Skip to main content

பிளஸ் 1 தேர்வு கடினம்: மாணவி தற்கொலை

சென்னை: கணக்கு தேர்வு, கடினமாக இருந்ததால், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர், பார்த்திபன் மகள், சர்மிளா, 16.

இவர், சென்னை, செங்குன்றம், மொண்டியம்மன் நகர், கண்ணகி தெருவில் உள்ள, அவரது உறவினர், ஜெய்சங்கர் என்பவரது வீட்டில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். சர்மிளா, நேற்று முன்தினம், கணக்கு தேர்வு எழுதினார். அதில், வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலில் இருந்த சர்மிளா, நேற்று முன்தினம் மாலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறி த்து,செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் விளக்கம் : &'&'பிளஸ் 1 தேர்வில், கணிதம், விலங்கியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், கடினமாக இருந்தது குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்,&'&' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.இதுகுறித்து, அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வில், சில மாணவர்கள், வினாக்கள் கடினம் என்கின்றனர்; சில மாணவர்கள், தரமாக, எளிதாக உள்ளதாக கூறியுள்ளனர். அந்த தேர்வை, நாங்கள் கண்காணித்து கொண்டிருக்கிறோம்.

கேள்விகள் கடினம் என்றால், கருணை மதிப்பெண் வழங்குவோம் என, சொல்லி விட முடியாது. வினாத்தாள் எப்படி இருக்கிறது என்பதை, பள்ளிக் கல்வி துறையில் உள்ள அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கும்.பள்ளி தேர்வுகளில், &'சென்டம்&' எடுத்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களில் பலர், அண்ணா பல்கலையின் முதல் பருவ தேர்வில், கணித பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர்.எனவே, அவர்களை திறமையாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, நம் மாணவர்களுக்கு,சிறப்பு பயிற்சி அளிக்கலாமா என, யோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...