Skip to main content

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், ஈசி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் மற்றும் அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள், மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர், கோபி கூறியதாவது: புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்விகள், பொது தேர்வுகளில் அடிக்கடி இடம் பெற்ற கேள்விகளே, நேற்றைய வேதியியல் தேர்வில் இடம் பெற்றன. இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றதால், எளிதாக பதில் எழுதினர். சில கேள்விகளுக்கு மட்டும், மாணவர்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது: ஏ - பிரிவு வினாக்களில், 1, 18 ஆகிய ஒரு மதிப்பெண் கேள்விகளும், 41, 47 ஆகிய, மூன்று மதிப்பெண் கேள்விகளும், மாணவர்களின் புரிந்து படிக்கும் கற்றல் திறனை சோதிப்பதாக இருந்தன. நன்றாக படித்த மாணவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 140 மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்டம் அதிகரிக்கும் : பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று அக்கவுன்டன்சி என்ற கணித பதிவியல் தேர்வு நடந்தது. ஆண்டுதோறும், இந்த தேர்வில் சில வினாக்கள் அல்லது விடைக்குறிப்புகளில் பிழை இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வினாத்தாள் குழப்பம் இன்றி, மிக தெளிவாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஏ.பி.பழனி கூறுகையில், &'&'இதுவரை இல்லாத அளவுக்கு, மிக எளிமையான கேள்விகள் இடம் பெற்றன. புத்தகங்களில் உள்ள உதாரண கேள்விகள், வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்த கேள்விகள், அதிகம் இருந்தன. 2017ஐ விட, இந்த ஆண்டு அக்கவுன்டன்சியில் அதிக மாணவர்கள், &'சென்டம்&' எடுக்க வாய்ப்புள்ளது,&'&' என்றார்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...