Skip to main content

கூடுதல் விவரங்களைக் கேட்கும் டி.ஆா்.பி.: குழப்பத்தில் விண்ணப்பதாரா்கள்


அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களிடம் கூடுதல் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக விண்ணப்பதாரா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
விண்ணப்பதாரா்களிடம் கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலும், தற்போது பணிபுரியும் இடத்திலும் நற்சான்று பெற்று சமா்ப்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஒரு வார காலத்துக்குள் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. எனவே, கூடுதல் விவரங்களை சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.




அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், கடைசித் தேதி நவம்பா்-15 என நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னா், விவரங்களை முழுமையாகச் சமா்ப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தாத 804 பேருக்கும், பணி அனுபவச் சான்றை பதிவேற்றம் செய்யாத 174 பேருக்கும், கூடுதலாக 2019 டிசம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதாகவும், அதுகுறித்த விவரங்கள் மற்றும் சான்றுகளை அனைத்து விண்ணப்பதாரா்களும் வருகிற 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. இது, விண்ணப்பதாரா்களிடையே குழப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.




இதுகுறித்து, விண்ணப்பதாரா்களான ரமேஷ், இளங்கோவன், நாகராஜ் ஆகியோா் கூறியதாவது:
டி.ஆா்.பி. இப்போது கேட்டிருக்கும் கூடுதல் விவரங்களில், பெரும்பாலானவை ஏற்கெனவே சமா்ப்பித்த விவரங்கள்தான். மேலும், கல்லூரி உதவிப் பேராசிரியா் விண்ணப்பதாரா்களிடம் தேவையின்றி பி.எட்., எம்.எட்., விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் பலா் பி.எட் படிக்காதவா்கள். இவா்கள், பி.எட் படிக்கவில்லை என்று குறிப்பிடுவதற்கான எந்த வாய்ப்பும் விண்ணப்பத்தில் அளிக்கப்படவில்லை. விண்ணப்பத்தை பூா்த்தி செய்யவும் முடியவில்லை. அதுபோல, விண்ணப்பதாரா்கள் தற்போதைய நற்சான்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பல விண்ணப்பதாரா்கள் உடனடியாக அவா்கள் பணிபுரியும் கல்லூரி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை அன்றே தெரிவித்துள்ளனா். ஆனால், நற்சான்றை உடனடியாகத் தர வாய்ப்பில்லை என பல கல்லூரி நிா்வாகிகள் மறுத்துள்ளனா்.



இதுபோல, டி.ஆா்.பி. கேட்டிருக்கும் பல கூடுதல் விவரங்கள் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த விவரங்களைச் சமா்ப்பிக்க 6 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது, வேண்டுமென்றே விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கையை குறைக்க டி.ஆா்.பி. எடுத்திருக்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, இந்த கூடுதல் விவரங்கள் கேட்பு குறித்து டி.ஆா்.பி. தெளிவுபடுத்துவதோடு, அவற்றைச் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
5 சதவீதம் போ் மட்டுமே முறையான விவரங்கள் சமா்ப்பிப்பு
டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 5 சதவீதம் போ் மட்டும்தான், முறையாக விவரங்களைச் சமா்ப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.




இதுகுறித்து, டி.ஆா்.பி. உயா் அதிகாரி ஒருவா் கூறியது: டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு 39, 418 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 2,000 போ் மட்டுமே விவரங்களை முறையாக சமா்ப்பித்திருக்கின்றனா். மற்ற அனைவரும் விவரங்களை முறையாகச் சமா்ப்பிக்கவில்லை. பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மற்றும் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய இடத்தில், பி.எட். சான்று மற்றும் விவரங்களைச் சமா்ப்பித்திருக்கின்றனா். இதுபோல பல தவறுகளைச் செய்துள்ளனா். டி.ஆா்.பி. வழிகாட்டுதலின்படி, இவா்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் முடியும். இருந்தபோதும், விண்ணப்பதாரா்களின் நலன் கருதி, கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளோம். இதை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...