Skip to main content

பறவைகள்..

பறவைகள்
ஏன் முக்கியம்?

பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன.

2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன.

3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன.

4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன.

5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்!

நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும்.

ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம்.

கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் .

பறவைகளை,
ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருப்பார் போலும்...

மனிதர்கள்,
கிளிப்பேச்சு கேட்கவும்
குயிலிசையில் கிறங்கவும்

மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை!

பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச்சங்கிலி ஊடாடுவதை உணர்வதும், உணர்த்துவதுமே "சூழலியல் "

பறவைகள் உண்டு எச்சத்தின் வழியே வெளியேறும் விதைகள்தாம் முளைக்கும். பறவைகள் அழிந்தால் தாவரங்களும் அழியும்!

மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியும்!

மகரந்த சேர்க்கை செய்ய முடியாது..!

பூஞ்சை, புல், பூண்டு, செடி, மரம் என்று தாவரத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவை பறவைகள்.

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " என்று ஐம்பது வருட ஆய்விற்குப் பிறகு நமக்கு அறிவுறுத்தினார் " சாலிம் அலி "

பசுமையைப் போல பறவைகளையும் பரவச் செய்வோம்!

குளிரூட்டப் பட்ட அறைகளை விடவும் ... தென்றல் உலாவும் தெருக்களை நமது குழந்தைகளுக்கு விட்டு வைப்போம்!

Comments

  1. Gudmrng friends, brothers anf sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. 3500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்... கல்வி அமைச்சர்

    ReplyDelete
  3. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி

    ReplyDelete
  4. Sgt post 3000 இடங்கள் மேல் காலியாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை....

    ReplyDelete
  5. TRT la vacant அதிகம் ஆகும்... Sgt post ... நம்பிக்கையுடன் ........ சு.ரா

    ReplyDelete
  6. Rajavel Brother..

    I asked about counselling, most of them telling like TRB has filed appeal and so only its getting delayed and it may even get delayed.. So lets hope for the best..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here