Skip to main content

இன்றைய சிந்தனை..

தவறுவது, தவறில்லை...


தவறுகளில் இருந்து கற்று கொள்ள தவறுவதே தவறு...


எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி....


எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்..


எனவே, நாம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் 

இருப்போம்...


எதையுமே யோசிக்காமல் சில நேரங்களில் சிலர் கோபப்படுவது... 


உரிமையின் வெளிப்பாடு...


எல்லாமே யோசித்து எதுவுமே பேசாமல் மெளனமாய் இருப்பது... 


உறவு நிலைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு...


மனசு சரியில்லை என்ற எண்ணம் தோன்றும் போது, மனம் சரியாக இருக்கிறது என்றே அர்த்தம்...


ஏனென்றால் எப்போதும் மனது தன் தவறை மறைத்து, யார் மீதாவது குற்றம் சாட்டுவதில் மிகவும் வல்லமை படைத்தது...


முள்ளை மிதித்து விட்டேன் என்ற உண்மையை மறைத்து, முள் தேடி வந்து குத்தியதுபோல முள்ளு குத்திவிட்டது என்றே சொல்லும்...


அதே போல தன்னிடம் இருக்கும் குறை, புரிதலில் வேறுபாடு போன்றவற்றைக்  கூட  ஒத்துக் கொள்ளாது...


யார் கிடைப்பார்கள் அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டு விடலாம் என்று இருந்து, உன்னிடம் இருக்கும் குறையை உனக்கே மறைப்பதில் மனத்தின் வல்லமை அதிகம்...


ஆனால்... தான்தான் சரியில்லை  என்று மனம் எப்போதாவது ஒத்துக் கொள்ளும்...


எப்போதெல்லாம் மனசு சரியில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் மனசு சரியாக இருக்கிறது...


எனவே, அனைவரிடமும் அன்பாய் அனுசரணையாய் பழகுவோம்...


*வாழ்க்கை வளமாகும்...*



Comments

  1. Wishing everyone a blessed Sunday..

    ReplyDelete
  2. கடைசில டெட் கதை முடிஞ்சுது

    ReplyDelete
    Replies
    1. Tet கதை முடிந்தது என்பதற்கு சான்றுள்ளதா...போகிற போக்கில் ஏதாவது பதிவிட்டுட்டுப் போவீர்களா.....அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில்லை என்று தற்போது கூறியுள்ளதா...சட்டமன்ற மானியக்கோரிக்கையில் சொல்லித்தான் ஒவ்வொரு ஆண்டும் பணிநியமம் வழங்கப்பட்டு வந்ததா
      ஆகஸ்ட் ஒன்றம் தேதி தான் பள்ளிகளுக்கு காவிப்பணியிட விவரம் கேட்டு கடிதம் வந்துள்ளது..கலந்தாய்வு நடந் பின்பு தானே உண்மையான Vacancy தெரியவந்து G.o போடுவார்கள்..

      Delete
    2. அடுத்த டெட் வரது ஏற்கனவே டெட் முடிச்சவங்களுக்குக்கு போஸ்டிங் இல்லனு சொல்ல சான்று தான

      Delete
    3. இதை விட வேற என்ன சான்று வேணும்

      Delete
  3. பொய்யாமொழியும் பொய்த்து விட்டார்

    ReplyDelete
  4. Tet pass pannathu waste..

    ReplyDelete
    Replies
    1. No frnd . 2023 வரை காத்திருப்போம்

      Delete
    2. வாழ்க்கையே காத்திருப்புல தான் போய்ட்டு இருக்கு

      Delete
    3. செங்கோட்டை = பொய்யாமொழி

      Delete
  5. Tet ku oru mudivu nichayama varum but mean time pg ku padinga..

    ReplyDelete
  6. பீஜி தேர்வாச்சும் வருமா மேடம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.