பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 3, 5, 7 ஆகிய பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment