Skip to main content

எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே!

உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு  இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும்  உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல்  வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!

Comments

  1. Happy teachers day ano sis

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய ஆசிரிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Thank u sir wish u d same to all

    ReplyDelete
  4. Good evening Ano Mam and happy teachers day

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..