எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே!
உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும் உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல் வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!

Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeleteNovember monthkula transfer councling vaika chances iruka mam,
ReplyDeleteChances iruku sir..
DeletePGTRB போல் TET தேர்ச்சி பெற்றாலும் நியமன தேர்வை எழுத முடியாது. 40 வயதை கடந்தவர்கள் நியமனத் தேர்வை எழுத முடியாது. நியமன தேர்வு அரசானை விரைவில்.......
ReplyDeleteதினஇந்து - 11.10.21
Vaaippu illa.
DeleteAppo edhukku
life time validity kuduthaanga.
TET ku venumna sollalaam.
Aanaa niyamana thervukku
solla maattaanga.