Skip to main content

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்..!


காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும்.
காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு 
இருக்குதா..??? 

எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க. 
யாராவது கேக்குறாங்களா..??? 

பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும்

பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம்

கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை... 

உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்...

தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்... 

இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம்

பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம் 

வகை வகையா ரசம் வைக்கலாம்  

நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம். 

சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ்
னு பெரிய லிஸ்ட்டே போடலாம் 

காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும். 

இதுல எதுக்குமே தினசரி கடைக்கு போக தேவையில்லை. ஒருமுறை வாங்கி வைத்தால் போதும். 

சொகுசு வாழ்வை விடுத்து ,
குழந்தைகளுக்கு வறுமையை சொல்லித்தர பழகுவோம். நெருக்கடி நேரத்தில் வாழக்கையை சமாளிக்க கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது.

2.
*காய்கறிகள் கிடைத்தால்*

காலையில் வீட்டில் சாதம் வடியுங்கள்.. (குக்கரில் அல்ல பழைய முறைப்படி) கிடைக்கும் சுடு கஞ்சியை காலை உணவாக இஞ்சித் துவையலுடன் குடியுங்கள்.. 

மதியம் சிம்பிளாக இரசம் ஒரு காய் (கூட்டோ பொரியலோ) போதாததற்கு அதே இஞ்சித் துவையலும் வைத்துக் கொள்ளவும் 

இரவு இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று இட்லி எனில் 5 
தோசை & சப்பாத்தி எனில் 3.. 

இது ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சமைக்கும் சமையல்.! 

வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நீருடன் கலந்து பானகம், அல்லது எலுமிச்சை ஜுஸ், கரைத்து வைத்துக் கொள்ளவும்.. 

முடிந்தவரை டீ குடிக்கும் அதே சூட்டில் வெந்நீர் அருந்தவும்.. 

பஜ்ஜி, போண்டா, வடை போன்ற ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்.. 

சுடுகஞ்சி போரடித்தால் சில நாட்களுக்கு மாற்றாக பிரட் & ஜாம் சாப்பிடவும்.. 

அசைவம் தவிர்க்க முடியாதவர்கள் மீன் குழம்பு மட்டும் வைத்து சாப்பிடவும் (10 நாட்களுக்கு ஒரு முறை) 

முட்டை உபயோகித்தால் காலையில் ஃபிரேக் பாஸ்ட் அப்போது மட்டும் சாப்பிடவும்.. 

அதிக பட்சமாக வாரத்தில் இரு நாட்கள் முட்டை உபயோகித்தால் போதும்.. 

குருணை அரிசி கஞ்சி, வரகரிசி பொங்கல், சாப்பிடலாம்.. 

அடுப்பில்லாத சமையல் எனில் வெள்ளைப் பூசணியை தோல்சீவி அதைத் துருவி..
நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு அதை நன்கு பிழிந்தெடுத்து தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.. இது தயிர் சாதத்தை விட சுவையாக இருக்கும்.. 

ஊறுகாய் எனில் எலுமிச்சை, நார்த்தங்காய், கோங்குரா மட்டும் தொட்டுக் கொள்ளவும்.! 

கோதுமை ரவா உப்புமா சாப்பிடுவது மிகவும் உத்தமம்.! 
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த உப்புமாவில் காரட், பட்டாணி, சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு, 
கொஞ்சம் இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு (பொடிசெய்து) சேர்க்கவும்.. 

தேங்காய் சட்னி குழந்தைகளுக்கு மட்டுமே.! பெரியவர்கள் புதினா & கொத்தமல்லி அல்லது இஞ்சி சட்னி சேர்க்கவும்..! 

வேப்பிலைப் பொடியும் நல்லெண்ணெயும் இன்னும் சிறப்பு... 
அப்பளத்தை பொரிக்காது சுட்டு பயன்படுத்தவும்.. 

பிரண்டை, சுண்டைக்காய் வத்தக் குழம்புகள் இன்னும் சிறப்பு.. முடிந்தால் அதில் இரண்டு கடுக்காயைப்..
பொடி செய்து சேர்க்கவும்.. வேப்பிலைக் கொழுந்தும் சிறிது அரைத்து வத்தக்குழம்பில் சேர்க்கலாம்.. 

வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு புளிக்குழம்பு வைக்கவும்.. 

பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போட்டு கூட்டு வைப்பதும் சாலச் சிறந்தது.! 

மிளகு இரசமும் எலுமிச்சை இரசமும் வாரம் முழுவதும் வைக்கலாம்.! 

பாகற்காயை வட்டமாக சீவி மஞ்சள்தூள் தடவி வதங்கல் செய்யலாம்.!

தக்காளி, கத்திரிக்காயின் உபயோகம் குறைவாகவே இருக்கட்டும் (ஈஸ்னோபீலியா) 

முருங்கை, அவரை, நூக்கல், பீட்ரூட், காரட், பொடி பாகற்காய், முள்ளங்கி ஆவாரம் பூ, மணத்தக்காளி, சிறுகீரை, வெந்தயக்கீரை கிடைத்தால் யோசிக்காமல் வாங்கிவிடவும்.! 

சிக்கன் & மட்டன்.!!! பாவம் அந்த உயிர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழட்டுமே.! 

இங்கு நான் சொன்ன அனைத்து காய்கறிகளும்..
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகள்.! 

இதை வீட்டில் உங்களால் முடிந்த அளவு சமைத்து முயன்று பாருங்கள்.! 

அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..! 

அது இன்னும் 21 ஆண்டுகள் என்றாலும்.. நம்மால் முடியாதது உலகில் யாராலும் முடியாது என எண்ணுங்கள்.!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...