Skip to main content

நூறு ஒட்டகங்கள்..

பிரச்சனைகளே இருக்கக் கூடாது என மனிதனாய்ப் பிறந்த யாரும்… ஏன்? உயிர்கள் ஏதும் நினைத்து விட முடியாது… 


உயிர்களாகப் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதேதோ வழிகளில் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்.. 


அதை யாரும் இல்லாமல் செய்ய இயலாது. ஆனால், மனிதனாய்ப் பிறந்த நாம் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தீவிரம் அமைகிறது..


வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்புக் குறைவே..


ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...சில பிரச்சனைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்.. 


ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...


அனைத்துப் பிரச்சனையும் முடிந்தால் தான் நிம்மதியாகத் தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது..


பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்....


எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே ஒரு அறிஞர் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது  மாலை நேரம்..


அய்யா."நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..


என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.. இதில் இருந்து விடுபட ஏதாவது ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் என்றான் அந்த அறிஞரிடம்..


அவர் அவனிடம் "தோட்டத்திற்குச் சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன எனப் பார்த்து விட்டு வா" என்றார்.


சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.


"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்துத் தூங்கி விட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..


"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்குப் போனவன் கண்களில் தூக்கம் இன்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. என்றான்.. 

"என்ன ஆச்சு?" என்றார் அந்த அறிஞர்..


"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்து விட்டன..சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டுப் படுக்க வைத்தேன். அனைத்து ஒட்டகத்தையும் 

ஒரு சேர என்னால் படுக்க வைக்க முடியவில்லை.


சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்க வைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்குப் போகவே இல்லை" என்றான்.


அந்த அறிஞர் சிரித்தபடியே, 


"இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது என்றார்..


நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது..


*ஆகவே , சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு,* 

*வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.*

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning mam.M.SC BED.COMPUTER SCIENCE. TNTET PAPER 1 &PAPER 2 WRITE PANNALAMA

    ReplyDelete
    Replies
    1. Good Morning Unknown frnd..

      There is nothing mentioned about specialization of ug courses, so you can apply..

      Delete
  3. Friends enaku neriya message anupiranga .....file cm office la iruku....cm office la Enna nadakuthunu enaku theriyathu....cm office la irunthu DPI office Ku letters vantha than enaku teriya vaippu..... minimum cm office la oru file complete Panna 10 to15 days agum....entha time budject start aguthu...so trt file late agum....may be budject la direct ah announce Panna vaippu iruku....

    ReplyDelete
  4. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியிலிருந்து மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    ReplyDelete
  5. https://youtu.be/sX_Jkm82wFk

    ReplyDelete
  6. ”பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” - அமைச்சர் அன்பில் மகேஸ்

    ReplyDelete
  7. இல்லை என்றால் உடனே முடிவு எடுத்து விடுவார்களா ?இப்படியே போனால் போகட்டும் போடா என்று கூறி விடைபெற்று விடுவோம் போல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..