Skip to main content

மாணவர்களுக்கான உளவியல் குழு : கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: &'மாணவர்களின், உளவியல் நலனை உறுதிப்படுத்துவதற்கான குழுவை அமைக்கத் தவறினால், பள்ளிக்கல்வி துறை செயலர் ஆஜராக வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவியை தவறாக திட்டி, ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதற்கு தண்டனையாக அவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை, பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இதை, ரத்து செய்யக்கோரி, சம்மந்தப்பட்ட ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தீர்ப்புஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முரளிதரன், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்கும்போது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சிறந்த கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் அடங்கிய குழுவையும், பள்ளிக்கல்வித்துறை செயலர் அமைக்க வேண்டும்.பள்ளிகளில் உளவியல் ரீதியாக, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, இந்தக் குழு மதிப்பீடு செய்ய வேண்டும். புத்தாக்க பயிற்சிபள்ளிகளில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
மாணவர்களை எவ்வாறு சிறப்பாக கையாள வேண்டும் என, ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, ஜூன், 4 வரை, அவகாசம் அளித்து, நீதிபதி, முரளிதரன் உத்தரவிட்டார். &'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், பள்ளிக் கல்வி செயலர், இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர், ஜூன், 5ல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்&' எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here