Skip to main content

இன்றைய சிந்தனை..

 

என்னிடம் ஒரு கைத்துப்பாக்கியும்
மூன்று குண்டுகளும் இருந்தன...


முதல் குண்டை என் அப்பாவின் நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்...


நெற்றியைத் துளைத்து மூளையைக் குடைந்து பின் மண்டையைப் பொத்தலிட்டு குருதியோடு சிதறி அவரின் கண்கள் பிதுங்க என் கண்களை உற்று நோக்கியே சரிந்தார்...


இரண்டாம் குண்டை என் அம்மாவின் நெஞ்சில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்...


இதயத்தைத் துளைத்து முதுகின் வழியாய் பொத்தலிட்டு இதயத்தின் திசுக்களோடு ஒட்டிக் கொண்டு அவள் சரிய விரல்களால் என் கையை தடவியப்படியே சரிந்தாள்..

மூன்றாம் குண்டை என் நாவு நனைக்கும்
உமிழ்நீர் எச்சிலோடு துப்பாக்கியின் குழலை உள்ளீட்டு ஒரு அழுத்து
அழுத்தினேன்...


என்னுடைய பின் மண்டையோட்டின்
வழியாக துளைப்பதற்கு முன்
மூளையின் கடைசிப் பதிவான
" அம்மா " வென அலறியே சரிந்தேன்...


இரண்டுக் கொலையும் ஒரு தற்கொலையும் நடந்தேறியது...


நான் சுட்ட முதல் குண்டின் பெயர்
" சொல் கேளாமை"...


நான் சுட்ட இரண்டாம் குண்டின்
பெயர் " தாய்பாசம் அறியாமை" ...


நான் சுட்ட மூன்றாம் குண்டின்
பெயர்  " சுயமதிப்பை உணராமை"...


நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியின்
பெயர் தான் " வாழ்க்கை"...


உங்களிடமும் கைத்துப்பாக்கியும்
குண்டுகளும் இருக்கின்றன....


விரல்களால் அழுத்தப் போகிறீர்களா அல்லது உள்ளங்கைகளால் வைத்து அதை உணரப் போகிறீர்களா? நீங்களே நன்றாக சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...


கதையின் நீதி :-

நாம் எதிர்பார்த்த மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் அமையாது, ஆனால் நம்ம முயற்சி பண்ணினால் கண்டிப்பாக நம்ம எதிர்பார்த்த மாதிரி நம்முடைய வாழ்க்கையை மாற்ற முடியும்...

உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள். 

பெற்றவர்களின் பாசத்தில் கோபம் இருக்குமே தவிர துரோகம் இருக்காது...

இது தான் உண்மை √

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Pg exam date,poly technic exam date pathi deepawali muditha pin soluvangala mam

    ReplyDelete
    Replies
    1. Sir..

      Innum application issues sari agala pola, so seekirame trb inform pannuvanga.. Very soon..

      Delete
  3. டெட் தேர்ச்சி பெற்ற நம்முடைய நிலைமை எந்த அரசுக்கும் புரியவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here