Skip to main content

தேசபக்தி ....

உலகில் எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள்.. அந்த நாட்டின் தேசபக்தி என்பது இன்னொரு நாட்டின் மீதான பகையால் உருவாக்கப்பட்டதாக இருக்காது .. இதில் விதிவிலக்காக இருப்பது இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் தான்..

இந்தியா உருவாகும் போது முன்னூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை சேர்த்து தான் இந்திய ஒன்றியம் உருவானது. அதாவது இந்திய ஒன்றியம் என்பது சேர்க்கப்பட்ட கூட்டம் தான், தானாக சேர்ந்த கூட்டம் அல்ல.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு இனம், மொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை இங்கு தேச பக்தியில் ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பாகிஸ்தான் மீதான பகையும் உதவுகிறது. பாகிஸ்தான் மக்களின் தேச பக்தியும் இப்படியே தான் உருவாக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்த பகை உருவாக்கப்பட்டது. இந்த பகை தான் இரு நாடுகளின் தேச பக்தியை இன்று வரை வளர்த்து கொண்டிருக்கிறது ... இதில் குறிப்பிடதக்க அம்சம் எதுவெனில் இரு நாட்டிலும் எதிர் எதிராக பிரிந்து போன இரண்டு மதங்கள் பெருபான்மை சமூகமாக இருப்பது தேசபக்திக்கு இன்னும் கூடுதல் பலம் .

இதனால் தான் 1000 - க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்ட போது இந்தியாவில் தமிழ்நாட்டை தாண்டி யாரையும் உறுத்தவில்லை .. காரணம் இலங்கையை எதிரி நாடாக பார்க்காமல் அண்டை நாடாக பார்க்கிறான்..

ஒரு வேளை தமிழக மீனவர்களை பாகிஸ்தான் சுட்டிருந்தால் இந்தியா முழுவதும் தமிழக மீனவர்கள் விசயம் கவனம் பெற்றிருக்குமோ என்னவோ?

இங்கு யதார்த்தையோ, பிரச்சனைக்குரிய தீர்வை பற்றியோ பேசினால் அவன் தேசத் துரோகி ஆகிவிடுவான்.. இது இரு நாடுகளுக்கும் பொருந்தும் ..
.
இந்த பகைமை என்பது இந்த இரு நாட்டு அரசியலுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருந்து கொண்டு இருக்கிறது ... இங்கு இந்திரா முதல் மோடி வரை ... அங்கு பூட்டோ முதல் இம்ரான்கான் வரை தொடர்கிறது ..

கடந்த வாரம் 40 வீரர்களை இழந்தோம்.. இன்று பதிலடி கொடுத்திருக்கிறோம்.. உயிர் சேதம் குறித்த தகவல் இன்றும் தெரியவில்லை .. தேசம் என்னும் ஒற்றை புள்ளியில் நாம் ஒருங்கிணைந்து நிற்கிறோம்..

ஆனாலும்..... முன்பெல்லாம் நீ தேச விரோதி என மதரீதியாக சொல்லி வந்தவர்கள் தற்போது கட்சி ரீதியாகவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதாவது அரசியலமைப்பின் நிர்வாகத்திற்கும், அரசியல் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல் இருக்கிறார்கள்..

அதனால் தான் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை குறை கூறினால் அவன் தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுகிறான்..

இங்கு தேசம், தேச பக்தி என்பது மிகவும் சென்சிட்டிவ்வான விசயமாக உருவாக்கப்பட்டுள்ளது... சீனா, அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் தேசபக்தி என்பது தேச வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டிருக்கும் .. ஆனால் இங்கு....?

இன்றைய பாகிஸ்தான் பகுதி மீதான தாக்குதல் குறித்து அரசிடமிருந்து உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் வரும் முன்னே ஊடக செய்திகளை பார்த்தே அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் இராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு வேளை ராகூலோ, மம்தாவோ அரசிடமிருந்து உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் வரும் வரை கருத்து சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் தேசத்துரோகியாக ஆக்கப்பட்டிருப்பார்கள் ... அதனால் அத்துணை தலைவர்களும் முண்டியடித்து முன்கூட்டியே கருத்து சொன்னார்கள்..

காரணம் இல்லாமல் இல்லை.. காஷ்மீர் தாக்குதல் நடந்த நாளிலிருந்து இன்று வரை அந்த நிகழ்வை நமது பிரதமர் அதிகமாய் பேசியிருப்பது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தான் தவிர... அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியோ, அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ அல்ல..

இதுவரை சுதந்திர இந்தியாவில் மக்கள் மத்தியில் தேசம், தேசபக்தி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தனித்துவமாய்.. உணர்வுப்பூர்வமாய் இருந்து வந்தது.. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது அரசியலாக்கப்பட்டு யாரு யாருக்கு எவ்வளவு தேசபக்தி என அளவீடு செய்து கொண்டிருக்கிறார்கள்..... அபத்தமாக ... 😰😰

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Tet exam announced by trb see official website

    ReplyDelete
  3. tet yaru ketom...pg trb thana ketom.....athu varuma therilaye

    ReplyDelete
    Replies
    1. PG vacancies iruku, so 99% exam varum.. Padinga sir, all the best..

      Delete
    2. thank u mam.but tet vera vachutanga....ipo veetla padika solvanga...alrdy trb padichunu iruken orey confused ah iruku

      Delete
    3. If u had already cleared TET plz don't waste you money and time. TRT means u can try.. Else its better to focus pgtrb sir..

      Delete
  4. ano mam pg trb varuma varatha

    ReplyDelete
  5. Vevarama exam dates will br announced later nu pottu notification kuduthrukanga.. Anyways all the best for upcoming candidates..

    ReplyDelete
    Replies
    1. Mam last tet clear pannavagaluku onnumae sollala.

      Delete
    2. No mam, last year clear panavangaluku TRT dha varum, venumna marks improvise pana again eludhalam.. So its up to the candidate.

      Actually ipo applications sale la kollaiyadikka dha indha TET

      Delete
    3. You are welcome mam, neenga shortfall vacancies ku vara pora TRT ku concentrate panunga..

      Delete
  6. Tet markku important irukkuma mam illa just pass pothuma mam

    ReplyDelete
    Replies
    1. TET mark ku kandippa certain percentage kuduppanga, aana adha vida TRT ku importance and weightage irukum so TET pass irundhaley podhum.. Ipo smart work pana vendiyathu TRT ku dhan..

      Delete
    2. Thank you so much mam

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...