Skip to main content

Posts

TODAY'S THOUGHT..

 *மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.* *மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.* *இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.* *உங்கள் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர். அது உங்களை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.* *ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.* *ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்குங்கள்.* *பயம் உங்களை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடுங்கள்.* *ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப...

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!

    ஒரே பள்ளியில் 10,20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் ( பூஜ்ய கலந்தாய்வு ) இடமாறுதல் ஆகிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!

இன்றைய சிந்தனை..

திறக்கப்படாத பூட்டே கிடையாது.. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.. எல்லாமே நம்மால் முடியும் சிந்தனையில் தெளிவும் கூர்மையும் இருந்தால்... ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் நீர் பாய்ச்சும்  வேளையில் தொலைத்து விட்டார்.  அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு பரிசளித்த கைகடிகாரம்.  அவர் அந்த இடத்தை சுற்றி தேடி   பார்த்து விட்டார், அவருக்கு அந்த   கைகடிகாரம் கிடைக்கவில்லை.  நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக்   கொண்டு இருந்தனர். அவர்களை   அழைத்து தன் கைகடிகாரம்   தொலைந்துவிட்டது , அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார்  கொட்டகைக்குள் சென்று தேட  ஆரம்பித்தனர் . சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே  வந்து தங்களால் கண்டுபிடிக்க  முடியவில்லை என்று சொல்லிவிட்டு  கிளம்பிவிட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும்  வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு  கொடுங்கள் நான் தேடி தருகிறேன்  என்றான். விவசாயியு...

ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை... அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

    ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! தமிழகம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது; பாகுபாடு காட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இறைவன் வகுத்த நியதி..

  "ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.. இதோ அதற்கு ஓர் உதாரணம்: அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்....

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

    போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும்போது என்னென்ன முறைகளைப் பின்பற்றுவது? படிக்கும்போது நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் நிர்வகிப்பது என்பதற்கான வழி முறைகள்.... தேர்வுகளுக்குத் தயாராகும்போது, நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் இருந்து, நமது வெற்றிக் கான பாதை தொடங்குகிறது. எனவே நேர மேலாண்மை குறித்த புரிதல் வேண்டும். இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 24 மணி நேரத்தில், நாம் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்தையும் குறித்த ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது சிறந்தது. விளையாட்டு, உறக்கம், உணவு இடைவேளை, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடுதல் வேண்டும். நேரத்தைத் தேவையில்லாமல் எதில் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து, பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தால் வீணாகும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். பிடித்த துறை எது? என்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு போட்டித் தேர்வுகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு அறிவித்த பின்பு படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், தினசரி படிப்பதை வழக்கமாக வைத்திருத்தல் அவசியம். எல்லோருக...

அன்பளிப்பு..

                 “பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு ! அப்போது அவருக்கு வயது 11 ;  அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான் ! அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் ,  அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம். அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் : “எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ;  ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார்.  ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன்.  அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால்,  வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான். அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார். பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List) வெளியீடு!!!

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List) வெளியீடு!!!   CLICK HERE TO DOWNLOAD- PDF-

சில குறைக்குடங்களுக்கு..

ஒரு விமானத்தில், தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்..., தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை.... அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!! உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு, என்ன மாதிரி கேள்விகள்.....? என்று சிறுமி கேட்டாள்.....!! கடவுளைப் பற்றியது.....!! ஆனால்..., கடவுள், நரகம், சொர்க்கம், புண்ணியம்,பாவம் என எதுவும் கிடையாது....!! "உடலோடு  இருக்கும் வரை உயிர் .....!! "இறந்த  பிறகு என்ன"......? தெரியுமா  என்றார்....!! அந்த சிறுமி யோசித்து  விட்டு........ , "நானும் பதிலுக்கு சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள். ஓ எஸ்..! "தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!! ஒரே மாதிரி  புல்லை தான்....., பசு,மான், குதிரை, உணவு எடுத்து கொள்கிறது.....!! ஆனால்  வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் ?வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது......!!! "பசுவிற்கு சாணியாகவும்",,,,, "மானுக்கு சிறு உருண்டை யாகவும்"......, "குதிரைக்கு  கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".......

TRB - special Teachers Reserved Provisional Selection List And Certificate Verification List Published.

    As per the Notification No.05/2017 published on 26.07.2017, the Board conducted Written Competitive Examination for the Direct Recruitment of Special Teachers on 23.09.2017 and results were published on 14.06.2018. The provisional selection list for the notified vacancies for Special Teachers in the above notification No.5/2017 was published on 12.10.2018. As per Hon’ble Madurai Bench of Madras High Court WP(MD) No.21962 of 2018, Judgement dated 04.12.2018 revised Tentative Provisional selection list for Sewing subject was published on 09.09.2019 in which 31 turns were reserved for Court cases. In order to expedite the recruitment process and to avoid multiple rounds of certificate verification and delay, the Board decided to ascertain the veracity of the claim made by the candidates in their application, before calling them for Certificate Verification in 1:2 ratio for specific reservation turn such as PSTM, PWD, DW, Ex-servicemen and accordingly copies of the relevant ce...

