றனர்.மார்ச் 26ல் நடந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் தேர்வு காரணமாக மாணவர்கள் பங்கேற்கவில்லை.இந்த நிலையில், &'கேலோ இந்தியா&' மாநில விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட மகளிர் அணி தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 30க்கும் குறைவான மகளிரே பங்கேற்றனர்.

அரசு இலவச நீட் தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

தமிழக அரசு சார்பில், &'தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம், அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்கு திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. ஏப்.,5 முதல் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், சேர்வதற்காக பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போது, பள்ளிக்கு ஒருவரை அனுப்பினால் போதும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து பேர் வீதம், மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொடுத்த நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே அனுமதி, என்ற கல்வித்துறை உத்தரவால் மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பாடங்களுக்கும், தேர்வுக்கு முன், வினாத்தாள் லீக் ஆனதால், மறு தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் இருந்து, டில்லி போலீசில், மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது, சிறப்பு பிரிவு, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்டமாக, இணையதளத்தில் பரவிய வினாத்தாள், சைபர் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அதில், இடம் பெற்ற, கணினி ஐ.பி., எண் வழியாக, சிலரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் உள்ள சில பயிற்சி மையத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சிலர், விசாரணையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, மறுதேர்வ

பெண் புறா..

எங்கள் வீட்டின் செடிகளின் நடுவே ஒரு புறா முட்டையிட்டிருந்தது. எனக்கு புறா என்றால் பிடிக்காது, ஒவ்வொரு வாரமும் வீட்டின் பால்கனியை சுத்தப் படுத்துவோர்க்கு புறாவை கண்டிப்பாக பிடிக்காது.  அது மோதியின் ஸ்வச்ச பாரத் எப்பவும் எதிரி. எங்கும் எச்சம் இட்டு அசுத்தபடுத்திக் கொண்டே இருக்கும். எனவே என் பரம் எதிரி.  நான் தான் முதலில் அதை பார்த்தேன்.  ஆனால் ஜைன மதத்தை சேர்ந்தவன் என்பதால் அதை தூக்கு எறிய முடியாது.  வேறு யாரிடமும் சொல்லி அதை வேறெங்காவது அப்புற படுத்தி விட நினைத்தேன்.  ஆனால் என் மனைவி பிடிவாதமாக மறுத்து விட்டாள். யாராவது அந்த முட்டையை தொட்டு விட்டால் அது குஞ்சு பொறிக்காது என்று வாதிட்டாள். பிறகு என்ன அந்த பெண் புறா வந்து அழகாக அந்த முட்டையின் மேல் அமர்ந்து கொண்டது. அனைவருக்கும் அங்கே போக 144 தடை உத்தரவு போட்டு விட்டாள்.  தினமும் காலை எழுந்தது முதல் அங்கே ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள். தினமும் புறா புராணம் எங்கள் வீட்டில், அந்த புறா தண்ணீர் குடிக்கவில்லை, ஏதும் உண்ணவில்லை என்ன செய்வது. 3 வது நாளில் இருந்து எனக்கும் ஆர்வமும் பரிதாபமும் வர, நானும் எட்டி பார்த்து கொண்டே இருந்தேன். 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட்டுள்ளது. கடந்த, 2014க்கு முன் துவக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் இருந்து, அனுமதி பெற்று, இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, பள்ளிகள் பெற, கடந்த மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. இது குறித்து, வேலுார் மாவட்ட சி.இ.ஓ., மார்ஸ் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில், மொத்தம், 42 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில், 18 பள்ளி கள், மாநில அரசின் அங்கீகாரமின்றி இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, மூன்று மாதத்திற்குள் பெறாவிட்டால், பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்பு : வெயிட்டேஜ் மார்க் எதிராக வழக்கு

மதுரை: மருத்துவ மேற்படிப்பில், &'வெயிட்டேஜ்&' நிர்ணயித்து ெவளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி டாக்டர் சுசீபிரதீப் உட்பட, 6 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: முதுகலை மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கு, &'நீட்&' தேர்வு எழுதினோம். மலைப்பகுதி, பின்தங்கிய பகுதிகள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் என, பல்வேறு வகைப்படுத்தி, கூடுதலாக, &'வெயிட்டேஜ்&' மதிப்பெண் வழங்குவது குறித்து, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மார்ச், 9 ல், அரசாணை வெளியிட்டார். பணிபுரியும் பகுதிகளை பாகுபடுத்தி, &'வெயிட்டேஜ்&' நிர்ணயித்தது தவறு. அரசாணையில் விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி, வி.பாரதிதாசன் முன், மனு விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர், மருத்துவக் கல்

மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலான முதற்கட்ட கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம், நேற்று நடத்தியது.இதில், இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படவுள்ளது. பட்டியலில் இடம் பெறுவோர், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடத்தப்பட்டு, ஏப்., 11ல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

பாலியல் சீண்டலில் தப்பிக்க மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி

