Skip to main content

நிம்மதி எங்கே இருக்கிறது...

ஒரு மனிதன்....


எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...


ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.


படுத்தால் தூக்கம் வரவில்லை... 


சிரமப்பட்டான்...


அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.


பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... 


அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... 


போய்ப் பாருங்கள்!"


ஆசிரமத்துக்குப் போனான்...


பெரியவரைப் பார்த்தான்.


ஐயா.... 


மனசுலே நிம்மதி இல்லே... 


படுத்தா தூங்க முடியலே!"


அவர் நிமிர்ந்து பார்த்தார்...


தம்பி... 


உன் நிலைமை எனக்குப் புரியுது... 


இப்படி வந்து உட்கார்!"


பிறகு அவர் சொன்னார்:


உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...


தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!


அது எப்படிங்க?


சொல்றேன்... 


அது மட்டுமல்ல... 


மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!


ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!


புரியவைக்கிறேன்....


அதற்கு முன் ஆசிரமத்தில்

விருந்து சாப்பிடு.


வயிறு நிறையச் சாப்பிட்டான்.


பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, 

இதில் படுத்துக்கொள் என்றார்.


படுத்துக் கொண்டான்...


பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...


கதை இதுதான்:


ரயில் புறப்படப் போகிறது... 


அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...


ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.


ரயில் புறப்பட்டது...


தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கீழே இறக்கி வைக்கவில்லை...


எதிரே இருந்தவர் கேட்கிறார்: 


"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாரே?


இறக்கி வையேன்.


அவன் சொல்கிறான்:


"வேணாங்க! 


ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! 


என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'


பெரியவர் கதையை முடித்தார்.


படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.


ஏன் சிரிக்கிறே?


பைத்தியக்காரனா இருக்கானே...


ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?


அது அவனுக்கு தெரியவில்லையே


யார் அவன்? இயல்பாக கேட்டான்.


நீதான்!"


என்ன சொல்றீங்க?


பெரியவர் சொன்னார்:


வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் 

பயணம் மாதிரிதான்...


பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.


தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!


அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது...

சுகமாக தூக்கம் வந்தது.


தூங்க ஆரம்பித்து விட்டான்... 


கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.


"எழுந்திரு" என்றார்

எழுந்தான்!


"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார். 


தூக்கினான்...


அடுத்த கணம்"ஆ"வென்று 

அலறினான்.


தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது


ஐயா! என்ன இது?


உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... 


அப்படி இருந்தும் 

நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!


அது ... 


அது எனக்குத் தெரியாது...


பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... 


அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!


அவன் புறப்பட்டான்,, 

நன்றி பெரியவரே... 

நான் போய் வருகிறேன்!


நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?


புரிந்து கொண்டேன்!


என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.


அறிவின் வெளிச்சத்தால்

அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா..

Comments

  1. "மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

    ReplyDelete
  2. Nalaikku pgtrb final result vara pooguthu...

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு செகண்ட் லிஸ்ட் வருது

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...