Skip to main content

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி

யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசின் சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது, தற்போது இதில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளப் போகு தேர்வர்களின் இறுதி பெயர் பட்டியில் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 32 மாணவர்கள் ‘அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை’ சேர்ந்தவர்கள்.
இதில் இந்தியா அளவில் 29வது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன். இவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விருப்பப் படமாக தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடம்பிடித்து, தமிழக அளவில் 2ம் இடம் பிடித்த மதுபாலன் என்பவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை சேர்ந்தவர்.
மேலும் தமிழிலேயே தேர்வை எழுதியவர்கள், முதல் நிலை தேர்வு தொடங்கி நேர்முகத் தேர்வு வரை அனைத்தையும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் முடித்தவர்கள், பணியில் இருந்துகொண்டே படித்தவர், வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிக் கொண்டே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று படித்தவர்கள், கடுமையான ஏழ்மைச் சூழலில் இருந்து வந்தவர்கள் என பலதரப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இம்முறை வெற்றி கிடைத்துள்ளது.
அறம் அகாடெமியில் படித்து 356வது இடம் பிடித்துள்ள ஸ்ருதி ஸ்ரீனிவாசன் கூறுகையில்: “சட்டப்படிப்பில் இளங்கலை முடித்து நேரடியாக அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயிற்சி எடுத்தேன். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்திலும் இவர்களது வழிகாட்டுதலிலேயே சுலபமாக வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடினமாக உழைத்து இம்முறை இந்திய வருவாய்த் துறை பணிக்குத் தேர்வாகியுள்ள மோகன பிரியா கூறுகையில் “சில ஆண்டுகளாகவே கடனமாக தேர்விற்கென்று தயாராகி வந்தேன். சென்ற ஆண்டு நேர்முகத் தேர்வின் இறுதி முடிவில் என் பெயர் இல்லாத போது மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதிலிருந்து என்னைத் தேற்றி அடுத்த ஆண்டு மீண்டும் பயிற்சியளித்து என்னை வெற்றி பெறச் செய்த அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமிக்கு நன்றிகள்” என்றார்.
60க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இந்த ஆண்டும் தமிழகம் உருவாக்கி பெருமை அடைகிறது. இதனால் மாணவர்களிடையே இத்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் என்பதில் ஐயம் ஏது இல்லை.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here