Skip to main content

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது.


அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.


கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.


அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.


‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.


உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.


இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன.

கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை

வந்தது பிடிக்கவில்லை.


‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.

புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.


நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.


அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம்,

நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது.


‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித்தவளை.

ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.


‘இந்தக் கிணற்றைப் போன்று பல மடங்கு பெரிய நீர் நிலை.அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.


‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.


‘இந்தக் கிணற்றைவிட மிக,மிகப் பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.கிணற்றுத் தவளை ஏரித் தவளை சொல்வதை நம்பவில்லை.


‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய்.எங்களுக்கு நன்றாக தெரியும்.இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது’ என்றது.


ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,

கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.


எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து,


‘நீ     பொய்யன்,புரட்டன்,உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையை எல்லா கிணற்று தவளைகளும் தாக்க முயன்றன.


"இந்த முட்டாள்களோடு இனியும் விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல" என்று நினைத்த ஏரித்தவளை உடனே கிணற்றை விட்டு வெளியேற நினைத்தது.


அப்போது,


கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கியபோது, அதனுள் சட்டென்று தாவிச்சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.


தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.


ஆம்,நண்பர்களே.,


*முட்டாள்களிடம் வாதாடுவதை விட,அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்தது..*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. டிஆர்டி வர வாய்ப்பு இல்லை. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. Please don't confuse us.

      Delete
    2. Yaaruya neenga epdi sodringa

      Delete
    3. Kuzhappa vathikal kuzhapi konde iruparkal so pls padinga friends bcos syllabus very tough so namaku material collect pannave time poidum so be prepare.nadavadikkaikal eduthal nallathu nadanthal santhosam athuku yen nama padikama irukanum padithal subject knowledge increase agum enaku ellam touch ye illa so useful ah irukum padikira velaiya parunga UG maths material irunthal sollunga

      Delete
  3. Admin mam..
    D.t.ed + B.A (Tamil)..
    Tet paper 2 elutha eligible ah!
    (Paper 1 already pass)

    ReplyDelete
    Replies
    1. D.ted Plus B.Lit Tamil only eligible

      Delete
    2. Notification la graduation with elementary education paper 2 eligible iruke athan keten sir

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...