ஷில்லாங்: மேகாலயாவில், பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், பள்ளி மாணவியருக்கு, முன்னாள் கராத்தே சாம்பியன், லின்சா சியம், பயிற்சிகள் வழங்க உள்ளார். முறைகேடுவடகிழக்கு மாநிலமான, மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சித் தலைவர், கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் மேற்கு காசி மலை மாவட்ட உயரதிகாரி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு திட்டம் மூலம், முதல் முறையாக, பள்ளி மாணவியருக்கு, பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னாள், உலக கராத்தே சாம்பியன், லின்சா சியம், இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். தற்காப்பு பயிற்சிகள், ஒரு மாதம் வழங்கப்படும். பெண்களை கிண்டல் செய்தல், தகாத முறையில் அத்துமீறி நடப்பது, சாலைகளில் முறைகேடாக நடப்பது ஆகியவற்றில் இருந்து, பெண்களை பாதுகாக்க, இப்பயிற்சிகள் உதவும். குற்றங்கள்மேகாலயாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் வைத்து, பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், ஈசி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் மற்றும் அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள், மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர், கோபி கூறியதாவது: புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்விகள், பொது தேர்வுகளில் அடிக்கடி இடம் பெற்ற கேள்விகளே, நேற்றைய வேதியியல் தேர்வில் இடம் பெற்றன. இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றதால், எளிதாக பதில் எழுதினர். சில கேள்விகளுக்கு மட்டும், மாணவர்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது: ஏ - பிரிவு வினாக்களில், 1, 18 ஆகிய ஒரு மதிப்பெண் கேள்விகளும், 41, 47 ஆகிய, மூன்று மதிப்பெண் கேள்விகளும், மாணவர்களின் புரிந்து படிக்கும் கற்றல் திறனை சோ

ஒரு தந்தை மகளின் உரையாடல்..

அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலையிலே துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். அவ, ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” “மாட்டேன், தாராளமாச் சொல்லு” ”அந்த 304-ல இருக்கானே,ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கிறான்” “சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக. அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு. ”முதல்ல அந்த பையன்கிட்ட ஒழுங்காத்தான்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’னு சொன்னான்.” “நீ என்ன சொன்னே?” “ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “ நான் மவுனமாக இருந்தேன். “இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?” நான் இன்னும் அமைதியாக நடந்தேன். “அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “

படித்ததில் பிடித்தது..

�������� சுமார் 1965ம் ஆண்டுவாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார். அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..." என்றார். அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார். நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே... நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?..." என்றார். அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில். உடனே நிருபர் கேட்டார்... "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லை.. உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..." என்றார். உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "

விடைத்தாள் மையத்தில் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.மதுரையில் கழக மாநில போராட்ட ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநில தலைவர் மணிவாசகன் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 1.6.2009 முதல் பணியேற்ற பி.ஜி., ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். உயிரியல், வணிகவியல் பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் உட்பட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 12 முதல் 70 மையங்களில் நடக்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 28 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 20 விடைத் தாள்களில் 10 மட்டும் திருத்தும் போராட்டம் நடத்தப்படும். அதிகாரிகள் பேசாத பட்சத்தில் முழு புறக்கணிப்பு நடத்தப்படும், என்றார்.

மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து நாளை மறுநாள் (மார்ச் 29) ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட், ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் மாலை 4.56 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 12வது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஆகும். 11 முறையில் 7ல் வெற்றியும் 4ல் தோல்வியும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TODAY'S THOUGHT..

ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை  தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது. வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார். எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் தேவையில்லை: ஐகோர்ட்

சென்னை: &'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், தற்போது, எந்த மாற்றமும் மேற்கொள்ள தேவையில்லை&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, ராமபூபதி தாக்கல் செய்த மனு: என் தந்தை, சுதந்திர போராட்ட வீரர்; தமிழ் ஆசிரியர். தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தை கவுரவப்படுத்தும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளது. ஆனால், இந்த பாடலில் சில வரிகளை, 1967ல், எடுத்து விட்டனர். முதலில் எழுதப்பட்ட முழுமையான பாடல் பற்றி, தற்போதைய தலைமுறையினருக்கு தெரியவில்லை.வரிகள் நீக்கப்படாத முழுமையான பாடல், அற்புதமாக இருக்கும்; ஆட்சேபனைக்குரிய வரிகள் எதுவும் இல்லை. அதில், எந்த மாற்றமும் செய்து இருக்க வேண்டியதில்லை. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்து, அசல் பாடலில் மாற்றம் செய்தது, தேவையற்றது. எனவே, அசல் பாடலை அதிகார பூர்வமாக அறிவிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதிகள், மணிக்குமார், பவானி சுப்பராயன் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' அளித்த உத்தரவில், &'தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவராலு

பிளஸ் 1 தேர்வு கடினம்: மாணவி தற்கொலை

சென்னை: கணக்கு தேர்வு, கடினமாக இருந்ததால், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர், பார்த்திபன் மகள், சர்மிளா, 16. இவர், சென்னை, செங்குன்றம், மொண்டியம்மன் நகர், கண்ணகி தெருவில் உள்ள, அவரது உறவினர், ஜெய்சங்கர் என்பவரது வீட்டில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். சர்மிளா, நேற்று முன்தினம், கணக்கு தேர்வு எழுதினார். அதில், வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலில் இருந்த சர்மிளா, நேற்று முன்தினம் மாலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறி த்து,செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைச்சர் விளக்கம் : &'&'பிளஸ் 1 தேர்வில், கணிதம், விலங்கியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், கடினமாக இருந்தது குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்,&'&' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.இதுகுறித்து, அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வில், சில மாணவர்கள், வினாக்கள் கடினம் என்கின்றனர்; சில மாணவர்கள், தரமாக, எளிதாக உள்ளதாக கூறியுள்ளனர். அந்த தேர்வை, நாங்கள் கண்காணித்து கொண்டி