TODAY'S THOUGHT..

எண்ணங்களை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்று தெரிகிறது. ஆனால், அதை அன்றாட வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் மறந்துவிடுகிறோம். எல்லா எண்ணங்களும் நல்லவை என்று நம்பிவிடுகிறோம். மோசமான எண்ணத்துக்கான மோசமான பலன்கள் வரும்போது, “இது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். நம் எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெரும் காரணிகள் என்றால் அதை ஏன் கவனித்துச் சீராக்கத் தவறுகிறோம்?* *எதை வேண்டாம் என்று யோசிக்கிறோமோ அதுதான் கரு. ஆகக் கூடாது என்பது உள் நோக்கம். ஆனால், மனத்தின் கற்பனை ஓட்டத்தில் நிகழ்வது எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுதான். அது உள் மன ஆற்றலிலும் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் இந்தச் செய்தியைப் பலமாகக் கொண்டுசெல்கிறது. அது நடப்பதற்கான சூழலை உங்கள் மனம், உடல், உங்களைச் சுற்றிய பிரபஞ்ச சக்தியும் ஏற்படுத்தும். மிக எளிய அறிவியல் உண்மை.* *உங்கள் எண்ணம் ஒரு படமாகத்தான் உள்மனத்தில் பதிவுசெய்யப்படுகிறது. அச்சு எழுத்துகளால் அல்ல. அதனால் காட்சி வடிவத்துக்கு உண்மையா பொய்யா, நன்மையா தீமையா என்ற பாகுபாடு கிடையாது. எண்ணங்களைக் கற்பனையில் சம்பவங்கள்போல ஓட்டிப் பார்ப்பது மனத்தின் வ...

ஆசிரியர் பணி வயது வரம்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

  தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். வயது வரம்பு: தமிழகத்தில் 1990 வரை படிப்பு, பணிமுன் அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட வயது மூப்பு சான்றிதழ் அடிப்படையில் அரசுப்பணிகளில் தகுதியானோர் நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் பணிகளுக்கும் அவ்வாறே தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின் வயது வரம்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். 2012 முதல் எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. இத்தகைய பணி நியமன முறையில் 57 வயது நிரம்பியவர்களும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் கடந்த 31.01.2020 அன்று ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கி 45 வயதாகவும் நிர்ணயம் செய்து பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரி அவர்...

முட்டாள்க் கூட்டம்..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டத...

11.10.2021 நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

  பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.10.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.10.2021 அன்று நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் கூட்டத்தில் ஒப்படைக்குமாறும் அதன் நகலினை சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் ( c3sec.tndse@nic.in ) அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள்...

பள்ளி கல்வித்துறையில் பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் புதியதாக பூஜ்ஜியக் கலந்தாய்வு என்ற நிகழ்வு அரங்கேர உள்ளது. அப்படியானால் பூஜ்ஜியக் கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பது பற்றி ஒரு பார்வை. முதலில் அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும். பின்னர் EMIS மூலமாக பணியிட வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இணைய வழி மூலம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நாளன்று கலந்தாய்விற்கு முன்னர் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும்.   பணிமூப்பு பட்டியலின் படி கலந்தாய்விற்கு நபர்கள் அழைக்கப்படுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு காலிப்பணியிடங்கள் திரையில் தோன்றும். அதில்  தற்பொழுது அவர்கள் பணிபுரியும் இடம் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலாத வகையில் (disable) மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் விரும்பும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம். கலந்தாய்விற்கு முன்னர் கலந்தாய்வு விதிகள் வெளியிடப்படும். அதில் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தில் பணிபுரிபுவர்களின் மனைவி, புற்றுநோய்,இதயநோய் போன்ற மிகவும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்படலாம்....

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன. நாள் : 11.10.2021 இந்நிலையில் அரசாணை எண் . 82 , நாள் 16.08.2021 ன்படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் ( PSTM ) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Attitude..

Attitude என்றால் என்ன???? ஒரு விளம்பரம். Attitude குறும்படம்.பத்து செகண்ட்தான். ஒரு பெண் மாடல் மேடையில் நடந்து வருகிறாள். மிகவும் அழகு. பொம்மை போல. அவள் தான் வெற்றி பெறுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். unfortunately, பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள். மொத்த பார்வையாளர்களும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள். அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது. ஒரே ஒரு செகண்ட்தான். தன் கையை தானே மகிழ்ச்சியாக தட்டிக் கொண்டாள்,, மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள். பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு. இது தான் Attitude. கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே அது Attitude. சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது. அப்பா இறந்து இரண்டு நாள்தான். அஸ்தி கூட கரைக்கவில்லை. South Africa test ல் ஆட வேண்டிய நிர்ப்பந்தம். சென்றவர் Doub...

