Skip to main content

SUNDAY'S THOUGHT..

*ஒவ்வொரு முறை தோற்கும் போதும் கவலைப்படாதீர். ஒவ்வொரு தோல்வியும் நீங்கள் முயன்றதற்கான அடையாளம்.*


*ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கொரு அனுபவம். ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கொரு வெற்றிப்படி.*


*குழந்தைகளின் மனதைப் போல் மனம் இருந்திருந்தால் ஒன்றும் புரியாமல் சிரித்துக் கொண்டே வாழ்ந்திருக்கலாம்.*


*உள்ளே கொதித்து வெளியே புன்னகைத்து வாழும் வாழ்க்கை. பழகிப் போனது மனிதரிடம்....!!*


*சிலரோடு ஒப்பிடும் போது நாம் வெற்றியடைந்திருப்போம். சிலரோடு ஒப்பிடும் போது நாம் தோல்வி அடைந்திருப்போம். யாரோடும் ஒப்பிடாத வாழ்வில் மட்டும் நாம் மகிழ்ந்திருப்போம்.*


*அறியாதது  அறிந்து வைத்திருப்பதே அறிவு. தெரியாதது தேடித் தெரிந்து கொள்வதே தெளிவு..!!*

*ஏமாற்றங்களை விட துரோகம் சிறிது ஆச்சரியத்தைத் தருகிறது."எப்படி இவ்வளவு தத்ரூபமாய் நடிக்க முடிகிறது இவர்களால்? என்று.*


*செல்வத்தை சேர்க்கும் பயணத்தில் நிம்மதி, அமைதி மகிழ்ச்சி, நேர்மை, கருணை, அன்பு, இரக்கம் இன்னும் பலவற்றைப் பலரும் இழந்து விடுகின்றனர்.*


*யாருமே குறை காணக்கூடாது என்று நினைப்பவனால் எதிலும் ஈடுபட முடியாது...!!*


*உலகில் பலவும் பலருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்து விடவில்லை. முயற்சி, உழைப்பு போன்றவைகளால் அடைந்தவர்களே அதிகம்.*


*தன்னம்பிக்கை, மனவுறுதி, துணிவு போன்றவை கவலை, துன்பம் ஆகியவற்றை நீக்கும்.*


*பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன. இகழ்ந்து பேசினால் என்ன. காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இருங்கள்...*


*பாதை கடினமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக ஒருநாள் ஒளிமயமாக மாறும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை...*


*கத்தி முனையில் நடப்பதைப் போல கடினமாக இருந்தாலும்.. வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது...*


*எவன் ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானோ.. அவன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்...*


*முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்துப் போவான்...*


*முடங்கிக் கிடந்தால் முடக்கம். எழுந்து நடந்தால் பாதை. எதிர்த்து நின்றால் வாழ்க்கை. உறுதியோடு உண்மையாய் போராடுங்கள். உங்களை வெல்ல யாரும் கிடையாது...*

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. அறிவாந்தா ஆசிரியகள் உருவாக நியமன தேர்வு தேவை. அன்பில்

    ReplyDelete
  3. அந்த பேட்டில அப்படி தான் அன்பில் சொன்னாரு

    ReplyDelete
  4. தயவு செய்து அவருடைய பேட்டி சரியாக பார்க்கவும்.அதில் நியமனத்தேர்வு தேவை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார்.

    ReplyDelete
    Replies
    1. உங்க சவுரியத்துக்கு சொல்லாதிங்க

      Delete
  5. சரிப்பா காலாகாலத்துல தாலிய கட்டி சாப்பாட போடுங்கப்பா

    ReplyDelete
  6. Mam, pg geography tamil trb coaching centre and study materials detail need .

    ReplyDelete
  7. Friends pgtrb ku syllabus ellam padichu muduchacha
    Enakku romba payama irukku

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பயமா தான் இருக்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...