Skip to main content

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா? தனியாரிடம் பொறுப்பு தந்ததால் குழப்பம்



* சர்வர் குளறுபடி
* பயிற்சி இல்லாமை
* குறைகளை நீக்க முடியாமல் அதிகாரிகள் தத்தளிப்பு

சென்னை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை. இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய முறையின் கீழ் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க இணைய தளம் மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை விப்ரோ என்ற தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒப்படைத்துள்ளது. அதன்படி சம்பளம் வழங்குவதில் நிறைய பிரச்னைகள் எழுந்துள்ளன. அவற்றை இன்னும் சம்பந்தப்பட்ட துறை சரி செய்யவில்லை. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கச் செல்லும் போது அதற்கான சர்வர் பிரச்னையால் சம்பளப் பட்டியல் தயாரிக்க 12 மணி நேரம் ஆகிறது. விப்ரோ நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், சம்பளப் பட்டியல் தயாரிக்கும் அளவுக்கு போதிய பயிற்சி பெறவில்லை. அதனால், அனைத்து மாவட்டங்களிலும் அவர்களால் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

இதனால் மாவட்டங்களில் உள்ள கருவூல அலுவலர்கள், சார்பு கருவூல அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மற்றும் அந்தந்த துறையில் ஊதிய பட்டியலை தயார் செய்யும் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் சம்பளப்பட்டியல் தயார் செய்து, கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, புதிய முறையின் கீழ் பட்டியல் பதிவேற்றம் செய்துள்ளீர்களா என்று கேட்கின்றனர். அப்படி இல்லை என்றால் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். மாவட்ட கருவூல அதிகாரியிடம் முறையிட்டால், அங்குள்ள இணைய தள சேவையில் சர்வர் வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு காரணம், விப்ரோ நிறுவனத்திடம் சம்பளம் அனுப்பும் பணியை ஒப்படைத்ததுதான். ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த நிறுவனம் சரியான முறையில் சர்வர்களை ஏற்படுத்தவும் இல்லை, வேகப்படுத்தவும் இல்லை. மேலும் சம்பளப்பட்டியல் தயாரிக்கும் பயிற்சி அளிக்கவும் ஆட்களை நியமிக்கவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்தந்த மாவட்டங்கள் ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம் குறித்த கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள பிரச்னை குறித்து பேசப்பட்டது. அதன்படி, இந்த மாதமே மேற்கண்டவர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், மாவட்ட சார்பு கருவூல அலுவலர்கள், 26ம் தேதிக்குள் ஐஎப்எச்ஆர் எம்எஸ் மூலம் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் சம்பளம் பெற்றுத் தர முடியாது என்று திருப்பி அனுப்புகின்றனர். சர்வரை வேகப்படுத்தாமலும், சம்பளப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்காமலும் இந்த புதிய முறையின் கீழ் சம்பளம் பெற்றுத் தருவது கடினமாக இருக்கிறது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த பிரச்னை நீடிப்பதால் ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பழைய முறையில் சம்பளம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here