Skip to main content

எதுவும் செய்யாமல் இருப்பது தீர்வு அல்ல..


*நமது தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ ஏதாவது பிரச்சனை வந்தால் ஒதுங்கிக்கொள்வது நல்லது என்றே நினைப்போம்..*


*நெருக்கமானவர்களிடம்பிரச்சனை வந்தால் ஏதும் பேசினால் சண்டை வந்துவிடும் என்று பேசாமல் இருந்து விடுவோம்.* *ஆனால் இது பிரச்சனைக்கான தீர்வல்ல. எந்த பிரச்சனை என்றாலும் முறையாக பேசி அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடியுங்கள்.*


*ஏன் வம்பு என்று ஒதுங்கினால், பின்னர் அந்த பிரச்சனையே பெரிதாகிவிடும்...*


*பசியின் கொடூரம் உணருங்கள்...!*

*தோல்வியைத் தழுவிக் கொள்ளுங்கள்...!*

*துரோங்களைக் கடந்து செல்லுங்கள்...!*

*எதற்காகவாது கதறி அழுங்கள்...!*

*எவரையாவது கை தூக்கி விடுங்கள்...!*

*விரும்புபவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்...!*

*உயிர் உருகக் காதலியுங்கள்...!*

*இழப்பின் வலியுணருங்கள்...!*

*இவையனைத்தையும் செய்யுங்கள்...!*

*இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....*


*சோதனைகள் மனிதனின் மனவளம் கூட்டும்..!வெற்றிகள் அவனது தலைக்கனம் கூட்டும்..!தோல்விகள்.. அவனை அடையாளம் காட்டும்..!சிந்தனைகள்.. அவனுக்கு நல்வழி காட்டும்..!!*


*வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..*


*முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..*


*குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்..*


*மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்..*


*அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்...*


*சண்டை உண்டாகுமளவிற்கு தேடல் விவாதத்தை தொடராதீர்கள்...*


*அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்...*


*பலிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்...*


*மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்...*


*கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....*


*நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு..* 


*நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு....*


*நேரங்கள் நேர்மையானவை..*

*அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை*

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. mam Tamil major 101.81job kiddaikuma mam please reply

    ReplyDelete
    Replies
    1. 100+ so chances iruku, it also depends on ur community..

      Delete
  3. விரைவில் டிஆர்டி

    ReplyDelete
  4. போராட்டம் செஞ்சு டிஆர்டி ஐ உறுதி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. BC community female mam

    ReplyDelete
    Replies
    1. Bc konjam kastam dhan bt still women's quota la possibility iruku, stay confident. All the best mam..

      Delete
  6. பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபாரிப்பு: 100க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...