டெட் தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது

தொலைந்து போன முகவரிகள்..

எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே! உன் முகவரியை வெளிக்கொணர படு பிரயத்தனம் செய்ததில் தொலைந்து போன எம் முகவரிதான் என்ன? பாடப்பகுதிகளை இலகுவாக்கி உன் பாணியில் போதிப்பதே எம் பணியானதென்ன? பள்ளிக்கு நீ வாரா பொழுதுகளில் உன் இல்லம் வந்து கட்டியிழுத்து கொணர்ந்தாலும் பல நேரங்களில் பூட்டிய உன் வீட்டின் கதவுகளும் எமை பரிகசிப்பதுதான் என்ன? ஆடி மாதம்! குல தெய்வ வழிபாடு கூழ் வார்த்தல் பொங்கல் வைத்தல் அத்தனைக்கும் முன்னிலை வகிக்கும் உன் பெருந்தன்மைதான் என்ன? எதிர் வீட்டுப் பாட்டி இறப்பு! பக்கத்து வீட்டு அக்கா வளைகாப்பு! உறவுமுறை சொல்ல தெரியாத வீட்டில் காதுகுத்து! எல்லா சுக துக்கங்களிலும் உன் பங்கேற்றலை பெருமிதப்படுத்துவதுதான் என்ன? இதையெல்லாம் தாண்டி நீ பள்ளிக்கு வருங்கால் உன்னுடனே ஒட்டிவரும் தலைவலி, வயிற்றுவலி அதிகமாய் கொஞ்சம் நெஞ்சுவலி, உன் விடுப்பு  இன்னும் முடியவில்லை என்று எம்மை உணரவைதததுதான் என்ன? எம்மை பாவம் என்று நினைத்து நீ பள்ளிக்கு வரும் தருணங்களில் எதை புரியவைப்பது எப்படி படிக்க வைப்பது என்கிற அறப்போராட்டத்தில் எம்பெயர் கூட எம் நினைவினின்று மறந்து போவதுதான் என்ன? எழுத குறிப்பேடு வேண்டாம...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

  பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக பூஜ்யம் காலிப்பணியிடம் அறிவித்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு வரவேற்பு - ஆசிரியர்களுக்கும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை. மாநிலத்தலைவர் அவர்களின் பி.கே.இளமாறன் அறிக்கை :            பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கானஇட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கின்றேன்.      நேர்மையான நிருவாகத்திற்கும் கல்வித்தரம் உயர்வதற்கும் அரசியல்,பணம் ஆகியவையின்றி  மாறுதல் கலந்தாய்வு  கல்விஅதிகாரிகளுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வெளிப்படையான நிருவாகத்திற்கு வழிவகுக்கும்.   பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களுக்கு முன் உதாரணமாக அமையும்.      மேலும் இதுவரை  இயக்குநர் அவர்கள்தான் மாவட்டகல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுவந்தது. விரும்பும் இடங்களுக்கும் சொந்தஊருக்கும் செல்லமுடியாமல் சிரமம் இருந்தது.தற்போது பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல...

THOUGHT OF THE DAY..

 மன்னர் அசோகர் ஒரு முறை வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் ஞானத்துறவி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.. மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக துறவி ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று துறவியின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்து வணங்கினார்.. அவரது சிரம் (தலை) துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார் *"ஒரு மன்னன் ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?'* என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும்.. அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், _ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்_ *"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,''* என்றார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.. _என...

தமிழகத்தில் 4% பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி – யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை!

யுனெஸ்கோ நிறுவனம் இந்திய பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ள விவரங்களை விரிவாக இந்த பதிவில் காண்போம். யுனெஸ்கோ ஆய்வு: யுனெஸ்கோ நிறுவனம் இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையை குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல், கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் யுனெஸ்கோ நிறுவனம் இந்திய பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021ம் கல்வியாண்டுக்கான தமிழகத்தின் கல்வி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் 2018- 2019ம் கல்வியாண்டில் மாவட்ட அளவு புள்ளி விவரங்களின் படி, ஆசிரியரும் இல்ல...

TODAY'S THOUGHT..

  "தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல், "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே, " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது...

News about age relaxation..

B.Ed படித்த பிறகு கூடுதலாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

    பி.எட் படித்த பின்பு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பரிதவிக்கும் சூழல் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான தேர்வுகள் நவம்பர் 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 17-ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்போர் முதுநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும். இதில், இளங்கலையில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்த பிறகு, கூடுதலாக இளங்கலை அல்லது முதுகலை படித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததால், தகுதியுள்ள பலரும் பரிதவிப்பில் உள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறும்போது, “நான் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு மேலாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் விண்ணப்பிக்க முடியவில்லை. என்னைப்...