Skip to main content

நாடு முழுக்க மொத்தமாக முடக்கம்.. 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும்.. எதெல்லாம் செயல்படாது?


நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.



இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
விவரம்
என்ன விவரம்

பிரதமர் மோடி தனது பேச்சில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதோடு இதுவும் சுய ஊரடங்கு போலத்தான், ஆனால் அதை விட தீவிரமாக இப்போது கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும், எதெல்லாம் செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.



இயங்காது
ரயில்கள் இயங்காது

இந்தியாவில் ஏற்கனவே ரயில்கள், மின்சார ரயில்கள் உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது. 30 மாநிலங்களில் ஏற்கனவே லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் முதல மாநிலமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயங்காது.

செல்ல முடியாது
யாரும் வாகனத்தில் செல்ல முடியாது

தனியாரும் தங்கள் சொந்த வாகனத்தில் எங்கும் செல்ல முடியாது. இதனால் போக்குவரத்து மொத்தமாக முடங்கும். அதேபோல் ஏற்கனவே அறிவித்த தடைகளின் படி பள்ளிகள், கல்லூரிகள், தனியார், அரசு நிறுவனங்கள், மதுபானகடைகள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள், சந்தைகள் மொத்தமாக செயல்படாது. மொத்தம் 21 நாட்களுக்கு யாரும் வெளியே வர முடியாது.




யாருக்கு பொருந்தாது
யாருக்கு எல்லாம் பொருந்தாது

இந்த தடை ராணுவம், போலீஸ், மருத்துவர்கள், மத்திய நிதி அமைச்சகம், பேரிடர் மீட்பு குழு, மின்சார துறைக்கு, சுகாதாரத்துறை பொருந்தாது. மருத்துவமனை, மருத்துவமனை உற்பத்தி சார்ந்து துறைகளுக்கு தடை கிடையாது. ஆம்புலன்ஸ்கள் இயங்கும். பிரதமர் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை
மருத்துவமனை இயங்கும்

அதனால் மருத்துவமனைகள் இயங்கும், மெடிக்கல்கள் இயங்கும், மிக குறைந்த எண்ணிக்கையில் காய்கறி, பால், மீன், கறி, மளிகை கடைகள் இயங்கும் (சுய ஊரடங்கின் போது இயங்கியது போல), இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டோர் டெலிவரி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம்கள் இயங்கும். அதேபோல் ஊடகத்துறை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். என்று கூறப்பட்டுள்ளது.




ஐடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்
ஹோட்டல்கள்

ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் பங்குகள் இயங்கும். தனியார் பாதுகாவலர்கள் பணிக்கு செல்லலாம். அவசியமான உற்பத்தி துறைகள் தொடர்ந்து செயல்படும். அனுமதியோடு வெகு சில தங்கும் விடுதிக்குள், அனைத்து பிஜிக்கள் இயங்கும். ஆனால் அங்கு தங்கு நபர்களை கண்காணிக்க, சோதிக்க வேண்டும். அனைத்து விதமான நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், ஒன்று கூடுதல் எல்லாம் தடை செய்யப்படுகிறது

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here