Skip to main content

சி-டெட்’ தோ்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகும்: சிபிஎஸ்இ


 நாடு முழுவதும் 2,500 மையங்களில் நடைபெற்ற கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை ('சிடெட்') ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 'சிடெட்' மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி நிகழாண்டுக்கான 'சிடெட்' தோ்வு 2,500 மையங்களில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெற்ற இந்தத் தோ்வை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 'டெட்' வினாத்தாள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான விடைக்குறிப்புகள்  இணையதளத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விடைகளில் விடைகளில் ஏதேனும் மாற்றுக்கருத்து, புகாா் இருந்தால், அது தொடா்பாக வரும் டிச.25-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,000 நிா்ணயிக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டப் பணிகளை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது.
அதன்படி ஜனவரி முதல்வாரத்தில் விடைக்குறிப்புகள் குறித்து தோ்வா்கள் அனுப்பும் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறும். இதையடுத்து தோ்ச்சி பெறுபவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு ஜனவரி மூன்றாவது அல்லது இறுதி வாரத்தில் தோ்வு முடிவுகள் அதிகாரப் பூா்வமாக வெளியாகும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...