உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும் உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல் வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Good morning mam
ReplyDeleteHappy teachers day ano sis
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteThank u sir wish u d same to all
ReplyDeleteGood evening Ano Mam and happy teachers day
ReplyDelete