Skip to main content

எதுவும் செய்யாமல் இருப்பது தீர்வு அல்ல..


*நமது தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ ஏதாவது பிரச்சனை வந்தால் ஒதுங்கிக்கொள்வது நல்லது என்றே நினைப்போம்..*


*நெருக்கமானவர்களிடம்பிரச்சனை வந்தால் ஏதும் பேசினால் சண்டை வந்துவிடும் என்று பேசாமல் இருந்து விடுவோம்.* *ஆனால் இது பிரச்சனைக்கான தீர்வல்ல. எந்த பிரச்சனை என்றாலும் முறையாக பேசி அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடியுங்கள்.*


*ஏன் வம்பு என்று ஒதுங்கினால், பின்னர் அந்த பிரச்சனையே பெரிதாகிவிடும்...*


*பசியின் கொடூரம் உணருங்கள்...!*

*தோல்வியைத் தழுவிக் கொள்ளுங்கள்...!*

*துரோங்களைக் கடந்து செல்லுங்கள்...!*

*எதற்காகவாது கதறி அழுங்கள்...!*

*எவரையாவது கை தூக்கி விடுங்கள்...!*

*விரும்புபவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்...!*

*உயிர் உருகக் காதலியுங்கள்...!*

*இழப்பின் வலியுணருங்கள்...!*

*இவையனைத்தையும் செய்யுங்கள்...!*

*இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....*


*சோதனைகள் மனிதனின் மனவளம் கூட்டும்..!வெற்றிகள் அவனது தலைக்கனம் கூட்டும்..!தோல்விகள்.. அவனை அடையாளம் காட்டும்..!சிந்தனைகள்.. அவனுக்கு நல்வழி காட்டும்..!!*


*வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..*


*முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..*


*குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்..*


*மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்..*


*அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்...*


*சண்டை உண்டாகுமளவிற்கு தேடல் விவாதத்தை தொடராதீர்கள்...*


*அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்...*


*பலிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்...*


*மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்...*


*கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....*


*நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு..* 


*நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு....*


*நேரங்கள் நேர்மையானவை..*

*அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை*

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. mam Tamil major 101.81job kiddaikuma mam please reply

    ReplyDelete
    Replies
    1. 100+ so chances iruku, it also depends on ur community..

      Delete
  3. விரைவில் டிஆர்டி

    ReplyDelete
  4. போராட்டம் செஞ்சு டிஆர்டி ஐ உறுதி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. BC community female mam

    ReplyDelete
    Replies
    1. Bc konjam kastam dhan bt still women's quota la possibility iruku, stay confident. All the best mam..

      Delete
  6. பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபாரிப்பு: 100க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...