Skip to main content

தனியார் பள்ளிக்கு இணையாக ஜொலிக்கும் அரசுப்பள்ளி

பெரம்பலுார், -அரியலுார் அருகே, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு வண்ணங்களுடன் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அரியலுார், பெரியவளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இதையறிந்த, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான, காரணம் என்னவென்று இக்கிராமத்தில் உள்ள பெற்றோரிடம் விசாரித்தனர்.அப்போது, பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இப்பள்ளியை புனரமைக்க முடிவு செய்தனர். இதற்கென பிரத்யேகமாக ஒரு, 'பேஸ்புக் குரூப்' உருவாக்கி, இப்பள்ளியின் பழைய படத்தை பதிவிட்டு, விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் பள்ளியை புனரமைக்க நிதியுதவி தருமாறு கோரினர்.இதையறிந்த பெயின்ட் பாண்டிச்சேரி என்ற அமைப்பு, பள்ளியை பெயிண்ட் அடித்து தர முன்வந்தது.அந்த அமைப்பைச் சேர்ந்த, 13 பேர் பெரியவளையம் கிராமத்தில், 10 நாட்கள் முகாமிட்டு, பள்ளி முழுவதும் பெயின்ட் அடித்து கொடுத்ததுடன், வகுப்பறை சுவர்களில் பொம்மைகள், வரைபடங்கள், தமிழ் எழுத்துகள், வாய்ப்பாடு போன்ற கல்வி தொடர்பானவைகளை வரைந்து கொடுத்துள்ளது.தற்போது, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் மல்டி கலரில் இப்பள்ளி ஜொலிக்கிறது.இத்தோடு, நன்கொடையாளர்கள் மூலம் கிடைத்த நிதியால், பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் விளையாட்டு உபகரணங்கள், லைட், மோட்டார், குடிநீர் பைப் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.மேலும், கம்ப்யூட்டர், புரஜெக்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.இக்கிராமத்தில் உள்ள பெற்றோரை நேரில் சந்தித்து, இப்பள்ளியிலேயே தங்களது பிள்ளைகளை 1ம் வகுப்பில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பெற்றோரும், இப்பள்ளியில் நிச்சயமாக தங்களது பிள்ளைகளை சேர்ப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...