Skip to main content

TODAY'S THOUGHT..

நாம் வாழ்வதற்குப் பிறந்தோம் என்று சொல்கிறோம். இந்த வாழ்க்கை என்றால் என்ன? இதை நாம் எப்படி அமைத்துக் கொண்டால் வெற்றி பெறலாம் என்ற வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி நாம் வாழ வேண்டும்.


வாழ்க்கை என்பது குடை போன்றது. அதில் வெயிலும், மழையும் உண்டு. மேடுகளும், பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை. 


இதில் சுகங்களை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் சலிப்பு ஏற்பட்டு விடும். 


சோகங்களை மட்டும் அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் தளர்ச்சி ஏற்பட்டு விடும். 


இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் ? என்று ஒரு அறிஞரிடம் கேட்டதற்கு செயல் விளக்கம் கொடுத்தார். 


மேஜையில் மூன்று கண்ணாடிக் குவளைகளை தண்ணீருடன் வைத்தார். அதற்குப் பக்கத்தில் மூன்று பொம்மைகளையும் வைத்தார். 


முதல் பொம்மை களிமண்ணாலும், இரண்டாவது பொம்மை பஞ்சாலும், மூன்றாவது பொம்மை சர்க்கரையால் செய்யப்பட்டவை..


*முதல் வகை மனிதர்கள்....*

....................................


முதல் பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். அது தானும் கலங்கி தண்ணீரையும் கலக்கி அசுத்தப்படுத்தி விட்டது. 


இவர்கள் தன்னையும் கலக்கி மற்றவர்களையும் கலக்கி விடுவார்கள். இவர்கள் குழப்பவாதிகள், 


*இரண்டாவது வகை மனிதர்கள் ..*

..................................


இரண்டாவது பொம்மையை எடுத்து தண்ணீரில் போட்டார். இது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி விட்டது. 


பக்கத்தில் இருப்பவர்கள் தனக்கு மட்டும் வேலை செய்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. இவர்கள் சுயநலவாதிகள்..


*மூன்றாவது வகை மனிதர்கள்.*

...................................


மூன்றாவது பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். இது தண்ணீரில் கரைந்து தண்ணீரை சுவையாக்கி விட்டது. 


மற்றவர்களுக்கு சேவை செய்து, மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள்  பொதுநலவாதிகள்..


மூன்றாவது வகை மனிதர்களைப் போல் வாழ வேண்டும் எனக் கூறினார்.


வாழ்க்கை ஒரு வாய்ப்பு. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


வாழ்க்கை ஒரு சவால். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 


வாழ்க்கை ஒரு தீரச்செயல். அதைச் சாதித்துக் காட்டுங்கள். 


வாழ்க்கை ஒரு போராட்டம்.அதை வென்று காட்டுங்கள். . 


வாழ்த்துகள்!!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Mam
    Ennoda qualification B. Litt, T. P. T.
    Nan 2017 la Tet paper 2 pass paniruken.
    Try vandha na elutha mudiyuma???
    Mam plz reply🙏🙏🙏

    ReplyDelete
  3. Replies
    1. Mam as of now neenga padinga, unless and until trb authentic ah solra varaikkum eligibility pathi endha decision yum edukk venam.. Don't panic, stay confident..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...