Skip to main content

நிம்மதி எங்கே இருக்கிறது...

ஒரு மனிதன்....


எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...


ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.


படுத்தால் தூக்கம் வரவில்லை... 


சிரமப்பட்டான்...


அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.


பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... 


அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... 


போய்ப் பாருங்கள்!"


ஆசிரமத்துக்குப் போனான்...


பெரியவரைப் பார்த்தான்.


ஐயா.... 


மனசுலே நிம்மதி இல்லே... 


படுத்தா தூங்க முடியலே!"


அவர் நிமிர்ந்து பார்த்தார்...


தம்பி... 


உன் நிலைமை எனக்குப் புரியுது... 


இப்படி வந்து உட்கார்!"


பிறகு அவர் சொன்னார்:


உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...


தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!


அது எப்படிங்க?


சொல்றேன்... 


அது மட்டுமல்ல... 


மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!


ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!


புரியவைக்கிறேன்....


அதற்கு முன் ஆசிரமத்தில்

விருந்து சாப்பிடு.


வயிறு நிறையச் சாப்பிட்டான்.


பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, 

இதில் படுத்துக்கொள் என்றார்.


படுத்துக் கொண்டான்...


பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...


கதை இதுதான்:


ரயில் புறப்படப் போகிறது... 


அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...


ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.


ரயில் புறப்பட்டது...


தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கீழே இறக்கி வைக்கவில்லை...


எதிரே இருந்தவர் கேட்கிறார்: 


"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாரே?


இறக்கி வையேன்.


அவன் சொல்கிறான்:


"வேணாங்க! 


ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! 


என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'


பெரியவர் கதையை முடித்தார்.


படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.


ஏன் சிரிக்கிறே?


பைத்தியக்காரனா இருக்கானே...


ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?


அது அவனுக்கு தெரியவில்லையே


யார் அவன்? இயல்பாக கேட்டான்.


நீதான்!"


என்ன சொல்றீங்க?


பெரியவர் சொன்னார்:


வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் 

பயணம் மாதிரிதான்...


பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.


தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!


அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது...

சுகமாக தூக்கம் வந்தது.


தூங்க ஆரம்பித்து விட்டான்... 


கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.


"எழுந்திரு" என்றார்

எழுந்தான்!


"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார். 


தூக்கினான்...


அடுத்த கணம்"ஆ"வென்று 

அலறினான்.


தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது


ஐயா! என்ன இது?


உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... 


அப்படி இருந்தும் 

நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!


அது ... 


அது எனக்குத் தெரியாது...


பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... 


அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!


அவன் புறப்பட்டான்,, 

நன்றி பெரியவரே... 

நான் போய் வருகிறேன்!


நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?


புரிந்து கொண்டேன்!


என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.


அறிவின் வெளிச்சத்தால்

அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா..

Comments

  1. "மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

    ReplyDelete
  2. Nalaikku pgtrb final result vara pooguthu...

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு செகண்ட் லிஸ்ட் வருது

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..