Skip to main content

18 நாட்கள் போர்..

   திரௌபதிக்கு தனது வயது

    80 ஆனது போல இருந்தது...


    உடல் ரீதியாக 

    மற்றும் மனரீதியாகவும் கூட


   அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி

விதவைகள் அதிகமாக இருந் தனர்.


    ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.


    அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,

அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத் தைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.


    பிறகு,


    ஸ்ரீ கிருஷ்ணர்

    அறைக்குள் நுழைய


    திரௌபதிகிருஷ்ணரைப் பார்த்ததும்ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...


    கிருஷ்ணா அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத்தொடங்கினாள்.


     நேரம் மெல்ல நகருகிறது.

    அவளிடமிருந்து விலகி

    பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.


    "திரௌபதி,என்ன நடந்தது?"


    "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"


    கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..

    நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"


    அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.


    முடிவுகளையும்  மாற்றுகிறது.


    நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!


    உன் பழிவாங்கல் முடிந்தது...

 துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.


 நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!


    திரௌபதி:" சகோதரா,

 என் காயங்களைத் ஆற்ற வந் தீர்களா  அல்லது  அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா?"


    கிருஷ்ணர்:  இல்லை, திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள் ளேன்.


    எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல் களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.

   


    திரௌபதி: அதனால் என்ன?

    இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?


    கிருஷ்ணர்: இல்லை, திரௌ பதி நீ மட்டுமே காரணம் என்று

    கருதாதே...


    ஆனால்,


    உன்  செயல்களில் நீ கொஞ் சம் தொலைநோக்கு பார்வை யைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங் களை அனுபவித்திருக்க மாட் டாய்..


    திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?


கிருஷ்ணர் :    நீ நிறைய செய்திருக்கமுடியும். 


   உனது சுயம்வரம் நடந்தபோது

   கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்ப ளித் திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந் திருக்க கூடும்!


    அதற்குப் பிறகு குந்தி உன் னை ஐந்து கணவர் களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை...


அப்போது ஏற்றுக் கொள்ளா திருந்தாலும் முடிவு வேறுவித மாக இருந்திருக்கும்.


    அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்...


    பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று.


    அவ்வாறு நீ சொல்லாதிருந் திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...


    அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.


    "நம் வார்த்தைகள் கூட

    விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...


"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...


    இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..


பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...


    எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.

    அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.


    ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. சண்முகம் சார் டிஆர்டி பத்தி ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க

    ReplyDelete
  3. நமக்கு போடாம இன்னொரு ஆசிரியர் தகுதி தேர்வு நோட்டிபிகேஷன் வராது

    வராது...

    என்று எல்லாம் பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்

    ஆனால் நோட்டிபிகேஷன் வந்த பிறகு அதற்கு ஸ்டே ஆர்டர் கூட தடை ஆணை கூட வாங்க முடியாமல் இப்போது

    ஆசிரியர் தகுதித் தேர்வு சிறப்பாக நடைபெற உள்ளது


    இதுபோன்ற ஒரு நிலைமைதான் கண்டிப்பாக ஏற்படும்

    காரணம்

    நோட்டிபிகேஷன் வந்தபிறகு நீதிமன்றத்தை

    நாடி நீர் களே

    அதற்கு முன்பு எங்கே போயிருந்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்புவார்.


    இப்போது எல்லாரும் அப்ளிகேஷன் 500 ரூபாய் கட்டி


    அப்ளிகேஷன் போட்டு விட்ட பிறகு

    போட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது
    என்று

    பிறகு எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது

    ReplyDelete
  4. Good evening Mam.I have completed bsc bed.In 2012 I cleared paper 1.But I didn't get tet certificate.Is it valid for trt.please reply Mam.

    ReplyDelete
    Replies
    1. Sir/Mam..

      If you don't have the certificate, you should be having the result copy or certificate verification documents to prove that you have cleared TET..

      Delete
  5. Mam I cleared tet paper1 2012 .But I'M not studied dted. Is it eligible

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here