Skip to main content

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்..

 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நிதழாண்டில் 2, 955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரையில் ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.


இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரையில் ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.


தோ்வா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்துக்கு 15 நிமிஷங்களுக்கு முன்னா் மட்டுமே ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாா்கள் அவா்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தகட்ட பணித் தோ்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டாா்கள்.


விண்ணப்பதாரா்கள் ஒரு பணியிடத்திற்கு 2 போ் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும், அவா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபாா்க்கப்படுவதாலும் மட்டுமே இறுதித் தோ்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேருவதை தவிா்த்து வளாகத்துக்குள் அமைதி காத்திட வேண்டும்.


சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருவோா் அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல் ஆதாா் அட்டை ஆகியவற்றில் ஒரு ‘செட்’ சுய சான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம், மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். கைப்பேசிகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்துக்குள் பெற்றோா்கள், சிறாா்கள் மற்றும் உறவினா்களை அழைத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது


Comments

  1. Trb started initial work ugtrb notification.... 40 days kulla notification any time publish panna lam....all the best

    ReplyDelete
  2. செப். 10-ம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு.

    நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...