Skip to main content

மாணவர்களுக்கான உளவியல் குழு : கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: &'மாணவர்களின், உளவியல் நலனை உறுதிப்படுத்துவதற்கான குழுவை அமைக்கத் தவறினால், பள்ளிக்கல்வி துறை செயலர் ஆஜராக வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவியை தவறாக திட்டி, ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதற்கு தண்டனையாக அவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை, பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இதை, ரத்து செய்யக்கோரி, சம்மந்தப்பட்ட ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தீர்ப்புஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முரளிதரன், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்கும்போது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சிறந்த கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் அடங்கிய குழுவையும், பள்ளிக்கல்வித்துறை செயலர் அமைக்க வேண்டும்.பள்ளிகளில் உளவியல் ரீதியாக, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, இந்தக் குழு மதிப்பீடு செய்ய வேண்டும். புத்தாக்க பயிற்சிபள்ளிகளில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
மாணவர்களை எவ்வாறு சிறப்பாக கையாள வேண்டும் என, ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, ஜூன், 4 வரை, அவகாசம் அளித்து, நீதிபதி, முரளிதரன் உத்தரவிட்டார். &'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், பள்ளிக் கல்வி செயலர், இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர், ஜூன், 5ல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்&' எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...