Skip to main content

TODAY'S THOUGHT..

 ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்.


வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.


ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான்.

'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.

அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.


என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.


தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

நம்புங்கள்!! 


"முயற்சி திருவினை ஆக்கும்"..

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam, 2013 tet pass panni certificate verification muduchurke...na new ah community certificate vangalama? online la

    ReplyDelete
    Replies
    1. Yarathu reply panuga pls

      Delete
    2. Ippo Online ceticate thaan ellathukkum kekuranga.. Palaya card la varra certificate not valid now.

      Yerkanave muditha cv kku onnum problem illa... Puthusa online la certificate vaangikolvathu nallathu

      Delete
    3. Aj sir /mam..

      Since you have completed CV it not needed, bt still for your reference apply it online and get a copy..

      Delete
    4. Tq mam and selva sir

      Delete
  3. Admin mam neenga tet ku apply panniyacha

    ReplyDelete
  4. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

      Delete
    2. நல்லா வேணும்

      Delete
    3. What will happen to them mam.

      Delete
    4. They won't be sent from govt job, increments might be kept on hold..

      Delete
  5. **TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு **

    நமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி

    முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நடைபெறும் மாபெரும் நிகழ்வு.....

    அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்....


    **நிகழ்வு இடம் அறிவிப்பு **


    **தேதி : ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை **

    அனைத்து TET ஆசிரியர்கள் குழுக்களும் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வானதால் கடற்கரை அருகாமையில் பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன....

    100மீட்டர்,150 மீட்டர் இடைவெளியில்



    அதில் நமக்கு ஒதுக்கப்பட்ட இடம் : **சென்னை பல்கலைக்கழகம் ** வளாகம்.

    **Madras university **

    **Madras university ** கேட்டு வரவும்.


    நேரம் : சரியாக காலை 9.00 மணி

    அனைத்து ஆசிரியர்களும் வந்து சேர்ந்த பின் அனைத்து குழுக்களும் ஒரே இடத்தில் இணைந்த பின் நிகழ்வு ஆரம்பிக்கும்

    **முக்கிய அறிவிப்பு **

    **நினைவூட்டல் **

    1. TET சான்றிதழ், நகல்

    2. காலை, மற்றும் மதிய உணவு ( செலவு மிச்சமாகும் )

    அதிகம் இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்தால் நன்று.

    தானத்தில் சிறந்த தானம் **அன்னதானம் **

    மறக்காமல் 1 லிட்டர் தண்ணீர் bottle.

    3. **குடை ஓன்று ** கண்டிப்பாக கொண்டு வரவும்

    அனைவரும் குடை பிடித்தால் அதிக எண்ணிக்கை காட்டும், மற்றும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.


    4.குழந்தைகளை கொண்டு வரும் ஆசிரியர்கள் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள்

    6. Paste, Towel, one set dress, mobile charger, power Bank.

    7. மருந்து மாத்திரைகள், ஏதேனும் தேவை எனில்.....

    8. தவறாமல் மிகமுக்கியமாக தங்கள் மாவட்டத்திலிருந்து குறைந்தது 5 ஆசிரியர்களின் தொடர்பு எண்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


    9. சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்வுகள் மாறலாம், whats app குழுக்களில் அறிவிக்கப்படும்

    குழுக்களில் இணைந்திருங்கள்


    இவண்.
    அல்டாஸ்
    சமூக
    ஊடகப்பிரிவு

    TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.

    ReplyDelete
  6. TRT GO 149 ஐ போராட்டத்தின் வழியே அரசை பின் வாங்க வைத்து விட்டால், தமிழகத்தின் மிக வலிமையான ஆசிரியர் சங்கமாக இந்த சங்கம் மாறும்

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள்

      Delete
    2. வா போட்டி தேர்வில் மோதி பார்ப்போம் paper 2 மூன்று முறையும்,paper 1ல் மூன்று முறையும் வெற்றி பெற்று, trt syllabus படிச்சி முடிச்சிட்டு wait பண்ணிட்டு இருக்கேன் வா,

      Delete
    3. நீங்கள் 3 முறை தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் எனில் முதல் முறை 2012 ல் தேர்ச்சி பெற்று இருந்தால் வேலைக்கு சென்றிருக்கலாம்

      Delete
  7. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் .

    ReplyDelete
  8. Hai mam,I am also preparing for TRT exam.please send the books pdf to ug trb syllabus related topics.It will be very useful for us.

    ReplyDelete
    Replies
    1. Dear Unknown frnd..

      Sure I'll post the syllabus related topics, am working on it..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...