ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் பணி காரணமாக 30க்கும் குறைவானரே பங்கேற்றனர்.மார்ச் 26ல் நடந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் தேர்வு காரணமாக மாணவர்கள் பங்கேற்கவில்லை.இந்த நிலையில், &'கேலோ இந்தியா&' மாநில விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட மகளிர் அணி தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 30க்கும் குறைவான மகளிரே பங்கேற்றனர்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment